search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Relief Fund"

    சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். #KeralaFlood #KeralaReliefFund
    சென்னை:

    சென்னை வியாசர்பாடி ஓ.பி.காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவருடைய மனைவி ரம்யா(30). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஜினிசா(5) என்ற பெண் குழந்தை உள்ளது.

    முதலாம் வகுப்பு படிக்கும் ஜினிசா, தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையான 25 ஆயிரத்து 879 ரூபாயை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். குடும்பத்துடன் கேரளா சென்று கேரள முதல் மந்திரி(பொறுப்பு) இ.பி.ஜெயராஜனிடம் வழங்கினார்கள். #KeralaFlood #KeralaReliefFund 
    கேரளாவில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தாராளமாக உதவுங்கள் என்று நாட்டு மக்களுக்கு முதல்-மந்திரி கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை நிவாரண நிதியாக ரூ.714 கோடி திரண்டது. #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது. பேய் மழை காரணமாக கேரளாவில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. 400 பேர் வரை பலியானார்கள். கேரளாவில் மழை ஏற்படுத்திய சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.600 கோடி நிதி வழங்கியது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவின் மறு கட்டமைப்புக்கு உதவும்படி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவி செய்யுங்கள் என்றும் கூறினார்.

    இதையடுத்து பல்வேறு மாநிலங்கள், கேரளாவிற்கு நிதி உதவி அறிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதிக்கு பிறகு கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகள் வரத் தொடங்கின. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.5.6 கோடி நிவாரண நிதி திரண்டது.

    இதுவரை முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் ரூ.714 கோடி சேர்ந்துள்ளது. இதில், வங்கிகள் மூலம் மட்டும் ரூ.132.62 கோடியும், பேடிஎம் மூலம் ரூ.43 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் ரூ.518.24 கோடியும் நிதி திரண்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலகத்திலும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இங்கு மட்டும் ரூ.20 கோடிக்கு நிதி வசூல் ஆகி உள்ளது. கடந்த விடுமுறை நாட்களில் வசூலான தொகையையும் சேர்த்தால் இந்த நிதி இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக திரண்டுள்ள நிதி, மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடி நிதியை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாகும். #KeralaFloods #KeralaFloodRelief  #KeralaReliefFund
    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியில் கோவை அதிவிரைவுப்படை வீரர்களின் குடும்பத்தினர் ஆர்வமாக உள்ளனர். #KeralaFloods #KeralaReliefFund
    கோவை:

    கோவை போத்தனூர் அருகே வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் மத்திய ரிசர்வ் படைக்கு உட்பட்ட அதிவிரைவுப் படை முகாம் அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கேரளாவில் கன மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வீரர்கள் அங்கேயே தங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகாமில் உள்ள வீரர்களின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து குழு அமைத்து நிவாரண பொருட்களை சேகரித்து, வெள்ளம் பாதித்த கேரள பகுதிகளுக்கு அனுப்பும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையின் பல்வேறு இடங்களில் இருந்தும், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்தும் அரிசி, பருப்பு, நைட்டி, லுங்கி உள்ளிட்ட துணிமணிகள், நாப்கின், மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை சேகரிக்கின்றனர்.


    பின்னர் அந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான பொருட்களை தனித்தனியாக பிரித்து, பேக்கிங் செய்து வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கு தனித்தனியாக லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.

    மேலும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து மருந்து, மாத்திரைகளை பெற்று தேவையானவர்களுக்கு அனுப்புகின்றனர். அதோடு மீட்பு பணிக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளின் ஆம்புலன்சுகளை உதவிக்கு கேட்டு பெற்றுள்ளனர்.

    நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளுடன் ஆம்புலன்சுகளும் சென்று மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.  #KeralaFloods #KeralaReliefFund
    ×