என் மலர்
நீங்கள் தேடியது "முகமது யூனுஸ்"
- இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
- அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் திங்கள்கிழமை ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஸ்லிமா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், "நாசவேலையில் ஈடுபட்டவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனாவை குற்றவாளி என அறிவிக்கும் யூனுஸ் அரசு, அதே செயல்களைச் தாங்கள் செய்யும்போது அவற்றை நீதியானவை என்று அழைக்கிறார்கள்.
யாராவது நாவேலைச் செயல்களைச் செய்தால் தற்போதைய அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிடும்போது, அரசாங்கம் தன்னை ஒரு குற்றவாளி என்று கூறுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்?
ஜூலை மாதம் நாசவேலைச் செய்த பயங்கரவாதிகள், மெட்ரோவுக்கு தீ வைத்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், காவல்துறை அதிகாரிகளைக் கொன்றவர்கள் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?வங்கதேசத்தில் நீதியின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மாணவர் போராட்டங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது. தனது மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று ஹசீனா குற்றம் சாட்டினார்.
அதேநேரம், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று முகமது யூனுஸ் கருத்து தெரிவித்தார்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக வந்த இந்தத் தீர்ப்பு, வங்கதேச அரசியலில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
முகமது யூனுஸ் ஆட்சியில் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினராக இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் யூனுஸ் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டது.
- இந்த திட்டத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் வங்கதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார்.
தான் வாழ்வதற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து அவாமி லீக் ஆட்சிக் கவிழ்ந்து ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்கிறது.
மக்கள் மீது படைகளை ஏவி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட மனிதாபிமான மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஷீக் ஹசீனா பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசம் தேர்தல்களை சந்திக்கவுள்ள நிலையில், ஷேக் ஹசீனா யூனுஸ் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் வங்கதேசம் இந்தியாவுடன் சுமூகமான உறவில் இருந்த நிலையில் தற்போது முகமது யூனுஸ் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அங்கில ஊடகத்திற்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முகமது யூனுஸின் நிலைப்பாடுதான் இந்தியாவுடனான வங்கதேச உறவுகள் மோசமடையக் காரணம்.
யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார். இது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவை மோசமாக்கும்.
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், சட்ட ரீதியான ஒடுக்குமுறைகள் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கிற்கு காரணம். இதுபோன்ற செயல்பாடுகளை வங்கதேச மக்கள் விரும்பவில்லை. இருநாடுகளிடையேயான உறவு மிகவும் ஆழமானது. இந்தியா எங்களின் உண்மையான நட்பு நாடு என்பதில் பெருமை கொள்கிறோம்.
இத்தனை நாட்கள் பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆட்சியில் இருந்தபோது மக்களைத் தாக்க படைகளுக்கு நான் உத்தரவிட்டேன் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். இருப்பினும், வங்கதேசத்தில் இப்போது சுதந்திரமான நீதித்துறை அமைப்பு இல்லை.
அவாமி லீக் கட்சி முறையற்ற காரணத்திற்காக தடை செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக அதை எதிர்த்துப் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
- மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
- இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என அடிப்படைவாத அமைப்புகள் எதிர்த்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை ரத்து செய்வதாக வங்கதேச கல்வித் துறை அதிகாரி மசூத் அக்தர் கான் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
- தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.
- து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார்.
அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.
இந்நிலையில் முகமது யூனுஸ், சாஹிர் மிர்சாவுக்குப் பரிசாக அளித்த புத்தகத்தின் அட்டைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய 'கிரேட்டர் பங்களாதேஷ்' பகுதியாக வங்கதேசம் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்கள் குறித்து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
- இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தால் இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதன் பின், 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசை தேர்ந்தெடுக்க அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டின் சிறுபாண்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்துக்கள் வீதிகளில் திரண்டு போராட்டங்களும் நடத்தினர். இதுகுறித்து இந்திய அரசும் கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்த இந்திய ஊடகங்களின் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றும் முகமது யூனுஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க செய்தியாளர் மெஹ்தி ஹாசன் உடனான நேர்காணலின்போது அவர் இதை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல என்று அவர் கூறினார்.
இந்துக்கள் மீதான தாக்குதல் செய்திகள் தவறானவை என்றும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் முகமது யூனுஸ் தெளிவுபடுத்தினார்.
- வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது.
- கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முகமது யூனுஸ் கூறியதாவது:-
வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது. ஏனென்றால், ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்த கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.
இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பின. இது பதட்டத்தை மேலும் மோசமடைய வழிவகுத்தது. இந்தியாவில் இருந்து ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வந்தன. அந்த வீடியோக்களில் மாணவர்களின் போராட்டத்தை இஸ்லாமிய இயக்கம் எனக் கூறின.
பிரச்சனையை உருவாக்கிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியா- வங்கதேசம் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது.
இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
- வங்கதேசத்தில் கடந்த வருடம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- தற்போது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருந்து வருகிறார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி, ஆட்சியை கவிழ்த்து ஒரு வருடம் நிறைவு அடைந்த நிலையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தொலைகாட்சியில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது "இடைக்கால அரசின் சார்பில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் பாதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்காளதேச இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
- தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.
டாக்கா, ஜூன்.9-
வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதையடுத்து வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்தியா-வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்கதேசம் இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேசம் மக்களுக்கும், இடைக்கால அரசின் தலை வர் முகமது யூனுசுக்கும், பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஸ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
வங்காளதேச இடைக் கால அரசின் எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இந்தியா, வங்காளதேசம் ஆகிய 2 நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
- ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
- வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என்றார்.
டாக்கா:
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதன்பின், ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால தலைவர் யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை குடிமக்களுக்கு அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
- விடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.
- 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' ஆக்கப்பட்டுள்ளனர்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.
சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால அரசாங்கம் 'தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்' திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்குக் காரணமானவிடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.இது ஒரு தனி நாட்டை உருவாக்க வழிவகுத்தது.
விடுதலை காலத்தில் வங்கதேச அரசாங்கத்தில் இருந்தவர்கள், சுதந்திரப் போராளிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் தற்போது இடைக்கால அரசால், 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' ஆக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் நீக்கப்பட்டாலும், அவரின் சுதந்திரப் போராட்ட வீரர் அந்தஸ்து தக்கவைக்கப்பட்டுள்ளது.
- அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உதவியைப் பெற்றார்.
- பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம்.
வங்கதேசத்தில் ராணுவத்திற்கும் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இராணுவம் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், அழுத்தம் கொடுக்கப்பட்டால் பதவி விலகுவதாக யூனுஸ் அச்சுறுத்தினார்.
இத்தகைய அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாதிகளின் உதவியுடன் யூனுஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவும், அவருக்கு பின்னால் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகவும் ஹசீனா கூறினார்.
தனது பேஸ்புக் பதிவில் ஷேக் ஹசீனா இந்த கருத்துகளை தெரிவித்தார். "அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உதவியைப் பெற்றார்.
அமெரிக்கா செயிண்ட் மார்ட்டின் தீவை விரும்பியபோது, என் தந்தை அதற்கு உடன்படவில்லை. அவர் தனது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனது விதியும் அப்படியே. ஏனென்றால் அதிகாரத்தில் நீடிக்க நாட்டை விற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் இன்று என்ன ஒரு துரதிர்ஷ்டம். அப்படிப்பட்ட ஒருவர் ஆட்சியில் உள்ளார். அவர் வங்க தேசத்தை அமெரிக்காவிற்கு விற்றுக் கொண்டிருக்கிறார். வங்கதேசத்தில் தனது கட்சிக்கு தடை விதித்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
வங்கதேசத்தின் மண்ணின் ஒரு அங்குலத்தைக்கூட யாருக்கும் விட்டுக்கொடுக்கும் நோக்கம் யாரிடமும் இருக்க முடியாது. ஒரே ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். பலர் கைது செய்யப்பட்டனர், இப்போது வங்கதேச சிறைகள் காலியாக உள்ளன. இப்போது வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் ஆட்சி செய்கிறார்கள்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாம் அடைந்த நமது மாபெரும் வங்காள தேசத்தின் அரசியலமைப்பு ஒரு தீவிரவாதத் தலைவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது" என்று ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
யூனுஸ் தலைமை ஆலோசகர் பதவியை வகிப்பதற்கு எந்த அரசமைப்பு உரிமையும் இல்லை என்று ஹசீனா தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 2024 இல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு கிடைத்து வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏற்பட்ட மாணவர் போராட்டங்களினால் ஷேக் ஹசீனா ஆட்சி கழிவிக்கப்பட்டு அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.






