என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முருக பக்தர்கள் மாநாடு: மதவெறியை தூண்டும் வகையில் பேச்சு - அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
    X

    முருக பக்தர்கள் மாநாடு: மதவெறியை தூண்டும் வகையில் பேச்சு - அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

    • இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

    மதுரை:

    இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22-ந்தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அனுமதி தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ''மதவெறியைத் தூண்டும் அரசியல் உரைகள் கூடாது. இதனை முன்கூட்டியே காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநாட்டில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார்.

    இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசார், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மதம், இனம் குறித்து பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×