search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "provided"

    • முத்தரையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முத்தரையர் சாதிகளுக்கு என்று தனியாக ‘‘வலையர் புனரமைப்பு வாரியம்’’ அமைக்க வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு முத்தரையர் சங்க மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் குப்புசாமி, மாவட்டச் செயலர் அழகுமணி, பொருளாளர் ராமநாதன், துணைத் தலைவர் நடராஜன், ஆடிட்டர் ஆண்டிசாமி, துணைச் செயலாளர்கள் அழகுமுருகன், பீ.பீ.குளம் பாண்டி, மாநில் பொதுக்குழு உறுப்பினர்கள் குப்பு வெங்கடேசன், குண்டுமலை, அழகர், தமிழ் செல்வன், கருப்பையா, மகாமுனி, உத்தப்புரம் கருப்பையா, மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பெரும்பிடுகு முத்தரையர் 1348-ம் பிறந்தநாள் விழாவை அடுத்த மாதம் 23-ந் தேதி சிறப்பாக கொண்டாடுவது, சென்னை சிந்தாதிரி பேட்டையில் தலைமை சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு- புள்ளிவிபர சேகரிப்புகளை எடுக்க வேண்டும்.

    இதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் முத்தரையர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் சங்கத்தின் உட்பிரிவை சேர்ந்த வலையர், செட்டிநாடு வலையர், அம்பலகாரர், சேர்வை ஆகிய 4 சாதிகள் சீர்மரபினர் பட்டியலில் உள்ளன. நாங்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். எனவே முத்தரையர் சாதிகளுக்கு என்று தனியாக ''வலையர் புனரமைப்பு வாரியம்'' அமைக்க வேண்டும்.

    அதில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 4 பேரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் வானிலை முற்றிலும் மாறி அவ்வப்போது மழைபெய்து வந்தது.
    • மேலும் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும் வீசி வந்தது.

    புதுச்சேரி:

    மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் வானிலை முற்றிலும் மாறி அவ்வப்போது மழைபெய்து வந்தது. மேலும் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும் வீசி வந்தது. இதனால் உப்பளம் தொகுதியை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடி நேற்று முன் தினம் உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். நேற்று 2-வது நாளாக தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும் குடிசை வீடுகளுக்கு தார்பாய் போன்ற நிவாரண உதவிகளையும் அளித்தார்.

    உடன் அவைத் தலைவர் ரவி, திமுக பிரமுகர் நோயல், மாநில இளைஞரணி ராஜி, கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன், மணிகண்டன், ஆறுமுகம், மாயவன், ஜெயசீலன், ரவி, மணிமாறன் மற்றும் ராகேஷ் கௌதமன், கழக சகோதரர்கள் ரகுமான், மோரிஸ், லாரன்ஸ், சிரஞ்சீவி, மதி, சித்தார்த்தன், திருநாவுக்கரசு, சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பஸ் டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடத்தினர்.
    • தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி, முதல் -அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாளையொட்டி ஆட்டோ, டெம்போ மற்றும் பஸ் டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடத்தினர்..

    இதன் தொடர்ச்சியாக கண் பரிசோதித்து கொண்ட பயனாளிகளுக்குமூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா இல்லத்தில் நடைபெற்றது. தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார். விழாவில், எதிர்கட்சி தலைவர் சிவா பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொ.மு.ச. செயலாளர் அண்ணா அடைக்கலம், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், கிளை செயலாளர்கள் ஐசக், சசி, விஜயகுமார், அகிலன், முத்து, ராஜி, தாமரை, சொல்தா ரவி, தட்சணாமூர்த்தி, புருஷோத்தமன், ஸ்ரீதர், மூர்த்தி, சேட்டு, பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.
    • இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    ஈரோடு:

    ஈரோடு டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திராவிடம், கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மனு வழங்கினார்கள்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்துகளில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் 3 அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.

    கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். இதற்கு முன் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர்.

    தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.

    இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் உள்ள கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வங்கி, மருத்துவமனை, யூனியன் ஆபீஸ், வேளாண் அலுவலகம் என அனைத்தும், இப்பகுதியினர் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர்.

    திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து கடந்த 10 ஆண்டுக்கு முன் பஸ் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தாளவாடி டெப்போவில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சை, தாளவாடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட செய்து ஆசனூருக்கு 6:45 மணிக்கும், கேர்மாள த்துக்கு, 7:30 மணிக்கும் வந்து, கோட்ட மாளத்துக்கு 8:30 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும்.

    மறு மார்க்கமாக காலை கோட்டமாளத்தில் 8:45 மணிக்கு புறப்பட்டு, தாளவாடிக்கு 11:30 மணிக்கு வந்து சேரும். தாளவாடியில் மதியம் 2 மணிக்கு பஸ் புறப்பட்டால் ஆசனூருக்கு 2:45 மணி, கேர்மாளம் 3:30 மணி, கோட்டமாளம் மாலை 4:30 மணிக்கு வந்து சேரும்.

