என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurses strike"

    • காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.
    • முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தினர்.

    கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் ஆறு நாட்களை கடந்த நிலையிலும் தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைவிட, அங்கிருக்கும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    இந்த காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.

     

    இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா கூறுகையில், மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தை பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை என்று கூறினார்.

    இந்தப் பிரச்சனையின் பின்னணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தமிழ்நாட்டில் 2014-15 காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தற்காலிக செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.

    இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, தற்காலிக செவிலியர்கள் மருத்துவப் பணியார்கள் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களது பிரதான கோரிக்கை.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது.

    தி.மு.க.வின் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 356-இல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், "இப்போது ஆட்சியே முடிவடையும் தருவாய் நெருங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையிலேனும், 2021-ல் அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறினார்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அருகில் கடந்த 18-ந்தேதி பட்டினிப் போராட்டத்தை நடத்த செவிலியர் சங்கம் முடிவு செய்தது. அந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.

    அன்று பிற்பகலில் மருத்துவத் துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தொடர்வதாக செவிலியர் சங்கம் அறிவித்தது.

    அன்று இரவில் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அனைவரும் காவல் துறையால் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

    அடுத்த நாள் அமைச்சர் தரப்பிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்தது.

    முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் விரைவில் நிரந்தரப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அரசின் இந்த முடிவை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் அமைச்சர் அறிக்கையின் மூலம் அறிவித்தார்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

    சேலம்:

    கொரோனா தொற்று காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய சுகாதார குழும மூலம் தமிழகம் முழுவதும் தற்காலிக பணி அடிப்படையில் 2301 நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாகவும், இனி பணி நீட்டிப்பு இல்லை எனவும் தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை அன்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அதிகாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்று 2-வது நாளாக நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நேற்றிரவு மீண்டும் போலீசார் கைது செய்த நிலையில், இன்று 3-வது நாளாக நர்சுகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

    சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களுக்கு தங்களை முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நீட்டிப்பு கேட்டும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    • நோயாளிகள் அவதி
    • போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதர் தெரேசா பட்டமேற்படிப்பு மையத்தில் செவிலிய பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை காலை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் ஜெயராம் சியாமளா, ஸ்டெல்லா, சந்தானலட்சுமி, அமுதசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா சங்கீதா ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி சம்மேளன ஆலோசகர் கீதா, கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன்,

    பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜவஹர் மற்றும் சுகாதார சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி, துணை தலைவர் விநாயகம், அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன், செயலாளர்கள் சதீஷ், கலைவாணி, பொருளாளர் கிரி ஆகியோர் பேசினர் . இணைப்பு சங்க நிர்வாகிகள் சித்ரா, தனலட்சுமி, சுதாகர், ஜெகதீசன், காயத்ரி, திருமலை, இளையதாசன், லட்சுமி, சுந்தரமூர்த்தி, திருவரசன், சரவணன், ஆறுமுகம், தனசீலன், வெற்றிவேல், பாலமுருகன், இந்திரா, வைஜெயந்திமாலா, வள்ளி, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.

    • பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

    சென்னை:

    மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இதையடுத்து, செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்த நிதியாண்டில் முதல் கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார் என சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார்.

    இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    ×