என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎஸ்சி குரூப் 4"

    • குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
    • 2026 குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு டிசம்பரில் நடைபெறுகிறது

    2024, 25ஐ தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு உத்தேச அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்விவரம் பின்வருமாறு;

    • ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் அல்லாத பதவிகள்) -  அறிவிக்கை வெளியிடப்படும் நாள் ; 20.5.2026 - தேர்வு நடைபெறும் நாள் ; 03.08.2026
    • ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு I (குரூப் I சேவைகள்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள்; 23.06.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 06.09.2026
    • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026 -தேர்வு நடைபெறும் நாள்; 20.09.2026
    • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்): தேர்வு அறிவிக்கை நாள்; 11.08.2026-தேர்வு நடைபெறும் நாள்; 25.10.2026
    • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 31.08.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 14.11.2026
    • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப் IV பணிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 06.10.2026- - தேர்வு நடைபெறும் நாள்; 20.12. 2026

    மேலும் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளவே இந்த ஆண்டுத்திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலியிடங்கள் அறிவிக்கையில் வெளியிடப்படும். பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆணையத்தின் வலைத்தளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன. இவை அறிவிப்பு வெளியிடப்படும் தேதி வரை மாற்றங்களுக்கு உட்பட்டவை. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தாண்டுக்கான குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

    "கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.12.2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025. 26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம்ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
    • சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

    சென்னை:

    குரூப்-4 பணிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

    ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணினிவழிதிரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர்- பழங்குடி இளைஞர்கள் ஆகிய பதவிகள் தவிர) www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) பிரிவு வாயிலாக நவம்பர் 7-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
    • 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.

    4,662 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின.

    கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

    இதில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ளன.

    தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற தேர்வாணைய இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
    • குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12-ந்தேதி தேர்வு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.

    குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தேர்வில் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வுக்கான Answer Key தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

    • 9 மணிக்கு தேர்வு எழுதுவதற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் தாமதமாகவே வருகிறார்கள்.
    • தற்போது 3925 காலி பணியிடங்கள் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை 14 லட்சம் பேர் எழுதினார்கள். 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது. சென்னையில் 316 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

    கைப்பேசி அல்லது ஏதேனும் மின்னணுக் கருவி, பென்டிரைவ், அறிதிறன் கைக்கடிகாரம் போன்ற நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கருவிகளை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

    தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சென்னையில் இன்று (சனிக்கிழமை) 94,845 பேர் தேர்வு எழுதினார்கள்.

    இரண்டு பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து மொழித் திறனை அறிவதற்காக 100 கேள்விகளும், பொதுஅறிவுப் பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.

    எழும்பூர் அரசு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பணிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வருவாய், ஆய்வாளர், வனகாவலர், வன பாதுகாவலர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வு தீவிர கண்காணிப்புடன் நடந்தது.

    தேர்வு நடைபெறும் முதல் நாளே வந்து மையங்களை தேர்வர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும். 9 மணிக்கு தேர்வு எழுதுவதற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் தாமதமாகவே வருகிறார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

    14 லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் அவர்களின் விடைத்தாள்கள் 2 வாரத்தில் திருத்தப்பட்டு 3 மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். குரூப்-1 தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளிவரும்.

    குரூப்-4 தேர்வில் கேள்விகள் யாரும் பதிலளிக்க முடியாத மாறுபட்ட அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகள் சில நேரங்கள் கேட்கப்படுவதால் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிறது.

    கேள்விகளை தயாரிக்கும் குழுவில் உள்ளவர்கள் அதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை அவர்கள் எடுத்து வந்தால் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.

    அரசு பணியில் சேர வேண்டும் என்ற மிகுந்த ஆசை, ஈடுபாடு இருக்கிறது.

    வேலை பாதுகாப்பு அரசு பணியில் இருப்பதால் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். தற்போது 3925 காலி பணியிடங்கள் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தேர்வு நடைபெறுவதால் காலியிடங்கள் இன்னும் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது.

    தேர்வுக்கான வினாத்தாள் இந்த ரகசியத்துடன் 2 கட்டமாக மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது அது முழுவதும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் தேர்வரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் தேர்வர்களுக்கு ஏற்படும். இழப்புக்கு தேர்வாணையம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

    • காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது.
    • தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது.

    காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.
    • இத்தேர்வினை எழுதுவதற்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.

    இத்தேர்வினை எழுதுவதற்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகள் 4,922 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 312 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறுகிறது.

    இந்த தேர்வில் மூலம் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும். சென்ற ஆண்டு முடிவுகள் வெளியிட நான்கரை மாதங்கள் ஆனது. இந்த முறை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வு எழுத நுழைவுச்சீட்டு, கருமை நிறப் பேனா, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி உள்ளது.

    இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.

    • 10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
    • 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

    தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு எழுத நுழைவுச்சீட்டு, கருமை நிறப் பேனா, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தேர்வாணையம், அதன் பிறகு வரும் தேர்வர்களை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

    • தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
    • ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    அதற்காக, தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிசி தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியது.

    அதன்படி, ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

    தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
    • 3,935 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

    சென்னை:

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    தேர்வர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிசி தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    • குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த மாதம் 11ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

    இதற்கு 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில், தற்போது கூடுதலாக 2208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932-ஆக அதிகரித்துள்ளது.

    ×