    பள்ளி விட்டதும், மாலை 4:45 மணிக்கு அந்த பஸ் புறப்பட செய்தால் இரவு, 7:30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையும். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 6,000 -க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • மதுரை திருமலைநாயக்கர் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • வலையங்குளம் நாடக குழுவினரை பாராட்டி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய "திருமலை மெச்சினார்" என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    வலையங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் இங்கு பழமையான கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜித்குமார், தினேஷ்குமார், சூரிய பிரகாஷ் , தர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர்.

    அப்போது வலையங்குளம் கண்மாய் கரை அருகில் விநாயகர் கோவில் முன்பு திருமலை மெச்சினார் என்ற பெயர் பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதை படி எடுத்து ஆய்வு செய்த போது 312 ஆண்டுக்கு முன்பு சேர்ந்தது என்பதை அறிய முடிந்தது. இதுகுறித்து உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் என பெயர் பெற்றது. குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளது.

    மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி. 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினர். திருமலை நாயக்கர் ஆட்சி காலம் பொற்காலம். இவர் திருவிழா மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் 98 நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம்.

    வலையங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோவில் ராஜ வீதியில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினர். திருமலை நாயக்கர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த போது நாடகத்தை பார்த்து வியந்தார். நாடகக்குழுவினரை அழைத்து பாராட்டி "திருமலை மெச்சினார்" என்ற சிறப்பு பட்டமாக தன் கையால் செம்பு பட்டயம், 64 உப்பில்லா கட்டிகள் வழங்கினார்.

    மேலும் குதிரை தன் ஆட்சி பகுதி எல்லையில் ஓட விட்டு அந்த குதிரை நிற்குமிடம் வரை நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு நாடக குழுவினருக்கு வழங்கும்படி கட்டளையிட்டார். குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரை குத்தி என்று அழைக்கப்படுகிறது.

    வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தின் அடியில் 3 அடி நீளம் 2 அடி அகலம் 10 வரிகள் கொண்ட தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். இதை படி எடுத்து ஆய்வு செய்தோம்.

    இதில் சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15 திங்கட்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடகக்கலை சங்கமறிய விநாயகர் கோவிலுக்கு திருப்பணி செய்து கட்டி கும்பாபிஷேகம் செய்தது, திருமலை மெச்சன் உபயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம் வலையங்குளம் விநாயகர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததை அறியமுடிகிறது. தற்போது வரை வலையங்குளத்தில் மட்டுமல்ல சுற்றி இருக்கின்ற கிராமத்தில் நடக்கும் விசேஷங்களில் திருமலை மெச்சினார் வம்சத்திற்கு தனி மரியாதை உண்டு.

    தொடர்ந்து தொன்று தொட்டு 5-வது தலைமுறையாக வலையங்குளத்தில் முதல் நாள் நாடகம் திருமலை மெச்சினார் நாடகக் குழுவினர் தான் அரங்கேற்றி வருகின்றனர்.தற்போது தான் 428-வது நாடகம் நடைபெற்றது. தமிழகத்தில் அதிகமான நாட்களில் நாடகம் நடக்கும் இடம் வலையங்குளம் என்பது மற்றொரு சிறப்பு.

    இவ்வாறு அவர் கூறினார். 

    70 வயதாகும் ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளையின் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு கிரட் வளாகத்தில் நடந்தது.

    வட்ட கிளை இணை செயலாளர் காமாட்சி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்  நாராயணன், கிராம உதவியாளர் சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை இணை செயலாளர் பாண்டியம்மாள் வரவேற்றார். 

     வட்டக்கிளைசெயலாளர் வேல்மயில் வேலைஅறிக்கை வாசித்தார். பொருளாளர் பானு அறிக்கைவாசித்தார்.   செற்குழுஉறுப்பினர்  நாராயணன்   பேசினார்.  

    70வயதான ஓய்வூதியர் களுக்கு 10சதவிகித கூடுதல் பென்சன் வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2ஆயிரம் சமூகநீதிக்கு எதிரானது குறைந்தபட்சம் ரூ.7500வழங்கவேண்டும். 

    மருத்துவகாப்பீடு ரூ.350 என உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குறியது. காப்பீட்டு குளறுபடிகளை சரிசெய்யவேண்டும். புதியபென்சன்திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். 

    கிராம நிர்வாக அலுவலராக பதவிஉயர்வு பெற்றவர்களின் முழுபணிக்காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கவேண்டும். வாடிப்பட்டி பகுதியில் அரசுகலைக்கல்லூரி அமைக்கவேண்டும். 

    அலங்காநல்லூர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கஉத்தவிட்டதமிழக அரசுக்கு நன்றிதெரிவிப்பது, பாலமேடு பகுதியில் காய்கனிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்துதரவேண்டும். 

    மத்திய அரசு வழங்குவதை போல் மாநிலஅரசும் ரூ.1000 மருத்துவபடி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரலட்சுமி நன்றிகூறினார்.
    நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 7 மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி தொடக்கிவைத்தார். #EdappadiPalanisamy #ADMK
    சென்னை:

    ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீன்பிடி படகு குழுக்களுக்கு ஆழ்கடல் தகவல் தொடர்பு சாதனைங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நேவிக் என்ற செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி பெறும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவியை 80 மீன்பிடி படகு குழுக்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 7 மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி தொடக்கிவைத்தார்.

