search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BDS"

    • வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
    • அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு வெளியாகும்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

    வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது.

    நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடா்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன.
    • அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் குறைந்த கட்டணத்தில் சேர முடியும்.

    கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் அதிக மதிப்பெண் பெற்ற னர். அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் தமிழக மாண வர்கள் 8 பேர் இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும். 720க்கு 720 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் 600க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டு 1538 பேர் மட்டும் எடுத்து இருந்தனர். அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்தார்.

    நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் புதிய மருத்துவ கல்லூரி அல்லது தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படாததால் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடினமான சுழல் இந்த வருடம் நிலவக்கூடும்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ள 3 சுயநிதி நிறு வனங்கள் உள்பட 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன.

    புதிதாக மருத்துவ இடங்கள் அதிகரிக்காததால் கடந்த வரும் இருந்த அதே இடங்களுக்கு அதிகளவில் மதிப்பெண் குவித்தவர்கள் எண்ணிக்கை கூடி உள்ள தால் கட்-ஆப் மதிப் பெண் உயருகிறது. இது மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடினமான நிலையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

    செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்ட 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 400 இடங்கள் கிடைத்து இருந்தால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

    கூடுதலாக இடங்கள் வந்திருந்தால் கட்-ஆப் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால் அதற்கு இந்த ஆண்டு வாய்பப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த வருடம் மருத்துவ இடங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.

    • நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்
    • தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது.

    அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் 36 மையங்களில் 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

    • தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
    • தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

    2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் இன்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்து 58 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை மிகவும் ஆர்வமுடன் எழுதினார்கள்.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

    நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.

    மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    அவ்வாறு 1.30 மணிக்குள் வந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வருகை தந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

     தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், கைப்பை, பிரேஸ்லெட், செல்போன், மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்சுகள், கைக்கடிகாரம், நகைகள், உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ஷூ அணிந்து வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எளிதில் தெரியும் படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.

    மேலும் முறைகேடுகளை தடுக்க தேர்வு அறையில், தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

    • தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
    • புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 3 கட்ட கலந்தாய்வு முடிந்து தற்போது இறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

    மாநில அரசின் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்களில் சேராமல் காலாவதியாகும் 34 இடங்களுக்கு இறுதி சுற்று கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதற்கான விவரங்கள் மருத்துவ கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி வருகிற 30-ந்தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மத்திய மருத்துவ குழு 3 கட்டமாக கலந்தாய்வை நடத்தி முடித்துள்ளது. இதில் நாடு முழுவதும் 1640 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 872 ஆகும்.

    தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 59 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 1 டஜன் இடங்கள் நிரம்பவில்லை.

    அகில இந்திய அளவில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ந்தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் அல்லது சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை 30 வரை குறைக்க மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

    இதுகுறித்து மருத்துவ கல்வி பயிற்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:-

    அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 872, எய்ம்ஸ், ஜிப்மர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் 44 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை ஒப்பிடுகையில் ஐந்தில் இரண்டு பங்கு இடங்கள் மட்டுமே நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ளவை. மேலும் 44 இடங்கள் என்.ஆர்.ஐ. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ளன.

    கிட்டதட்ட 50 சதவீத காலி இடங்கள் அரசு கல்லூரிகளில் உள்ளன. முந்தைய சுற்றுகளில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு "இலவச வெளியேறுதல்" மற்றும் ஒத்திவைக்கப்படாத கவுன்சிலிங் செயல்முறை ஆகியவற்றால் காலி இடங்கள் அதிகளவில் உருவாகி உள்ளன.

    புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் இந்த கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யாவிட்டால் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ள கல்லூரிகளில் சேரவில்லை என்றால் இந்த உயர் தேவை இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்.

    மத்திய மற்றும் மாநில கலந்தாய்வில் இடங்கள் தடைபடுவதை தவிர்க்க மாநிலங்கள் கலப்பின கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கூறுகின்றனர்.

    • வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும்.
    • வருகிற 31-ந் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2023-24 கல்வியாண்டு மாணவா் சோ்க்கைகான முதல் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது.

    அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியே நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ், 818 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்த நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேதி தொடங்குகிறது.

    இதுதொடா்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    2-ம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவா்கள் வருகிற 21-ந் தேதி காலை 10 மணி முதல் 22-ந் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

    வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதைத் தொடா்ந்து வருகிற 31-ந் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்டம்பா் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பா் 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை நிறைவடைந்து உள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மருத்துவ இடங்கள் பெற்று சோ்க்கை ஆணை பெற்றவா்கள் நேற்று மாலைக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலா் முத்துசெல்வன் கூறுகையில், கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.

    அதை ஏற்று, மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
    • முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6226 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25-ந் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

    அரசின் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து லாக் செய்தனர். நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் கொஞ்சம் காலியாக உள்ளன.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. 11-ந் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு தான் எத்தனை பேர் கல்லூரிகளில் சேரவில்லை என முழுமையாக தெரியவரும்.

    அதில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் மொத்தம் 4 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

    இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங்கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர்.

    இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணை நாளை (6-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

    ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெற்றுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவ-மாணவிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

    அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் முதல்வர்கள் பின்பற்ற வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் அனைத்து அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    7.5 சதவீத அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை பெற்றுள்ள மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி, உணவு கட்டணம், புத்தகம், வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழக பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் உள்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

    கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் பின்பற்ற வேண்டும்.

    மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். அதனால் அவர்களது விண்ணப்பத்தை உயர்கல்வி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் எவ்வித கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
    • இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

    சென்னை:

    2023-24-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி தொடங்கியது.

    பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கலந்தாய்வில் பங்குபெற்று விருப்ப இடங்களை 20 ஆயிரத்து 83 மாணவ-மாணவிகள் தேர்வு செய்து இருக்கின்றனர்.

    இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

    • நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
    • சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இதற்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 27-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    பொது கலந்தாய்வில் பங்கேற்கின்ற மாணவ-மாணவிகள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி வரை மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்து லாக் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரேங்க் பட்டியலில் 1-ல் இருந்து 25,856 வரை உள்ள நீட் மார்க் 720-ல் இருந்து 107 வரை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு தாமதம் ஆகிறது. இன்று வரவேண்டிய முடிவு தள்ளிப்போவதால் அதில் இடம் கிடைக்காதவர்கள் தமிழக மாநில ஒதுக்கீட்டு இடங்களை பெற வரக்கூடும்.

    அதனால் தமிழக மாணவர்களின் நலன் கருதி இடங்களை தேர்வு செய்வற்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    31-ந்தேதி மாலை வரை இடங்களை தேர்வு செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    3-ந்தேதி மாலை 5 மணி வரை கூடுதலாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.
    • நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326.

    இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 1768 ஆகும்.

    அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தேசமாக 25-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்குவதை பொறுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். அதனால் அந்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு தொடங்கியது. இன்று இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 822 இடங்கள் போகிறது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 762 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் இருந்து 23 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 37 இடங்களும் கொடுக்கப்படுகிறது.

    நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக தொடங்குகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடத்தப்படும்.

    அவை எந்தெந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் மருத்துவ கல்லூரி இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

    ×