search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம்"

    70 வயதாகும் ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளையின் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு கிரட் வளாகத்தில் நடந்தது.

    வட்ட கிளை இணை செயலாளர் காமாட்சி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்  நாராயணன், கிராம உதவியாளர் சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை இணை செயலாளர் பாண்டியம்மாள் வரவேற்றார். 

     வட்டக்கிளைசெயலாளர் வேல்மயில் வேலைஅறிக்கை வாசித்தார். பொருளாளர் பானு அறிக்கைவாசித்தார்.   செற்குழுஉறுப்பினர்  நாராயணன்   பேசினார்.  

    70வயதான ஓய்வூதியர் களுக்கு 10சதவிகித கூடுதல் பென்சன் வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2ஆயிரம் சமூகநீதிக்கு எதிரானது குறைந்தபட்சம் ரூ.7500வழங்கவேண்டும். 

    மருத்துவகாப்பீடு ரூ.350 என உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குறியது. காப்பீட்டு குளறுபடிகளை சரிசெய்யவேண்டும். புதியபென்சன்திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். 

    கிராம நிர்வாக அலுவலராக பதவிஉயர்வு பெற்றவர்களின் முழுபணிக்காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கவேண்டும். வாடிப்பட்டி பகுதியில் அரசுகலைக்கல்லூரி அமைக்கவேண்டும். 

    அலங்காநல்லூர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கஉத்தவிட்டதமிழக அரசுக்கு நன்றிதெரிவிப்பது, பாலமேடு பகுதியில் காய்கனிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்துதரவேண்டும். 

    மத்திய அரசு வழங்குவதை போல் மாநிலஅரசும் ரூ.1000 மருத்துவபடி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரலட்சுமி நன்றிகூறினார்.
    ×