என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student protest"

    • பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
    • இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

    போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.   

    • அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தின் குருகிராமை சேர்ந்த ஜோதி ஷர்மா (21 வயது) நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோதி ஷர்மா எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மனரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், "அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் நீண்ட காலமாக இந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஜோதி தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.

    இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜோதியின் பெற்றோர் பல் மருத்துவத்துறை HODயை கன்னத்தில் அறைவது பதிவாகி உள்ளது.

    பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார்
    • பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் கொலம்பியா பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் சில உத்தரவுகளை ஏற்றது. அதன்படி பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.

    இந்த நிலையில் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த பல்கலைக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அடிபணிந்து உள்ளது.

    • அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
    • போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த பழைய உரையாடலின் ஆடியோ ஒன்று லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 5 தனது பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். மாணவர் போராட்டங்களை ஒடுக்க ஷேக் ஹசீனா மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் தற்போது வெளியான ஆடியோவில், ஷேக் ஹசீனா, போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை எங்கு பார்த்தாலும் சுடவும் பாதுகாப்புப் படையினரிடம் ஹசீனா கூறுவதைக் கேட்க முடிகிறது.

    பிபிசி உறுதிப்படுத்திய ஆடியோவின்படி, அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.

    இந்த ஆடியோ, ஜூலை 18 அன்று டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.

    இந்த அழைப்பிற்குப் பிறகு டாக்கா முழுவதும் இராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் பதிவுகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

    போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும்  குழு கண்டறிந்துள்ளது.

    தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர். ஷேக் ஹசீனா தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார்.

    குற்றவாளிஎன நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.  

    • மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
    • மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    மணிப்பூர்:

    மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர் களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் மணிப்பூரில் உள்ள கவுபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதில் பா.ஜனதா கட்சி அலுவலகம் எரிந்தது. மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும், வாகனங்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. "குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவர் தற்போது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூத்த போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். அவர் மணிப்பூரில் வன்முறையை தடுக்க அந்த மாநிலத்தில் பணியாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது போலீசில் புகார் செய்தனர்.
    • டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்தார்.

    வாலிபர் மாணவியை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வாலிபரை கண்டித்தனர்.

    இருப்பினும் வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது நேற்று மாலை வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாணவி தனது பெற்றோருடன் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். மாணவியை சமாதானம் செய்தனர். பின்னர் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக கூறி போராட்டம்.
    • கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை- ஆளுநர் குற்றச்சாட்டு

    கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    இதனால் கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். அப்போது கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், "இது முதல்வரின் சதி. எனக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார். அரசியலமைப்பு சீர்குலைவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது" என்றார்.

    பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரள மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
    • அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு வெளியாகும்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

    வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது.

    நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடா்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

    • ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
    • கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ளது

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களைக் கட்டுப்படுத்தக் கோரி தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து மாணவர் அமைப்பை சேர்ந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களமாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.

    அப்போது சிஆர்பிஎப் வீரர்களின் கான்வாய் வாகனத்தின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும்  உள்ளிட்ட கோஷத்தை  அவர்கள் எழுப்பி வருகின்றனர்.முன்னதாக வங்கதேசத்தில் ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனா அரசை கண்டித்து அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

    மணிப்பூர்:

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.


    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனால் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தடை தளர்த்தப்பட்டு அங்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தலைநகர் டாக்காவில் பேரணியாக சென்றனர்.
    • அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதற்கிடையே வங்காளதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் அளித்த பேட்டியில், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான ஆவண ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூறினார்.

    இதனால் அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபர் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவுக்காக போராடிய மாணவர் இயக்கத்தினர் வலியுறுத்தி தலைநகர் டாக்காவில் பேரணியாக சென்றனர். அதிபர் மாளிகையை நோக்கி அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.

    பின்னர் இரவு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புகளை உடைத்து அதிபர் மாளிகைக்குக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை தடுத்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே போராட்டக்காரர்களை தடுக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    போராட்டக்காரர்கள் கூறும் போது, `ஹசீனா அரசின் கூட்டாளியான தற்போதைய அதிபர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

    அவர் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தால், அதிபர் பதவியை வகிக்க அவர் தகுதியுள்ளவரா என்பதை இடைக்கால அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றனர். 

    • இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர்.
    • சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் கொல்லப்பட்டார்

    இட ஒதுக்கீடும் மாணவர்கள் போராட்டமும் 

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

     

    ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு 

    இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

     

    பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.

     

     

    இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர். வங்கதேச பிரச்சனையால் அங்கிருந்து சாறை சாரையாக மக்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதும், நிலைமையை சமாளிக்க அங்கு குவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறின.

    முகமது யூனுஸ் 

    ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

    குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

     

    ஆனால் வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

    சிறுபான்மையினர் மீதான வன்முறை 

    யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. சிறுபான்மையினரின் [இந்துக்களின்] வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன. அக்டோபர் தொடக்கத்தில்  துர்கா பூஜை முதல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. இந்துக்கள் பரவி வாழும் இடங்களில் இன்றைய தேதியும் பதற்றமான சூழலே நிலவுகிறது.

    சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு வெகு மக்கள் இடையே பரப்படுவதும், பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளாக தங்களை வரையறுத்துக்கொள்ள்ளும் மத அடிப்படைவாத அமைப்புகளும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமாக அமைகின்றன.

     

     

    இதற்கு எதிராக இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தாமலும் இல்லை. அப்படி இந்துக்களை போராட்டங்களுக்கு தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த மதகுரு சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் ஒருவர்  நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

     

    தற்போது அவருக்காக எந்த வக்கீலும் ஆஜராக முன்வராத நிலையில் அவரது ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறிவைக்கப்படுவதற்கு இந்தியாவும் சர்வதேச நாடுகளும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளன.

    ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதே வங்கதேச இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதையே வலியறுத்தி உள்ளார். 

    ×