search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fund"

    • திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
    • சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், சில தலைமை ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

    விதிகளுக்கு புறம்பாக பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.

    இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கீடு.
    • வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த திட்டம்.

    சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.

    • முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார்.
    • பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

    மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிதியை விடுவிக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியை காலி செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

    மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக மம்தா கூறினார்.

    அப்போது, மேற்கு வங்காளத்திற்கு வரவேண்டிய 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதி கோரப்படும்... ஏழை மக்களின் பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் என்று முழக்கத்தை எழுப்புவோம் என்று அவர் கூறினார்.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "நான் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு செல்ல உள்ளேன். டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளேன்.

    மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியிருந்தால், தனது அரசு தனது சமூக நலத் திட்டங்களின் கீழ் மேலும் பலரை இணைத்திருக்க முடியும்.

    மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை மீண்டும் திறப்பதாக உறுதியளித்த பாஜக போலல்லாமல், எனது வாக்குறுதியை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன். எங்களின் நிலுவைத் தொகையைப் பெற்றிருந்தால், பலருக்கு சமூக நலத்திட்டங்களை வழங்கியிருக்க முடியும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை, வீட்டுவசதி, ஜிஎஸ்டி வசூலில் மாநிலத்தின் பங்கு உட்பட பல்வேறு கணக்குகளில் மேற்கு வங்கத்தின் நிலுவைத் தொகை இருக்கிறது.

    ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வங்காளத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பண உதவியின் கணக்குகளை சமர்ப்பிக்கத் தவறியதால், வங்காளத்திற்கு நிதி விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டதாக மாநிலத்தின் பாஜக தலைமை அடிக்கடி கூறி வருகிறது.

    அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது அரசாங்கம் நில 'பட்டாக்களை' (பத்திரங்கள்) வழங்கும் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவதற்கு ரூ.1.2 லட்சம் வழங்கும்.

    மேலும், பழங்குடியினருக்கு எஸ்டி சான்றிதழ், சுத்தமான குடிநீர் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான அணுகல் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யப்படும்.

    பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்த வாலிபர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
    • தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமம், பெரியார் நகரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் விஷ்ணுகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர். வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட விஷ்ணுகுமாரின், தந்தை வீரமுத்துவிடம், உதவித் தொகை ரூ. 6 லட்சம் ரூபாய் (50 சதவீதம்) காசோலை யினை, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வழங்கினார்.

    முன்னதாக இந்நிகழ்வு குறித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கை கள் குறித்து, புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யாவுடன், தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    இந்நிகழ்வில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் க.ஸ்ரீதர், இலுப்பூர் வருவாய்

    கோட்டாட்சியார் தெய்வநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, குளத்தூர் வட்டாட்சியர் காமராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • திருச்சியில் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கினார்
    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன் சந்திப்பு

    கும்பகோணம், நாகை, திருவாரூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.  அப்போது அவர்,  கடந்த மாதம் 30-ந் தேதி அரிஸ்டோ மேம்பாலத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.  கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும் என்றும் சுகு கேட்டுக் கொண்டார்.

    இமாச்சல் பேரிழப்பில், மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரியலூரில் மாவட்டத்தில் ரெடிமேட் ஆடை உற்பத்திக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவியை பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இருபாலரும் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்தும் திட்டம் 2022-2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள், குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பப்படிவம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்தெடுக்கப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    • விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக புகளூர் காகித நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதியிடம் கொடுக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம், 

    விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஊரக பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திற னாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ 75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதலமை ச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் சாய்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் குழு உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி அளித்தனர்.
    • உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர்.

     பல்லடம் :

    பல்லடத்தில் நமக்கு நாமே திட்ட ஆலோசனைக் கூட்டம் வனம் இந்தியா அறக்கட்டளை கூட்டரங்கில் திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் நகரத்தின் முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ஸ்கை. சுந்தரராஜன், செயல்தலைவர் பாலசுப்பிரமணியம், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் முருகேஷ், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க காரணம்பேட்டை மற்றும் 63. வேலம்பாளையம் பகுதி கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர். இதே போல அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கமும் உறுதி அளித்தனர். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் அரசு சுமார் 5 ஏக்கர் நிலம் வழங்கினால் அந்த இடத்தில் மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தர பல்லடம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உறுதியளித்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தென்காசி:

     கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற   நிகழ்ச்சியில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 6 குழந்தைகளுக்கு பிரதரின் பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்க கையேடு, 5 வருடத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை, கல்வி உதவித்தொகை,

    பாதுகாப்பு திட்ட சான்றிதழ், ரூ. 10 லட்சத்திற்கான வைப்புநிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய தொகுப்பை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.

       நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், மா வட்ட குழந்தை பாது காப்பு அலுவலர் சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    மீன்பிடி தடைகாலத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    உடன்குடி:

    கடலில் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கி ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 31 வரையிலும் மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அப்போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95.00 கோடி வழங்கப்படும்.

    இத்திட்டத்தினை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளம் ஆணையர் டாக்டர் பழனிசாமி மற்றும்மீனவர் நலத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×