என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் போராட்டம்"
- அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டது.
- இந்த திட்டத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் வங்கதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக அழுத ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கிடையே, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்தது.
பல்கலைக்கழகத்தில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு நீடித்ததால், காலாப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி 24 மாணவ-மாணவிகளை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா, பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
- போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் குருகிராமை சேர்ந்த ஜோதி ஷர்மா (21 வயது) நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜோதி ஷர்மா எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மனரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் நீண்ட காலமாக இந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஜோதி தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.
இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜோதியின் பெற்றோர் பல் மருத்துவத்துறை HODயை கன்னத்தில் அறைவது பதிவாகி உள்ளது.
பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார்
- பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் கொலம்பியா பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் சில உத்தரவுகளை ஏற்றது. அதன்படி பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
இந்த நிலையில் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த பல்கலைக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அடிபணிந்து உள்ளது.
- அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
- போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த பழைய உரையாடலின் ஆடியோ ஒன்று லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 5 தனது பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். மாணவர் போராட்டங்களை ஒடுக்க ஷேக் ஹசீனா மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது வெளியான ஆடியோவில், ஷேக் ஹசீனா, போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை எங்கு பார்த்தாலும் சுடவும் பாதுகாப்புப் படையினரிடம் ஹசீனா கூறுவதைக் கேட்க முடிகிறது.
பிபிசி உறுதிப்படுத்திய ஆடியோவின்படி, அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
இந்த ஆடியோ, ஜூலை 18 அன்று டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.
இந்த அழைப்பிற்குப் பிறகு டாக்கா முழுவதும் இராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் பதிவுகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.
தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர். ஷேக் ஹசீனா தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார்.
குற்றவாளிஎன நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
- பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர்.
- சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர்.
தக்கலை:
தக்கலை அருகே பத்மனாபபுரம் கோட்டையை ஒட்டி கல்குளம் அரசு தொடக்க பள்ளி சுமார் 70 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக அரசு பழைய பள்ளி கட்டிடம் இருந்தால் அகற்ற ஆணை பிறப்பித்து புதிய கட்டிடம் கட்ட திட்ட பணிகள் தயாரிக்கபட்டு கடந்த மார்ச் மாதம் கட்டிடம் இடிக்கப்பட்டது.
இந்த பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.
ஆனால் சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து அடிப்படை வசதிகள் கேட்டு திடீரென பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் அறிந்து தக்கலை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார்.
- அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
பாலியல் சீண்டல், தொல்லைகளில் இருந்து பெண்களை, குழந்தைகளை, மாணவிகளை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் வியாபித்துள்ள இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எந்திரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தினமும் ஆங்காங்கே அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறத் தான் செய்கிறது. அப்படி ஒரு கொடுமை நாகையிலும் நடந்துள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறு இயல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையாடல் விபரம் வருமாறு:-
ஆசிரியர்: ஹலோ, நான் பேசுறது கேட்குதா?
ஆசிரியர்: நீ என் வீட்டுக்கு வா...
மாணவி: இல்ல சார், என்னால வர முடியாது. எனக்கு மென்சஸ் சார், வலி அதிகமா இருக்கு
ஆசிரியர்: பரவாயில்ல வா, நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு எத்தனாவது நாள்
ஆசிரியர்: வாடா தங்கம், என்ன புரிஞ்சிக்க மாட்டியா. ஒண்ணும் பிரச்சினையில்ல வா...
மாணவி: இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்ருங்க சார், இனி என்மேல எந்த புகாரும் வராம பாத்துக்கிறேன் சார்.
ஆசிரியர்: பிரச்சினை பெரிசாயிக்கிட்டே இருக்கு, அதனாலதான் உன்ன கூப்பிட்டு வார்ன் பண்ண வீட்டுக்கு கூப்பிடுறேன், வா
மாணவி: (அழுது கொண்டே) இல்ல சார், எனக்கு பயமா இருக்கு
ஆசிரியர்: என்னடா பயம், அழாத உடனே கிளம்பி வா...
மாணவி: இந்த பிரச்சினையை இதோட விட்ருங்க சார்
இவ்வாறு உரையாடல் நீளுகிறது.
இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளை அருகில் அழைத்து தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த வகையில்தான் எல்லை மீறிய ஆசிரியர் சதீஷ், மாணவியை வலுக்கட்டாயமாகவும், மிரட்டும் தொணியிலும் தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும், அதனை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ஆசிரியர் சதீஷ் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த புகார் கலெக்டர் அருண்தம்புராஜூக்கு சென்ற நிலையில் சமூக நலத்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர். அதனை கலெக்டரிடமும் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை டவுன் போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த ஆசிரியர் சதீஷ் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதற்குள் தனது காம லீலைகளை மாணவிகளிடம் வக்கிரத்துடன் காட்டி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
- பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் - உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் பிரிவில் சுற்றுவட்டார பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் இன்று காலை சரியான நேரத்திற்கு இயக்கப்படாத அரசு நகர பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
- சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகவும், ஜாதி ரீதியாகவும் பேசி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அந்த பேராசிரியர் மாணவிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியானது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
- முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியின் முதல்வராக ரெமா உள்ளார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர்.
இதனால் கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் கேரள உயர் கல்வித்துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது.
கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கல்லூரி முதல்வர் ரெமாவையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
கொழும்பு:
இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பில் உள்ள கல்வி அமைச்சக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மூடிக்கிடக்கும் பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
- மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
- முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வராக ரெமா செயல்பட்டு வந்தார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடிநீர் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர். இதனால் கல்லூரி முதல்வர், மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தகவல் கேரள உயர் கல்வி துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது. கேரள உயர் கல்வி துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரெமாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






