என் மலர்
நீங்கள் தேடியது "வங்கதேசம்"
- பி.என்.பி. கட்சி தலைவரான கலிதா ஜியா கடந்த மாதம் இறுதியில் காலமானார்.
- லண்டனில் இருந்து 17 வருடத்திற்குப் பிறகு அவரது மகன் தாரீக் ரகுமான் வங்கதேசம் திரும்பி பதவியை பெற்றுள்ளார்.
வங்கதேச தேசியவாத கட்சி தலைவரான கலிதா ஜியா உடல்நிலை சரியில்லாமல் காலமானார். தாரீக் ரகுமான் பி.என்.பி. கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், அவரது தாயார் காலமான நிலையில் தாரீக் ரகுமான் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிலைக்குழு, தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தாரீக் ரகுமான் லண்டனில் இருந்து கடந்த மாதம் 25-ந்தேதி 17 வருடங்களுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பினார். அவரது தாயாரும், வங்கதேசத்தின் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவருமான கலிதா ஜியா டிசம்பர் 30-ந்தேதி காலமானார். அவரது மறைவால் தலைவர் பதவி காலியானது. இந்த நிலையில்தான் தாரீக் ரகுமான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட தாரீக் ரகுமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.
இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகம், வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு தடையில்லை என தெரிவித்தார்.
- வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு அமைந்தது
- வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை வங்கதேசம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வருகிற 29-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2012-ம் ஆண்டு டாக்கா- கராச்சி இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.
- இந்திய வான்வழியை வங்கதேசம் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சேவை தொடங்க இருக்கிறது. வருகிற 29-ந்தேதியில் இருந்து விமான சேவை தொடங்க இருக்கிறது.
முன்னதாக துபாய் அல்லது தோஹாக வழியாக விமானங்கள் இயக்கப்பட்டது. டாக்கா- கராச்சி இடையில் 2370 கி.மீ, தூரம் ஆகும். இந்திய வான்வழியாக விமான சேவை இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், வங்கதேச அரசு இயக்கும் பிமானம் வங்கதேசம் ஏர்லைன்ஸ் இந்தியாவிடம் இன்னும் அனுமதி வாங்கவில்லை.
வாரத்திற்கு இரண்டு முறை விமானம் இயக்கப்பட இருக்கிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து வங்கதேசம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. டிப்ளோமேட்டிக், வர்த்தகம், மக்களுக்கு இடையிலான தொடர்பை கட்டமைப்பு பேச்சுவாத்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது துபாய் அல்லது தோஹாக வழியாக செல்ல 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஆகும். சில விமான நிறுவன விமானங்கள் 18 மணி முதல் 22 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். தற்போது நேரடி சேவை மூலம் இந்த நேரம் மிகவும் குறையும்.
- வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
- இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மேற்கு வங்க தொழிலாளர்கள் 8 பேர் மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 இஸ்லாமியத் தொழிலாளர்கள், ராய்ப்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தனர்.
நீண்ட நாட்களாகத் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகையை அவர்கள் கேட்டபோது, பேக்கரி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த பஜ்ரங் தளம் அமைப்பினர் வந்து, அவர்களை வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகப் பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் 18 நாளில் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.
இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
நேற்று ஜெஸ்ஸோர் மாவட்டம் ஆருவா கிராமத்தைச் சேர்ந்த ராணா பிரதாபை (35) மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஷிவ்பூர் உப மாவட்டம் நர்சிங்கடி நகரைச் சேர்ந்தவர் சரத் சக்ரவர்த்தி மணி (40). இவர் சார் சிந்தூர் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு கடையில் இருந்த அவரை மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த சரத் சக்ரவர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டுச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
சரத் சக்ரவர்த்தி மணி தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு, சில ஆண்டுக்கு முன் வங்கதேசத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் கடந்த 18 நாட்களில் இந்துக்கள் கொல்லப்பட்ட 6-வது சம்பவம் இதுவாகும். இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
- வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
வங்கதேசத்தில் ராணா பிரதாப் பைராகி என்ற 45 வயதுடைய இந்து பத்திரிக்கையாளர், இன்று (ஜன.5) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், ராணா பிரதாப்பின் தலையில் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து 7 காலித் தோட்டாக்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஜெசோர் மாவட்டத்தின் மணிரம்பூர் பகுதியில் உள்ள கோபாலியா சந்தையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராணா பிரதாப் நரைல் மாவட்டத்தை மையமாகக் கொண்ட 'பிடி கோபோர்' (BD Khobor) என்ற நாளிதழின் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மேலும், அப்பகுதியில் பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
ஜஷோரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பிரதாப் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், தீவிரவாதக் குழுவுடனும் தொடர்பு இருப்பதாகவும், இந்தக் கொலைக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது என்றும் அந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் அபுல் காஷேம் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் முதல் இதுவரை வங்கதேசத்தில் ஐந்து இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
- வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்கா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட வங்கதேச அணி விவரம் வருமாறு:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் , சைப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, ஷயிப் உதின், ஷோரிபுல் இஸ்லாம்.
- முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
- ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?
IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.
- ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
- ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காகக் கிரிக்கெட்டை பலிகடா ஆக்கக்கூடாது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது.
பிசிசிஐ-யின் கட்டளையை ஏற்று, 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது.
ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் 15 நாளில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஷரியத்பூர் மாவட்டத்தில் மேலும் கோகோன் சந்திர தாஸ் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் தெருவில் உருண்டு புரண்டபடி வலியில் அலறி துடித்தார். அருகில் இருந்த குளத்தில் அவர் குதித்தார். உடல்நிலை மோசமான காரணத்தால் டாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்று நாள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திர தாஸ் உயிரிழந்தார்.
- வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.
- அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் அம்மாநில போலீசார் சிலர் அதிரடியாக நுழைந்து அங்கு யாராவது வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசிக்கிறீர்களா? என சோதனையிட்டனர்.
இதன்போது ஒரு போலீஸ், அங்கு வசிக்கும் ஒருவரின் முதுகை தனது செல்போனில் ஸ்கேன் செய்து போல தேய்த்து நீ வங்கதேசத்தை சேர்த்தவன் என இதில் காட்டுகிறது என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், போலீஸ்காரர், அந்த நபரின் முதுகில் மொபைல் போனை வைத்து, சூப்பர் மார்க்கெட் பார்கோடு ஸ்கேனர் போல தேய்க்கிறார். அந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விலாசம் இதன் மூலம் தெரிந்துவிடும் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி இன்று, செய்தியாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் 23 அன்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரி (SHO) தலைமையிலான போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர்.
எங்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டனர். நாங்களும் ஆவணங்களைக் காட்டினோம்.
வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் எங்களிடம் கிண்டலாகக் கூறினர்.
ஆனால் உண்மையில் அங்கே எந்த இயந்திரமும் இல்லை. அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என்பது தெரிந்துவிடும் என்று கூறினர்.
நாங்கள் 1986 முதல் இங்கே வசிக்கிறோம். எங்கள் பூர்வீகம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ஆகும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு போலீசார் அங்கிருந்து சென்றனர்" என்று தெரிவித்தார்.
போலீசாரின் இந்த செய்கை, மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து உண்மையையே வரவழைக்கவே இவ்வாறு செய்ததாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தனது செயலுக்கு நியாயம் கூறியுள்ளார்.






