search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வர்கள்"

    • 30 நிமிடங்கள் ஆங்கில தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும்.
    • நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கடந்த 30-ந் தேதி நடைபெறவிருந்த கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது அந்த தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற உள்ளது. தேர்வர்கள், எழுத்துத் தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவல் மூலமாகவோ அல்லது https://agaram.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவெண் மற்றும் கைபேசி எண்ணினை உள்ளீடு செய்வதன் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அனுமதி சீட்டில் உள்ள குறிப்புகளைத் தவறாமல் பின்பற்ற தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு 30 மதிப்பெண்கள் கொண்டதாகும்.

    30 நிமிடங்கள் தமிழ் தேர்வும், 30 நிமிடங்கள் ஆங்கிலத் தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும். வாசித்தல் தேர்வானது நேர்முக தேர்வு நடைபெறும் நாளன்று நடைபெறும். வாசித்தல் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
    • குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×