என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly"

    • மேஷம்- முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்
    • ரிஷபம்- வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும்.

    மேஷம்

    பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். தனஸ்தான அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.

    ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். 30.8.2025 அன்று காலை 7.53-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். விநாயகருக்கு அவல், பொரி படைத்து வழிபடவும்.

    ரிஷபம்

    திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். மேலதிகாரிகள் அதிகப் பணிச்சுமையை தரலாம்.

    சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது. சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். குங்கும விநாயகர் செய்து வழிபடவும்.

    மிதுனம்

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வார இறுதி நாளில் வெற்றி ஸ்தானம் செல்கிறார். வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

    அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். வில்வ அர்ச்சனை செய்து விநாயகரை வழிபடவும்.

    கடகம்

    செல்வாக்கு சொல்வாக்கு உயரும் வாரம். ராசி அதிபதி சந்திரன் ராசிக்கு 2,3.4-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். வருமானம் உயர்வதால் உங்கள் செல்வாக்கு சொல்வாக்கிற்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும். அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.

    வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும். வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்தி ருப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    சிம்மம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று கேது உடன் இணைகிறார். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடுமனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும்.

    சேமிப்பு கரையும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். அஷ்டமச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் இருப்பதால் பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப் படும். விநாயகருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கன்னி

    காரிய தடைகள் நீங்கும் வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதி நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியினருக்கு மிகச் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.

    நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.இழுபறியான பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகருக்கு பால் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெறுகிறார். இது மதன கோபால யோமாகும்.இது உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். பெண்கள் ஆவணி மாத வளர்பிறை கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.லாப கேதுவின் காலம் என்பதால் விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.

    விருச்சிகம்

    எண்ணியது ஈடேறும் வாரம். 10-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார்.

    பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப. விசேஷங்கள் நடக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

    தனுசு

    நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ஆட்சி. உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசே ஷங்கள் நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.தொழி லில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம்.

    தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாய கரை வழிபடவும்.

    மகரம்

    தடைகள் தகர்த்து வெற்றி நடைபோடும் வாரம்.ராசிக்கு புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.உங்களை அலங்கரித்துக் கொள்வதி லும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கு வதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் 25.8.2025 அன்று காலை 8.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னே ற்றத்துக்கு உதவும் விநாயகர் சதுர்த்தி அன்று பால் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடவும்.

    கும்பம்

    எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும் வாரம்.ராசியில் ராகு ஏழில் சூரியன் கேது சேர்க்கை உள்ளது.எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும்.

    அதிக வேலை பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடி யாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 25.8.2025 அன்று காலை 8.29 முதல் 27.8.2025 அன்று இரவு 7.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விநாய கருக்கு கடலை உருண்டை வைத்து வழிபடவும்.

    மீனம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் வக்ர சனி பகவான் சஞ்சாரம். ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும்.

    வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். அரசியல்வாதிகள் மனவுமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். 27.8.2025 அன்று இரவு 7.21 முதல் 30.8.2025 காலை 7.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது.காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    • வார ராசிபலன்கள்
    • 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    மேஷம்

    திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை நடத்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.

    கணவன்-மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும். ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்துக்களின் தீர்ப்பு சாதகமாகும். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்.

    உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். மறுமணம் கைகூடும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    வெற்றி மேல் வெற்றி தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் புதுனுடன் வெற்றி ஸ்தானத்தில் இணைந்து உள்ளார். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள். மனவேதனை மாறும். வாழ்வில் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி நடக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம், வேலை மாற்றம் என அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப விரும்பத் தகுந்த மாற்றங்கள் நடக்கும்.

    உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி பாகப்பிரிவினை சுமூகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காணாமல் போன பொருட்கள் தென்படும். கமிஷன் அடிப்படையான தொழிலில் லாபம் கூடுதலாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள்.

    புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் மிகுதியாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காதல் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்யவும்.

    மிதுனம்

    இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். தனஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் இது லட்சுமி நாராயண யோகமாகும். இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்க கூடிய அமைப்பாகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் நிறைவேறும்.

    இது சமூகத்தில் பிரபலத்தை ஏற்படுத்தும் யோகமாகும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான காலமாகும். மனதில் சந்தோசமும் அமைதியும் குடிபுகும். நிகழ்கால, எதிர்கால தேவைகள் பூர்த்தியாக கூடிய வகையில் தாராள தன வரவு உண்டாகும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும்.

    அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.

    அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பலன் தரும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவீர்கள். புத்திர பிராப்தம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். புதன்கிழமை மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.

    கடகம்

    உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று உள்ளார். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள். தெய்வ நம்பிக்கை கூடும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்வீர்கள். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.

    சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். சமூக சேவைக்காக அதிக அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.

    சிலர் வாடகைக்கு வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குவார்கள். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். திருமணத் தடை அகலும். கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்கும். நோய்கள் தீரும். வைத்தியச் செலவு குறையும். சரபேஸ்வரரை வழிபட தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.

    சிம்மம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று கேது உடன் இணைகிறார். இது கிரகண தோஷ அமைப்பாகும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.

    சிலருக்கு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு, கேதுக்கள் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

    தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு வேலை மாற்றம் செய்வது நல்லது. காது, மூக்கு தொடர்பான நீண்ட நாள் பிரச்சிினைகளுக்கு அறுவை சிகிச்சையில் தீர்வு கிடைக்கும். காலதாமத திருமணம் நல்லது. சிவ வழிபாடு செய்தால் சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

    கன்னி

    சுப பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடைபோடுவீர்கள். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.

    பணக்கவலை குறையும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.

    புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்.

    முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புத்திர பிராப்தம் கிடைக்கும். சிலர் கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    சகாயங்கள் நிறைந்த வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். தடைபட்ட பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.

    நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.

    ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 18.8.2025 அன்று மதியம் 2.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். காதலர்கள் இடையே சிறிய தவறுகள் பெரும் கருத்து வேறுபாடுகளாக மாறும். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    விருச்சிகம்

    சுதந்திரமாக செயல்படும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்தை எந்த கிரகமும் பார்க்காமல் இருப்பது நல்லது. ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. எந்தக் மனபாரமும் இல்லாமல் சிந்தித்து நிதானமாக செயல்படுவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

    நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன மன ஸ்தாபங்கள் முடிவிற்கு வரும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

    பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். திருமண வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். ஆயுள் பயம் அகலும். 18.8.2025 அன்று மதியம் 2.40 முதல் 20.8.2025 அன்று மாலை 6.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சுத் திறமையால் எதையும் சமாளிக்க முடியும். தேவையற்ற கோபத்தை குறைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. முருகன் வழிபாட்டால் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

    தனுசு

    அனைத்து விதமான நற்பலன்களும் நடக்கும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்குபெருகும். புதிய தொழில் துவங்கும் விருப்பம் உள்ளவர்கள் கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை, வெளிநாட்டு பொருள் இறக்கு மதி, கமிஷன் தொழில் செய்யலாம்.

    வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். பல வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தந்தையுடன் நல்லுறவு ஏற்படும்.

    நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். 20.8.2025 அன்று மாலை 6.35 முதல் 22.8.2025 அன்று காலை 12.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிர்ஷ்டத்தை நம்பி கால விரயம் செய்வீர்கள். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படலாம். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.

    மகரம்

    திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசிக்கு புதன், சுக்ரன் பார்வை உள்ளது. அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும். மனதில் தைரியம் குடிபுகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும் பூர்வீகச் சொத்துக்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.

    தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்கள் நீங்கி அற்புதமான சுப பலன்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆன்லைன் சாதனங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். 22.8.2025 அன்று காலை 12.16 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.

    கும்பம்

    மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும் வாரம். சம சப்தம ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி செய்வதால் முட்டுக்கட்டைகள் அகலும். முயற்சிகள் உடனே நிறைவேறும். புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை, நாணயம் உயரும். உங்களின் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

    இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றங்கள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாலோ இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.

    சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்பனையாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள். தினமும் ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.

    மீனம்

    தடைகள் விலகும் வாரம். அதிர்ஷ்டம் பற்றி கூறும் பஞ்சம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்கிரன் புதனுடன் இணைந்து நிற்பதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். தடைகள் விலகி மன நிம்மதி கூடும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக செயல்படும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும்.

    ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த வரவும் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் பாதிப்பு இருக்கும்.

    உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும். சகோதரர் வகையில் வரவு உண்டு. திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். கணவன்-மனைவி ஒற்றுமை கூடும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    தனுசு

    அரசு வேலை முயற்சி வெற்றி தரும் வாரம். 5ம் அதிபதி செவ்வாய் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரிக்கிறார். இது மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு. அரசாங்க வேலைக்கான முயற்சியில் வெற்றி உண்டு. அரசுப் பணியில் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும். குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    தன யோகம் சிறப்பாக அமையும். வீடு, வாகன யோகம் உண்டாகும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.

    குலதெய்வ அருள் கிட்டும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    மகரம்

    வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி, செவ்வாய் சம்மந்தம் உள்ளது. மனதில் நிறைவும், நெகிழ்சியும் உண்டாகும். பூர்வீக சொத்தை பிரிப்பதில் உடன் பிறந்தவர்களுடன் நிலவிய சர்ச்சைகள் விலகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.

    திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பட்ட வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். தந்தையின் ஆலோசனை பயன் தரும்.

    பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உறுதி. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறையினரும் பிரபலமடைவார்கள். பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கும்பம்

    பணவரவு, வருமானம் கூடும் வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். லாப ஸ்தான பலத்தால் வருமானம் அதிகரிக்கும். புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும்.

    வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம்.

    நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பால் சாதம் படைத்து வழிபடவும்.

    மீனம்

    துன்பங்களும், துயரங்களும் முடிவுக்கு வரும் வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு 2,9-ம் அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.

    தடைப்பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். நடுத்தர வர்க்கத்தின் வருமானம் உயரும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

    தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    சிம்மம்

    புதிய சொத்துக்கள் சேரும் வாரம். ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் நான்காம் அதிபதி செவ்வாய் நிற்கிறார். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும்.

    வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி முதல் 14.8.2025 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு திரட்டுப்பால் வைத்து வழிபடவும்.

    கன்னி

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். புதியவற்றை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.

    பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலர் வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள் சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 14.8.2025 அன்று காலை 9.06 மணி முதல் 16.8.2025 அன்று காலை 11.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதிரசம் வைத்து வழிபடவும்.

    துலாம்

    திருப்பு முனையான வாரம். கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சேமிப்புகள் கூடும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக் கூடிய காலமாகும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

    16.8.2025 அன்று காலை 11.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.

    விருச்சிகம்

    தந்தையால் உயர்வு அடையும் வாரம். தந்தைக்கு காரக கிரகமான சூரியன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களின் தொழில் வளர வாழ்வாதாரம் உயர தந்தை உதவி செய்வார். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வெளிநாட்டு வணிகம், உணவுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் நல்ல பலன் தரும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    மேஷம்

    புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு செவ்வாய் சனி பார்வை. இந்த அமைப்பு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    தலைமைப் பண்பு மிகுதியாகும். கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குல கவுரவத்தை கட்டி காப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும்.

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். கோகுல அஷ்டமி அன்று வெண்ணை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    ரிஷபம்

    லாபகரமான வாரம். தன லாப ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. தீராத மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். பட்ட கடனும், நோயும் தீரும் காலமும் வந்து விட்டது. வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.

    ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும், மனதும் புத்துணர்ச்சியடையும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பங்குச் சந்தை ஆதாயம் கூடும். அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தொழில் முயற்சிக்கு ஏற்ற லாபம் நிச்சயம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.

    அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டா கலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடவும்.

    மிதுனம்

    மகிழ்ச்சியான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் தருவது கேந்திரங்கள். தற்போது மிதுன ராசிக்கு கேந்திர ஸ்தானங்கள் பலம் பெறுகிறது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான புதிய முயற்சிகள் திட்டங்கள் பலிதாகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏறபடும்.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். கோகுல அஷ்டமி அன்று வெண் பொங்கல் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    கடகம்

    சிறிய முயற்சியில் பெரிய தடைகள் அகலும் வாரம். ராசியில் சூரியன் நிற்பதால் தலைமைப்பதவி தேடி வரும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை வராது. வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு நல்ல மதிப்பும் கிடைக்கும். அரசு வருமானம் ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். பாக்கிய ஸ்தான சனி பகவான் புதிய தொழில் முதலீட்டிற்கு தூண்டினாலும் ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நல்லது. பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு, கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகலாம். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. உணவு கட்டுப்பாடு அவசியம். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு எள்ளுருண்டை படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    மேஷம்

    குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

    இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.

    அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 5.8.2025 அன்று காலை 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலை தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வரலட்சுமி விரத நாட்களில் மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

    ரிஷபம்

    முன்னேற்றமான வாரம். ராசிஅதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும்.

    பூர்வ ஜென்ம புண்ணியப்படி இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். திருமண வயதில் உள்ள மகன் மகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும்.

    5.8.2025 அன்று காலை 11.23 மணி முதல் 7.8.2025 அன்று இரவு 8.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சினை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். வரலட்சுமி விரத நன்நாளில் மஞ்சள் அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடவும்.

    மிதுனம்

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். பொன்,பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.

    மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். காதலால் ஏற்பட்ட ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.

    ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். 7.8.2025 அன்று இரவு 8.11-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. வரலட்சுமி நோன்பு அன்று வில்வ அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    கடகம்

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சூரியன் புதன் சேர்க்கை. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.

    தற்போது குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு-கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.

    சிலருக்கு திருமணத் தடை இருக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.வரலட்சுமி விரத நாளில் மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
    • குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×