என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Offensive"
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தாக்குதலை தொடங்கியது. 5 மாதங்களுக்கு மேல் இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.
இந்த போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகிவிட்டனர். பல நகரங்கள் ரஷியாவின் மும்முனை தாக்குதலால் சீர்குலைந்து போய் உள்ளது.
உயிருக்கு பயந்து பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்து ஓடி விட்டனர்.
ரஷியபடைகள் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டன. லிவிசான்ஸ்சா நகரத்தை பிடிக்க தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிவிட்டன.
இந்த தீவில் இருக்கும் ரஷியபடைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் ஏற்றி சென்ற படகுகள் மீது உக்ரைன் படையினர் ஆளில்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
உக்ரைன் வீரர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதனால் ஸ்னேக் தீவை உக்ரைன் தன் வசப்படுத்தி உள்ளது.
ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர்.
இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை.
இந்த தாக்குதலில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆவடி:
குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள மோதிரம், தங்க சங்கிலியை பறித்தனர்.
மேலும் அஜித்குமாரின் செல்போனை பறித்து அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர்.
பின்னர் அஜித்குமாரை முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.
இந்தக் கடை மேற்பார்வையாளராக கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(40) கடம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த தொகை ரூ.79ஆயிரத்து220 பணத்தை பழனி தனது மொபட்டில் வைத்துக்கொண்டு மூவரும் தனித்தனியே பைக்கில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான காந்தி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது.
அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடியுடன் 3 பேரையும் வழிமடக்கினர்.
மேலும் 4 பேர் பின்னால் வந்து பணம் எங்கே என்று கேட்டு உருட்டுக்கட்டை கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்.
பணம் இல்லை என்று மூவரும் கூறியதால் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி பழனி மொபெட்டில் வைத்து இருந்த ரூ.79 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன், வட வணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் காயமடைந்த 3 பேரையும்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி ஏழுமலை, சிவக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வட வணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (41) என்பவருக்கும், அவரது சகோதரர் ஏழுமலைக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2-ம்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது, ஏழுமலையின் மருமகன் வடுகசாத்தை சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவர் ரமேஷை ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தியதாக நேற்று சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வல்லம் அடுத்துள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 68), இவரது பேரன் ஆகாஷ் (16). சம்பவத்தன் ஆகாஷ் தனது பாட்டி மலர்கொடியுடன் குருங்குளம் அருகே உள்ள கரும்பு கொல்லையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குருங்குளம் சாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (39) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார். அப்போது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் ஆகாஷ் சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஆகாசை துரத்தி சென்று பிடித்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மலர் கொடியையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஆகாசும், மலர்கொடி இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
இலங்கையில் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மிஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோவில் முன்பு நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலிக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் அது மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். அமைப்பை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். புதுவை அரசை பொறுத்தவரை எங்களால் முடிந்த வரை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மகளிர் காங்கிரஸ் சார்பில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு பழைய பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். #srilankablast #narayanasamy
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது.
இந்த மழை 4.45 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் அவர்களது வாகனங்களை முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவளாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 56) என்பவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை அந்த பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அந்த மாடு செத்தது.
இதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவர் தனது வயலில் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ஒரு பசு மாடு செத்தது. மேலும் ஒரு மாடு காயமடைந்தது.
சங்கராபுரம்,கச்சிராயப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 10 வரை மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.15 மணி முதல் 6 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் திருநாவலூர், மயிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசாக குளிர்ந்த காற்றுவீசியது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை தூறி கொண்டு இருந்தது.
பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆவினங்குடி, பட்டூர், கோழியூர் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி அளவில் பலத்த சூறை காற்று வீசியது. இதில் பட்டூர்- கோழியூர் சாலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக வராததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையின் குறுக்கே மரக்கிளை விழுந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளையை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. அதன்பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோல் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசாக மழை தூறியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே என்.ஐ.ஏ. அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கையும் அளித்துள்ளனர். இதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய தீவிரவாத அமைப்பின் இலக்கு, ஏதாவது ஒரு இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவது தான் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பின்னர் இலங்கையில் திரும்பிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை புதிய தீவிரவாத இயக்கம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. அப்போதே இந்திய உளவு துறை இலங்கையை உஷார்படுத்தியது. ஆனால் அந்த நாடு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிட்டதாலேயே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. #Srilankablast #TN
நத்தம் சேர்வீடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது 62). விவசாயி. இவர் நேற்று இரவு தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று விட்டனர். இன்று காலையில் பார்த்தபோது செல்லப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லப்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அதன் பேரில் அவரை படுகொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்படடு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க.