search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார்.
    • சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    அதன்படி, இன்று மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிறகு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

    இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    மோடி.. மோடி.. என உற்சாக குரல் எழுப்பி, பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களவை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.

    பிரதமர் மோடியுடன், வாகனத்தில் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உடன் உள்ளனர்.

    வாகனத்தில் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.

    ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்.
    • தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகத்துக்கு வந்தார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக பகல் 11.40 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்றபடி பா.ஜனதா கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்.

    இப்போது நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. அந்த அலை நீண்ட தூரம் பயணிக்கப் போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டது போல 1991-ம் ஆண்டு இதே கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை புறப்பட்டு காஷ்மீர் வரை சென்றிருந்தேன். ஆனால் இந்த முறை நான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்திருக்கிறேன்.

    நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். நமது தமிழக மக்களும் இப்போது அதைத்தான் செய்ய போகிறார்கள். தி.மு.க.-காங்கிரசின் இந்தியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்.

    அவர்களின் தலைக்கணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால் வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களின் கொள்கை, அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்குதான் அவர்களின் முதல் இலக்கு.

    ஒரு பக்கம் பார்த்தால் பா.ஜ.க.வின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள். அந்த பக்கம் பார்த்தால் காங்கிரஸ்-தி.மு.க. இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள். ஆப்டிக்கல் பைபர் மற்றும் 5ஜி ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு கொடுத்தது. நமது பெயரில் டிஜிட்டல் இந்தியா என்கிற திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல் இருக்கிறது.

    2ஜி கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க.தான். பா.ஜனதா ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பா.ஜனதா பெயரில் உதான் திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல்தான் இருக்கிறது.

    நாம் கேலோ இந்தியா மூலம் விளையாட்டு துறையை உயர்ந்த உன்னதமான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் பெயரில் காமன்வெல்த் ஊழல்தான் முதன்மையாக இருக்கிறது. இந்த பட்டியல் மிக நீளமாக இருக்கும்.

    தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.

    தமிழ்நாட்டுக்கு தி.மு.க. ஒரு அரக்கனாக இருக்கிறது. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு தி.மு.க. அரசு எதிரியாக உள்ளது. தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி தி.மு.க.தான். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க விடாமல் செய்ததற்கு சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்தது.

    ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க.-காங்கிரஸ் தடை விதித்தது. அந்த தடையை பா.ஜ.க. அரசு நீக்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது தி.மு.க.வும், காங்கிரசும் வாய் மூடிக் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணி அரசுதான் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது. தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.

    இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க.-காங்கிரஸ் விளையாடுகிறது.

    இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ்-தி.மு.க. செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா?

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ் அரசுகள் பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரிந்தவர்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

    உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம். மனதின் குரல் நிகழ்ச்சி போன்று நமோ செயலி மூலம் என் பேச்சை, உரைகளை தமிழில் கேட்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா சரத்குமார், சசிகலா புஷ்பா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
    • உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,

    * தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    * திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரியும்.

    * பெண்களின் பெயரில் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள்.

    * முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

    * நம்முடைய பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. தலைவர்கள் கேள்விஎழுப்பினர்.

    * தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

    * தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பெருமையையும் பாதுகாக்க பா.ஜ.க என்றும் முன்னிலையில் இருக்கிறது.

    * உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.

    * நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. தி.மு.க.வும், காங்கிரசும்.
    • பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..?

    கன்னியாகுமரி:

    பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

    * இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

    * மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

    * மீனவர்கள் ஏன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள்? அதற்கு காரணம் யார்?

    * இந்தப் பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. தி.மு.க.வும், காங்கிரசும்.

    * இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..?

    * காங்கிரஸ், திமுக செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
    • தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.

    நாகர்கோவில்:

    பா.ஜ.க. அரசின் திட்டங்களை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி,

    * கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தார்கள்.

    * தி.மு.க. தமிழ்நாட்டின் வருங்கால, கடந்த கால வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எதிரி.

    * ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களுக்கு வந்தேன்.

    * அயோத்தி விழாவை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்க கூட தி.மு.க. அரசு தடை விதித்தது.

    * புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நாங்கள் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவினோம்.

    * ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.

    * தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.

    * திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரி.

    * மாற்று கட்சி தலைவர்களுக்கு குமரியில் இருந்து வரும் முழக்கம் தூக்கத்தை கெடுத்துள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    * தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன்.

    * தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும்.

    * தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.

    * மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள்.

    * நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்.

    * இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள்.

    * இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது.

    * பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.

    * கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது.

    * வாஜ்பாய் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.

    * கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை கொண்டு வர மாநில அரசு உதவவில்லை.

    * இரட்டை ரெயில் பாதை வேண்டும் என்ற மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை இவர்கள் நிறைவேற்றவில்லை.

    * பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * நாம் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறோம்.

    * உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.

    * மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன்.

    * தமிழ்நாட்டின் ரெயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார்.

    • குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
    • மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    * குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.

    * கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் பிரதமர் மோடி.

    * குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    * அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்.

    * 400 தொகுதிகள் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, இந்திய மக்களின் உணர்வு.

    * 1892-ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.

    * தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்.

    * மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    * 147 கோடி மக்களின் விஸ்வ குருவாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றார்.

    இதையடுத்து மகளிர் அணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றார்.

    • தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
    • மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.

    குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

    சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


    இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.

    இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

    • மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரசாரம் செய்கிறார். மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

    மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பேச உள்ள நிகழ்ச்சிக்கான பந்தல் கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதுக்கூட்ட இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    பிரதமர் மோடி பேசவுள்ள மேடை தெற்கு இருந்து வடக்கு பார்த்து அமைக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் ஜேசிபி எந்திரம் மூலமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது.

    3-வது முறையாக பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் தமிழகத்தில் இந்த முறை எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணிக்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள்.

    இதன்படி பிரதமர் மோடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

    கடந்த 2 மாதங்களில் மோடி 4 முறை தமிழகம் வந்துள்ளார். திருச்சி, பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார்.

    கடந்த 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அடுத்த 5 நாளில் மீண்டும் இன்று தமிழகம் வருகிறார்.

    தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


    மீண்டும் மோடி சர்க்கார் என்ற வாசகத்துடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் ஒரு புறத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோலை கொண்டு நிறுவிய படம் இடம் பெற்றுள்ளது. மறுபுறத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மூதாட்டி ஒருவரிடம் ஆசி பெறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    மேடையின் பக்கவாட்டில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் மண்டபத்துக்குள் அங்கவஸ்திரத்துடன் பிரதமர் மோடி நடந்து வருவது போன்ற பிரமாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி 2.50 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்கிறார்.

    அங்கு அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாலை 5 மணிக்கு வருகிறார்.

    5.15 மணி முதல் 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் காரில் விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி விமானத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்துக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிகிறார்கள்.

    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மைதானத்தில் திரண்டுள்ளார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் மோடி காரில் பயணிப்பதால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ×