search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai HC Branch"

    • ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம்.
    • இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தவிரடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர். கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு. ஊதியம், பராமிரிப்பு போக மீதம் உள்ள தொகை எவ்வளவு? எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவிலில் 12 குருக்கள், 19 உதவி குருக்கள் பணிகள் இருக்க வேண்டும். ஆனால் 2 குருக்கள், 7 உதவி குருக்கள் பணியில் உள்ளனர். ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறியிருந்தார்.

    நீதிபதிகள் விசாரணையின்போது இந்து அறநிலைத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா வேலைகளை மட்டுமே செய்கின்றன என கண்டித்தனர். அத்துடன் அடுத்த மாதம் 14-ந்தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
    • வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Dengue
    மதுரை:

    மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.


    அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்தும், டெங்கு-பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்பது குறித்தும் அறிக்கையை வருகிற 20-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டு வருகிற 20-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். #Dengue
    நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த அருள்நிதி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை திருப்பரங்குன்றம், அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்று விட்டது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    எனவே நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

    எனவே இந்த வழக்கில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுக்களை அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த குழுவில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

    இந்த குழுவானது மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைக்க உத்தரவிடப்படுகிறது.

    குழுவினர் நீர்நிலைகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள். இது தொடர்பாக விளக்கம் அளிக்க 5 மாவட்ட கலெக்டர்கள் வருகிற 11-ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  #MaduraiHC
    ×