    நேவிக் கருவியானது, இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பின் உதவியுடன் செயல்படுகிறது. வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த குறுஞ்செய்திகளை பெற்று, புளூடூத் இணைப்பு மூலம் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட மீனவர்களின் கைப்பேசிக்கு அனுப்புகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.36½ லட்சம் கடனுதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டிற்கான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து ஜமுனா மரத்தூரில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு என பல்வேறு துறைகளின் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவை யான விரிவான செயல் திட்டங்கள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது.

    மேலும் கலெக்டர், பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஜவ்வாது மலையில் தொழில் வளர்ச்சி கொண்டு வருவதற்கான திட்டங்கள், தேன் பதப்படுத் தும் அலகு, விவசாயத்தின் வளர்ச்சி, மினி விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக ரூ.22 லட்சத்து 39 ஆயிரத்திற்கான கடனுதவியும், மகளிர் திட்டம் மூலமாக 15 குழுக்களுக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்திற்கான கடனுதவி யும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். #KeralaFlood #KeralaReliefFund
    சென்னை:

    சென்னை வியாசர்பாடி ஓ.பி.காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவருடைய மனைவி ரம்யா(30). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஜினிசா(5) என்ற பெண் குழந்தை உள்ளது.

    முதலாம் வகுப்பு படிக்கும் ஜினிசா, தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையான 25 ஆயிரத்து 879 ரூபாயை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். குடும்பத்துடன் கேரளா சென்று கேரள முதல் மந்திரி(பொறுப்பு) இ.பி.ஜெயராஜனிடம் வழங்கினார்கள். #KeralaFlood #KeralaReliefFund 
    கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது. #KeralaFlood #Tamilnadu
    சென்னை:

    கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து நிருபர்களுக்கு, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் அளித்த பேட்டி வருமாறு:-

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்துக்காக 10-ந் தேதியன்று ரூ.5 கோடியையும், 18-ந் தேதியன்று மேலும் ரூ.5 கோடியையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.



    அதோடு, 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டி, லுங்கி, போர்வை ஆகியவை தலா 10 ஆயிரம் ஆகியவற்றையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தோஷ்பாபு, தரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 306 டன் அரிசி, 270 டன் பால் பவுடர் மற்றும் பால் அனுப்பப்பட்டுள்ளது.

    கேரளாவுக்கு மருந்து, சுகாதாரம் ரீதியிலான உதவிகளை தமிழக அரசுதான் முதன் முதலாக செய்தது. ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள், கிருமி நாசினிகள், திரவ குளோரின் உள்பட பல பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.



    கேரளாவில் உள்ள வயநாடு உள்பட சில மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளுக்காக நமது அதிகாரிகள் குழு சென்றுள்ளது. 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2 டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜன் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளோம்.

    கேரளாவில் மொத்தம் 226 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதன் மூலம் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அந்த நோயின் தாக்கம் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்களும், தொண்டு நிறுவனங்களும் கேரளாவுக்கு உதவ முன்வந்தனர். எனவே அவர்கள் அளித்த உதவிப் பொருட்களை வாங்கி 241 லாரிகளில் ஏற்றி அனுப்பிவைத்தோம். அவற்றின் மதிப்பு ரூ.17.51 கோடியாகும். அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 47 லாரிகள் சென்றன. தேனி மாவட்டத்தில் இருந்து 30 லாரிகள் சென்றன.

    அன்புடன் தமிழகம் என்ற ஒரு இணையதளத்தை இதற்காக தொடங்கியிருக்கிறோம். உதவி செய்ய விரும்புகிறவர்கள் இதில் உள்ள தகவல்களின்படி உதவிகளை வழங்க முடியும்.

    கேரளாவில் உள்ள நிவாரண ஆணையர் குரியனிடம் பேசும்போது, உணவு அனுப்புவதைவிட போர்வைகள், உடைகள், உள்ளாடைகள், டைபர்கள், டார்ச்லைட், செருப்புகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவை தேவை என்று தெரிவித்தார். சிவகாசியில் இருந்து தீப்பெட்டி அனுப்பப்பட்டது.

    முதல்-அமைச்சர் அறிவித்த பொருட்களை அனுப்புவதோடு, தமிழக மக்கள் தரும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்ளார்.
    தாம்பரம்:

    வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

    சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், பாரதீய நபிக்கிய வித்யுட் நிகாம் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கல்லோல் ராய் ஆகியோருக்கு தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    நடிகர் பாண்டியராஜன்

    தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைக்கு நடிகர் பாண்டியராஜனுக்கும், பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த 69 பேருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 217 பேர் பட்டங்கள் பெற்றனர். விழாவில் பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் ஜோதி முருகன், கல்விக்கான துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், பதிவாளர் வீரமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×