என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வர்கள்"

    • குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
    • 2026 குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு டிசம்பரில் நடைபெறுகிறது

    2024, 25ஐ தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு உத்தேச அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்விவரம் பின்வருமாறு;

    • ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் அல்லாத பதவிகள்) -  அறிவிக்கை வெளியிடப்படும் நாள் ; 20.5.2026 - தேர்வு நடைபெறும் நாள் ; 03.08.2026
    • ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு I (குரூப் I சேவைகள்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள்; 23.06.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 06.09.2026
    • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026 -தேர்வு நடைபெறும் நாள்; 20.09.2026
    • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்): தேர்வு அறிவிக்கை நாள்; 11.08.2026-தேர்வு நடைபெறும் நாள்; 25.10.2026
    • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 31.08.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 14.11.2026
    • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப் IV பணிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 06.10.2026- - தேர்வு நடைபெறும் நாள்; 20.12. 2026

    மேலும் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளவே இந்த ஆண்டுத்திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலியிடங்கள் அறிவிக்கையில் வெளியிடப்படும். பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆணையத்தின் வலைத்தளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன. இவை அறிவிப்பு வெளியிடப்படும் தேதி வரை மாற்றங்களுக்கு உட்பட்டவை. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தாண்டுக்கான குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

    "கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.12.2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025. 26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம்ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 30 நிமிடங்கள் ஆங்கில தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும்.
    • நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கடந்த 30-ந் தேதி நடைபெறவிருந்த கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது அந்த தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற உள்ளது. தேர்வர்கள், எழுத்துத் தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவல் மூலமாகவோ அல்லது https://agaram.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவெண் மற்றும் கைபேசி எண்ணினை உள்ளீடு செய்வதன் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அனுமதி சீட்டில் உள்ள குறிப்புகளைத் தவறாமல் பின்பற்ற தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு 30 மதிப்பெண்கள் கொண்டதாகும்.

    30 நிமிடங்கள் தமிழ் தேர்வும், 30 நிமிடங்கள் ஆங்கிலத் தேர்வும் ஆக மொத்தம் 1 மணிநேரம் தேர்வு நடைபெறும். வாசித்தல் தேர்வானது நேர்முக தேர்வு நடைபெறும் நாளன்று நடைபெறும். வாசித்தல் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு குறித்த விபரம் தேர்வர்களுக்கு மேற்கண்ட முறையிலேயே தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
    • குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×