என் மலர்
நீங்கள் தேடியது "Kerala Floods"
- 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது.
- FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக் கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்ததால் FCRA இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாநிலம் இந்த அனுமதியை பெறுவது இதுவே முதல் முறை.
முன்னதாக கடந்த 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பம்பையில் இருந்து சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் இருந்த தடமே தெரியாமல் போய்விட்டது.

பெரும் சிரமத்திற்கு இடையேதான் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசிக்கும் நிலை உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை தொடங்க உள்ளது. அப்போது நாடுமுழுவதும் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் அதற்குள் சபரிமலையில் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது உள்ளது.
இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் சபரிமலைக்கு சென்று அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தற்போது சபரிமலையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முழுமையாக மண்டல பூஜைக்கு முன்பு முடிக்க திட்டமிட்டுள்ளோம். அய்யப்ப பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இவற்றை சீரமைக்க ரூ.25½ கோடி தேவைப்படும். இதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைந்து பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #sabarimala



கேரள மாநிலத்தில் கடந்த மாதம் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.
இதற்கு தமிழக அரசே காரணம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விட்டதால், அந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என அவர் தன்னுடைய குற்றச்சாட்டில் தெரிவித்து இருந்தார்.
மேலும், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கக்கோரி கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும், வெள்ளப்பெருக்குக்கு தமிழக அரசுதான் காரணம் என்று அந்த மாநில தலைமை செயலாளர் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து இருந்தார். ‘கேரள மாநில வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது காரணம் இல்லை. முல்லைப்பெரியாறில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு வந்தபோது 3 முறை எச்சரிக்கை விட்ட பின்னர் படிப்படியாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏற்கனவே அங்கு அணைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் வெளியேறிய காரணத்தால்தான் கேரளாவில் வெள்ள சேதம் ஏற்பட்டது’ என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்தை மத்திய நீர் ஆணையமும் வலியுறுத்தி உள்ளது. கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்திய மத்திய நீர் ஆணையம் அது தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகத்தில் சமர்ப்பித்தது.
48 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு:-
கேரளாவில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அதிகப்படியான மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 287 மி.மீ. மழைதான் அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த மாதம் 758 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட சுமார் 500 மி.மீ. அதிகம் ஆகும். அதிகப்படியான மழை காரணமாகவே அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையை திறந்து விட்டது காரணம் இல்லை. முல்லைப்பெரியாறு மட்டுமல்ல, எந்த அணையில் இருந்தும் அதிகளவு நீர் திறந்து விடப்படவில்லை. சரியான அளவுதான் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே, வெள்ளப்பெருக்குக்கு எந்த அணையும் காரணம் கிடையாது. மேலும், அணைகள் சரியான நேரத்துக்கு திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறானது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #KeralaFloods #Mullaperiyardam
முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.

கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார். #KeralaFlood #KVVenugopal #PMModi
கேரளாவில் வெள்ள நிவாரண பணிக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நிதி உதவிகள் வழங்கி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கேரளாவுக்கு நிவாரண நிதியும், பொருள்களும் வழங்கி உள்ளனர்.
இதுபோல ம.தி.மு.க. சார்பிலும் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்படுகிறது. இப்பொருள்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார். இதற்காக அவர் நிவாரண பொருட்களுடன் நெல்லையில் இருந்து புறப்பட்டார். இன்று காலை நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மக்களின் துயரத்தில் ம.தி.மு.க.வும் பங்கெடுத்து கொள்கிறது. இதற்காக ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்கப்படுகிறது.
இதனை நானும், ம.தி.மு.க. நிர்வாகிகளும் திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில், கேரள மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் சர்வதேச திரைப்பட கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நிதி சேமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும் கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. #KeralaFloods
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை ஆற்றில் கடந்து செல்ல வேண்டும்.
இதற்காக பம்பை ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த 2 பாலங்களும் கடந்த மாதம் கேரளாவை புரட்டிப்போட்ட பேய் மழையில் சேதமானது. மழை பெய்த போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் போக்கும் மாறியது.
இதையடுத்து பம்பை ஆற்றின் மீது புதிய பாலம் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே பாலம் அமைந்திருந்த பகுதியில் சீரமைப்பு பணி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாலப்பகுதியில் தேங்கி இருந்த மணல் அகற்றப்பட்டது.
அப்போது 5½ மீட்டர் ஆழத்தில் ஏற்கனவே இருந்த பாலம் மணல் மூடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது பாலம் ஆற்றுமணலில் மூழ்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சீரமைப்புக் குழுவினர் பாலத்தின் மீது மூடிக்கிடந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாலத்தின் உறுதி தன்மையை சோதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு பாலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்பது தெரியவரும். அதே நேரம் இந்த பாலத்திற்கு பதில் ஏற்கனவே அரசு திட்டமிட்டப்படி இங்கு புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் எத்தகைய மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டாலும் போக்குவரத்து பாதிக்காத அளவில் இப்பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகளும் நடந்து வருகிறது. #KeralaFloods
கேரள வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. சார்பில் ஏற்கனவே ரூ.1 கோடி வழங்கப்பட்டு இருந்தது. தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் 1 மாத ஊதியம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி டெல்லி மேல்சபை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளம் ரூ.96.40 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் கேரளாவுக்கு நேரில் சென்று வழங்கினார்.
கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் முதல்-மந்திரி பொறுப்பு வகிக்கும் தொழில் துறை மந்திரி ஜெயராசனிடம் மா.சுப்பிரமணியம் காசோலைகளை வழங்கினார்.
அதோடு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்கில் 50 டன் கேரள சிகப்பு அரிசியும், ஆழப்புழா மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன. குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சலுக்கு இன்று வரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறி உள்ளார். #KeralaFloods #KeralaRatFever






