என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marxist communist party meeting"

    • மாநாடு கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
    • புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

    மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொது மாநாடு தொடங்கியது.


    இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சி.பி.ஐ.எம்.எல். விடுதலை பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி.பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    மாநாட்டில் சாலமன் பாப்பையா, ராஜமுருகன், சசிகுமார், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றி மாறன், பிரகாஷ்ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை செந்தொண்டர் அணி வகுப்பு பேரணி நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.

    இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே சங்கரய்யா நினைவு திடலில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.

    வெங்கடேசன் எம்.பி. வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரளா முதல்-அமைச்சர் உறுப்பினர் ஆகி விஜயன் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத், உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    வரவேற்பு பொருளாளர் மதுக்கூர் ராமலிங்கம் நன்றி கூற மாநாடு நிறைவு பெறுகிறது. பொதுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும் சில பொலிட் பீரோ உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக் தவாலேவை தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பொலிட் பீரோவில் உள்ள மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, ஜி. ராம கிருஷ்ணன், பினராய் விஜயன், மாணிக் சர்க்கார் மற்றும் சுர்ஜ்ய காந்த மிஸ்ரா ஆகியோருக்கு 75 வயது நிரம்பி உள்ளதால், அவர்களுக்கு பதிலாக புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

    இவர்களில் பினராய் விஜயன் மீண்டும் தனக்கு கேரள முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. #marxistcommunist
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது. மத்திய, மாநில அரசுகளுடன் அல்லாது தோழமை கட்சிகளை ஆதரிப்பது. கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூல் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட ஒன்றியத்தை சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்றார். முடிவில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #marxistcommunist
    ×