search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள நிவாரண நிதிக்கு சேமிப்பு தொகையை வழங்கிய 5 வயது சிறுமி
    X

    கேரள நிவாரண நிதிக்கு சேமிப்பு தொகையை வழங்கிய 5 வயது சிறுமி

    சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். #KeralaFlood #KeralaReliefFund
    சென்னை:

    சென்னை வியாசர்பாடி ஓ.பி.காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவருடைய மனைவி ரம்யா(30). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஜினிசா(5) என்ற பெண் குழந்தை உள்ளது.

    முதலாம் வகுப்பு படிக்கும் ஜினிசா, தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையான 25 ஆயிரத்து 879 ரூபாயை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். குடும்பத்துடன் கேரளா சென்று கேரள முதல் மந்திரி(பொறுப்பு) இ.பி.ஜெயராஜனிடம் வழங்கினார்கள். #KeralaFlood #KeralaReliefFund 
    Next Story
    ×