என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Ma Subramanian"
- புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
- சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் உணவு வழங்கினார்.
அடையார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சைதாப்பேட்டை பாலம் அருகே உள்ள சிறிய சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதிகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
சுப்பிரமணிய சாலை, திருவள்ளுவர் சாலை, ஜாபர்கான்பேட்டை, ஆட்டுதொட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.
தண்ணீரால் சூழப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்து போக்குவரத்து சகஜமாகி விட்டதாகவும், ஆற்றங்கரையோரம் உள்ள தெருக்களில் மழை நீர் மெல்ல வடிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி ஆகியோர் பணிகளை மேற்கொள்வார்கள்.
- 12 மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள், அதிகாரிகள் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சென்னை:
'மிச்சாங்' புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், முத்துசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொள்வார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அமைச்சர் காந்தி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பொறுப்பு அமைச்சர்களாக இருந்து கண்காணிப்பார்கள்.
கடலூர் மாவட்டத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்டத்துக்கு பொன்முடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் 12 மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள், அதிகாரிகள் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
- எவ்வளவு கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வடிய வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரே ஒரு பாதிப்பு, மாம்பலம் கால்வாய் அதை எதிர்கொள்ள திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் தண்ணீரை 4 ஆயிரம் கனஅடியாக குறைக்க சொல்லி உள்ளார்.
அதனால் 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் அதாவது தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களின் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கும்.
இது சம்பந்தமான விளக்கங்களை முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.
இப்போது நாம் எவ்வளவு பெரிய கால்வாய் கட்டி இருந்தாலும், கடந்த 1 மாத காலமாக ஒவ்வொரு நாளும் 5, 6 செ.மீ. மழை பொழிந்தது. அப்போது மழைநீர் ஏதும் தேங்கவில்லை. 15 செ.மீ. மழை பெய்திருந்தாலும், பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் தெரிய தொடங்கி உள்ளது.
அந்த பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய அடுத்து 2, 3 நாட்களில் வர இருக்கிற கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இன்றைக்கே பாதிப்புக்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கு பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்களை வைப்பது போன்ற பல்வேறு நிலைகளை மேற்கொள்ள முதலமைச்சர் கூறி உள்ளார்.
அதனால் மீட்பு படையினரும் ஏராளமான வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பம்பிங் ஸ்டேஷன் முழு நேரமும் இயங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
தற்போது பல பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.
- பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.
சென்னை:
சென்னையில் பெய்த மழை பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நேற்று காலை முதல் இன்று வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ. முதல் 25 செ.மீ. அளவுக்கு கனத்த மழை பெய்துள்ளது. ஆனாலும் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. பெரிய மழை பெய்தது என்ற சுவடே தெரியாத அளவுக்கு மழைநீர் வடியும் வகையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கான புதிய மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்ததால் மழை பெய்தாலும் முக்கிய சாலைகளில் சில மணிநேரத்தில் வடிந்து விடுகிறது. பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.
ஏற்கனவே இருந்த கால்வாய்களை தூர்வாரிய காரணத்தால் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.
சைதாப்பேட்டையை பொறுத்தவரை 5 செ.மீ. மழை பெய்தால்கூட திருவள்ளூர் தெரு, திவான் பாஷ்யம் தோட்டம், சுப்பிரமணிய சாலை போன்ற பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கும்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்குவது கிடையாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மேலாண்மை செய்த காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. 162 இடங்களில் நிவாரண மையங்களும் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
- டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை.
* மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
* உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் மா.சுப்பிரமணியனை சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
சென்னை:
மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா (வயது 13) எனும் சிறுமி எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டு மிகுந்த வலியுடன் முன்பாதங்களும் கறுத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
அதனை சரி செய்ய முடியாத நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றதும், அவரது அறிவுறுத்தலின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி அச்சிறுமிக்கு, ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்கு வாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவ துறை போன்ற பல்வேறு உயர் சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.
ரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு அதனை சரிசெய்து, இருகால்களின் முன்பாதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து நலமாக உள்ளார்.
மேலும் காயங்கள் முழுவதுமாக ஆறியதால், வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையினால் அக்குழந்தையால் எளிதாக நடக்கவும், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் செய்ய முடிகிறது.
இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆஸ்பத்திரியில் சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர்.
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
- இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
சென்னை:
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.
இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சரிவர தூக்கம் இல்லாத பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளன. கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி, பிரச்சனைகளும் உள்ளதால் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கனையத்தில் கொழுப்பு கட்டி இருப்பதால் அதை மருந்து-மாத்திரைகள் மூலம் சரிப்படுத்த டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் அதன் முடிவுகளை வைத்து அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை விவரங்கள் நாளை வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.
- இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.
சென்னை:
விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்த 26 வயது வாலிபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.
உறுப்புகளை தானமாக பெற்ற பிறகு அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இறந்து போன வாலிபரின் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தாயார் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர்கள் இறந்து போன மகனின் உடல் உறுப்புகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தானமாக வழங்கி இருக்கிறார்கள். இதயம், கல்லீரல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்விழி திரைகள் எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கைந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளார்கள்.
உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து 55 நாட்கள் ஆகிறது. இந்த குறுகிய கால கட்டத்தில் 26 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்கள். அதே போல் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.
தற்போது 7007 பேர் உறுப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 8 பேருக்கு இதயம், 68 பேருக்கு நுரையீரல், 25 பேருக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. 6,729 பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. 42 பேருக்கு சிறுநீரகம், கல்லீரல் இரண்டும் தேவைப்படுகிறது. இதயமும், கல்லீரலும் ஒருவருக்கு தேவைப்படுகிறது.
இறந்த பிறகு அரசு மரியாதை என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதால் பலர் மனமுவந்து உறுப்புகளை தானம் செய்து வருகிறார்கள். இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பயணிகள் நிழற்குடைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகிறார்.
- விழாவில் தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி., ஜே. எம். எச். அசன் மவுலானா எம். எல். ஏ., மேயர் பிரியா, துணை மேயர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி 13-வது மண்டலம் 177 - வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் உள்ள பெத்தேல் அவென்யூவில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளத்தை திறந்து வைக்கிறார்.
மேலும் 177-வது வார்டு கவுன்சிலர் பெ. மணிமாறனின் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பயணிகள் நிழற்குடைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி., ஜே. எம். எச். அசன் மவுலானா எம். எல். ஏ., மேயர் பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், 13-வது மண்டல குழு தலைவர் இரா. துரைராஜ், 177-வது வட்ட தி.மு.க. பொருளாளர் வழக்கறிஞர் சி.வி. இளங்கோவன், வட்ட செயலாளர்கள் மதிவாணன், சக்திவேல் மற்றும் மீசை கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.