search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu munnani"

    • தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
    • சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    சனாதன பேச்சு தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு, ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2-ம் தேதி தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

    உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அதில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. ஆனால் எந்த விதமான உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என்று இந்த வழக்குகளை முடித்து வைத்தார். எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது எனவும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார். 

    • அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு பள்ளி வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகில் சுமார் 300 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு பள்ளி வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என சுமார் 300 பேர் திரண்டு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி போலீசார் பொதுமக்களையும், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சாக்ரடீஸ், விசுவஹிந்து பரிசத் மாவட்ட இணைச்செயலாளர் தங்கராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 174 பேரை கைது செய்தனர்.

    இதனையொட்டி அங்கு ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அரசு பஸ்கள் ஆறுமுகநேரியை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக செல்வதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
    • சாலையோர நடைபாதை சேதமடைந்து கிடப்பதை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் நகர இந்து முன்னணியின் புதிய நிர்வாகிகள் தேர்விற்கான கூட்டம் நடைபெற்றது.திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து முன்னிலை வகித்தார்.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசுராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி தலைவராக வெங்கடேசன், பொதுச் செயலாளராக பழனி ராஜன், பொருளாளராக விஜயபாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணைத் தலைவர்களாக சுரேஷ் கண்ணன், செல்வ குரு, ஆனந்த குமார், பாரதி ராஜா ஆகியோரும் செயலாளர்களாக மணிகண்டன், தியாகராஜன், பழனி, பரத் கண்ணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக சிவலிங்கம், ஜெகன், முருகன், மணிகண்டன், ஹரிஹரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாகனங்கள் சிக்கி திணறுவதை தவிர்க்க காலை, மாலை வேளைகளில் போலீசாரை நிறுத்த வேண்டும் என்றும் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஆறுமுகநேரியை தவிர்த்து விட்டு காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக செல்வதை போக்குவரத்து கழக அதிகாரிகள் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூருக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சாலையோர நடைபாதை சேதமடைந்து கிடப்பதை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என்றும் ஆறுமுகநேரியில் அனைத்து வார்டுகளிலும் இந்து முன்னணி கிளைகளை அமைப்பது, இந்து அன்னையர் முன்னணி சார்பில் சுமங்கலி பூஜை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது.
    • அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம்.

    நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவர்களது அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியதால் இன்று எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் இந்துக்கள், நாங்கள் கோவிலுக்கு போறோம் என்று சொல்ல வைத்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளது. சில அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரான போக்கை தொடர்ந்து வருகின்றனர். அதனை அவர்கள் கைவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை
    • அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா்

    திருப்பூர் : 

    நாங்குநேரி சம்பவத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நாங்குநேரி பள்ளி மாணவா் வெட்டப்பட்ட விஷயத்தில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இது சாதிய வன்மத்தை விதைக்க நடக்கும் சதியாகவே இந்து முன்னணி கருதுகிறது. கல்லூரிகளில் நடக்கும் பகடிவதைபோல அங்கு நடந்த மாணவா்களுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.அறிவுரை கூறி மாணவா்களை நெறிபடுத்தாமல் அலட்சியம் செய்ததற்கு பள்ளி நிா்வாகமும் ஒரு காரணமாகும்.

    நாங்குநேரியில் சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரையில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா். இந்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள அதிா்வலைகளை சமாளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபா் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா். அவா் பதவியில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற போதும் சாதிய வன்ம கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருபவா்.

    பதற்றமான இந்தச் சூழலில் ஒரு நபா் குழு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்தக் குழு தேவையற்றது. மாறாக பள்ளிகளில் நீதி நெறி, ஆன்மிக வகுப்புகளை நடத்தலாம். மேலும், மாணவா்களிடையே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகளை கவுன்சிலிங் மூலம் சரி செய்ய பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழுவை மாவட்டம் வாரியாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
    • கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி., பிரேக் தரிசன திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் பிரபலமாக உள்ள கோவில்களில் விஐபி பிரேக் தரிசனத்துக்காக ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும். இறைவன் முன்பாக ஏழை, பணக்காரன் என்று பாகுபடுத்தி கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

    இது பக்தா்களிடம் பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தும் செயலாகும். அதிலும் காா்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் தரிசனக் கட்டணமும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் ஒரு கால வழிபாடு இல்லாமல் பல ஆயிரம் கோயில்கள் மூடிக்கிடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாமர பக்தா்களின் இறைபக்தியை கேவலப்படுத்தும் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும். அதே வேளையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு கோயில்களின் முன்பாகவும் பக்தா்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
    • வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.

    கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர்.

     திருப்பூர் :

    கோவில் விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்வது போல் கபட நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து முன்னணி சாடியுள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்தனர்.சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இரு சமூகங்களிடையே பிரச்னை என்றால் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமூக பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்திருக்க வேண்டும்.

    வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் மேற்கொள்வதென்பது கபட நாடகம். வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்னை எழும் போது அதிகாரிகள் வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்துள்ளனரா? அமைதி கூட்டத்துக்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்ரீ பெரும்புதுாரில் கடந்த8 மாதத்தில், 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.
    • குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், போலீஸ்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

    திருப்பூர்:

    போலீஸ் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை மற்றும் போதையில் மூழ்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. சமீபத்தில், தூத்துக்குடி, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொடூரமாக கொல்லப்பட்டார். சேலம், ஓமலுார் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் கொலைவெறியோடு துரத்திய கும்பலிடம் இருந்து தப்பிக்க, போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து உயிர் தப்பினார். போதை பொருட்களால் குடும்பமே பாதிக்கப்பட்ட ஈரோடை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கீதா கலெக்டர் அலுவலகம் முன், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தனிநபர் சத்தியாகிரகம் செய்துள்ளார்.

    ஸ்ரீ பெரும்புதுாரில் கடந்த8 மாதத்தில், 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். பா.ஜ.க., பட்டியலின பிரிவு மாநில பொறுப்பாளர் சங்கர் கொல்லப்பட்டார். முன் பகை என காரணம் காட்டி போலீஸ்துறை கடந்து செல்வது எந்த வகையிலும் ஏற்க கூடியதில்லை. கஞ்சா முதலான போதை பொருட்கள் நடமாட்டம் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

    குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், போலீஸ்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். மது கொள்கையை விரிவுபடுத்தி மக்கள் நிம்மதியை கெடுக்க வேண்டாம். வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ெரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.

    திருப்பூர் :

    ராமேசுவரம்-தனுஷ்கோடி ெரயில் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காசியைப் போன்று மிகவும் பிரசித்தி பெற்றது ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியாகும். கடந்த 1960 ஆம் ஆண்டில் வந்த சுனாமிப் பேரலையால் தனுஷ்கோடி அழிந்தது. இதன் பிறகு அந்தத் தீவைப் புனரமைக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இதனிடையே, தனு ஷ்கோடி புனரமைக்கப்பட்டு ராமேசுவரத்தில் இருந்து ரெயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். ஆகவே, ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார்.
    • மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை பெற, மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது.

    தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து பட்டியலின சமூக மக்களும், அமைப்புகளும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது. சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துகளை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
    • தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.

    இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,

    ×