என் மலர்
நீங்கள் தேடியது "இந்துக்கள்"
- உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
- இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.
இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
"உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார்.
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,
"தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.
தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.
- ஸ்ரீராம் சேனா தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும்.
- தமிழகத்தில் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது.
இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக், "ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது. அதற்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் வாஸ்துக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு பூஜை செய்து வீடு கட்டுதல் மற்றும் கட்டிடங்கள் கட்டும்போது விரைவில் பணிகள் நிவிர்த்தி பெறும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பழமையான இந்த கோவிலில் பக்தர்கள் வாஸ்துக்கான பூஜைகள் செய்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து கடம்புறப்பாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் 250 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அப்படி எங்களை சொல்பவர்கள் இதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சர்வ மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் என்றார்.
- ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள்.
- மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.
மகாராஷ்டிராவில் 100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக malharcertification.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் நிதேஷ் ரானே இந்துக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள். இந்து மக்கள் ஹலால் மற்றும் ஹலால் இல்லாத கடைகளிலும் இறைச்சி வாங்குவார்கள். இந்நிலையில், ஹலால் இறைச்சி கடைகளுக்கு போட்டியாக இந்த புதிய நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரம்ஜான் வருவதை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக அரசு முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
- வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பெண் பாஜக எம்.எல்.ஏ. கேட்டகீ சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கேட்டகீ சிங், "ஹோலி பண்டிகை வருடத்திற்கு 1 நாள் மட்டும் தான் வருகிறது. ஆனால் வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது என சம்பல் மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தெளிவாக பேசினார். அந்த நாளில் எதாவது தவறுதலாக நடந்தால் அந்த அழுகை கும்பல் (முஸ்லிம்) தெருவில் இறங்குவார்கள். நம் மக்களை (இந்துக்களை) பார்த்து இவ்வளவு பயம் இருந்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் ஒரு மருத்துவக் கல்லூரியில், முஸ்லிம்களுக்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும்
முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லிம்கள் பழங்களில் காய்கறிகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கலப்பது போன்ற வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக சம்பல் மாவட்ட சர்க்கிள் அதிகாரி பேசுகையில், "ஹோலி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை, அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை வருடத்திற்கு 52 முறை நடைபெறும். ஹோலியின் வண்ணங்களால் யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அந்த நாளில் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர்.
திருப்பூர் :
கோவில் விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்வது போல் கபட நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து முன்னணி சாடியுள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்தனர்.சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இரு சமூகங்களிடையே பிரச்னை என்றால் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமூக பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்திருக்க வேண்டும்.
வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் மேற்கொள்வதென்பது கபட நாடகம். வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்னை எழும் போது அதிகாரிகள் வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்துள்ளனரா? அமைதி கூட்டத்துக்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
- அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தென்காசி:
தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.
- மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
- இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர்.
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
அதன்படி இன்று இஸ்லாமியர்களால் மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கிராமத்தைக் காட்டிலும் காசவளநாடு கிராம இந்து மக்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மொகரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர்.
அதன்படி இன்று இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர். பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதையடுத்து அந்த பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்தனர். பின்னர் பயபக்தியுடன் மற்ற பொதுமக்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் இன்று அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.
இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றனர்.
- கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது.
- விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. திரவுபதி அம்மன் திருக்கல்யாண அலங்காரம், கனி பறித்தல், அர்ச்சுனன் தபசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் ஆகிய வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 9-ம் திருநாளான நேற்று சேனைத்தலைவர் சமுதாயத்தினர் சார்பில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
காலையில் திரவுபதி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி திடலில் வேதபராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு பூக்குழி திடலை அடைந்த உடன் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
- ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.
நெல்லை:
ஆடி அமாவாசை நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
நெல்லை
இதனால் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் செய்வார்கள். காசி நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டும் ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.
தர்ப்பணம்
அவர்கள் படித்துறையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.
இதற்காக குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் வந்திருந்தனர். ஏற்கனவே காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதால் அங்கும் பஸ் போக்குவரத்து இருந்ததால் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
அதனை அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் சரி செய்தனர். இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.
இதனால் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் படித்துறை பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களும் முன்எச்சரிக்கையாக பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே அருவிக்கரைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மெயின் அருவியில் மிகவும் குறைந்த அளவே பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுந்தது. ஆனாலும் குற்றாலம் அருவி கரையை சுற்றிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.
- கருப்பர் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
- பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி கிராமம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா, மற்றும் கந்தூரி விழாவில் இந்துக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
அதனடிப்படையில் கரிசல்பட்டியில் வஞ்சினி கருப்பர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த நிலையில் வருடாபிஷேக சிறப்பு பூஜையும் வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது.
வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழா அன்னதானத்தை முன்னிட்டு கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து கிராம மக்கள் அழைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பட்டு உள்ளிட்ட இந்துக்களின் வழிபாட்டு சீர்வரிசை எடுத்து வந்து மதநல்லிணக்க திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஜமாத்தார்களுக்கு ஊர் மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வு இந்த பகுதி பாரம்பரியத்தையும் சகோதரத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல் சிங்கம்புணரி அருகே நாகமங்கலத்தில் தாருல் ஹைராத் மதரஸத்துன் நிஸ்வான் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.
இதில் பங்கேற்ற இந்துக்கள் மந்தையம்மன் கோவிலிலில் இருந்து பள்ளிவாசலுக்கு இனிப்புகள், பழங்களுடன் ஊர்வலமாக சீர் வரிசை கொண்டு வந்தனர்.
புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
- இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
- இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல
நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-
இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.
எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.
இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.






