என் மலர்
நீங்கள் தேடியது "உடற்பயிற்சி கூடம்"
- உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது.
- இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கத்தால் பலர் உடல் பருமனால் அவதிக்குள்ளாகினர். அவ்வாறு அவதிக்குள்ளாகுபவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதனால் பலரும் ஜிம்-மை நோக்கி படையெடுக்கின்றனர். இதன் காரணமாக தற்போது வீதிக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுகிறது.
அவ்வாறு உடற்பயிற்சி கூடத்தை நோக்கி வருபவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை ஜிம் நிர்வாகத்தினர் அறிவிக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஜிம் நிர்வாகம் அறிவித்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்துள்ளது.
அதாவது, 3 மாதங்களில் 50 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள Porsche காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஜிம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சவாலில் பங்கேற்க அனுமதி கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது. இதனால் பலரும் அந்த உடற்பயிற்சி கூடத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
இதனிடையே, இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடற் பயிற்சி கூடத்திற்கு சென்றால் உடல் எடை குறைக்கலாம், உடல் நலம் காக்கலாம் என்று பலரும் நினைக்கையில் இது போன்ற அறிவிப்பு லாப நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டது என்று இணையதள வாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்.
- சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரைக்கு பொழுது போக்க வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடற்கரை சீரமைக்கப்பட்டு அண்ணா சதுக்கம் அருகே 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரூ.64 லட்சம் செலவில் அமையும் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் தளம், ஊஞ்சல், சறுக்கு மேடை, மரம் சுற்றும் விளையாட்டு உள்ளிட்ட வசதிகள் அமைகிறது.
இதேபோல் சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது. இந்த கடற்கரை சீரமைப்பால் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு பகுதியை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளுக்கு திருப்ப முடியும். இதன் மூலம் சட்டவிரோத கடைகள் குறையும் என்றார் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்.
கடற்கரை சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட அனுமதியில்லாத கடைகள் அகற்றப்பட இருப்பதாகவும் மாநகராட்சி சார்பில் பேட்மின்டன் கோர்ட்டு, உடற்பயிற்சிக்கான விளை யாட்டுகள் அமைக்க இருப்ப தாகவும் அவர் கூறினார்.
- பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 35). மீன் வியாபாரி. இவரது மனைவி பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராம்கி கடந்த 1 ஆண்டாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ராம்கி கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடற்பயிற்சிக்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் ஜிம்மில் சேர்ந்தார். அங்கு கடந்த 6 மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற ராம்கிக்கு ஊக்கமருந்தை உடற்பயிற்சியாளர் பரிந்துரை செய்து சாப்பிட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ராம்கி ஊக்கமருந்து பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ராம்கிக்கு பயங்கர வயிறு வலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறுநீர் வெளியேறவில்லை.
இதனால்அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராம்கியை மீட்டு மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜிம் பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் ராம்கி உயிர் இழந்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காசிமேடு போலீசில் புகார் செய்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
- தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தாய் திட்டம் 2 மூலமாக 2018-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூட மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உடற்பயிற்சி கூடமானது நாரணாபுரம், கல்ராசிபாளையம், மாணிக்கம் பாளையம், குன்னத்தூர், குன்னத்தூர் புதூர், மற்றும் நான்தேவகவுண்டன் புதூர் உட்பட்ட கிராமங்களில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் முதியோர்களின் உடல் நல ஆரோகியத்திற்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதனால் அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடமானது பயன்படுத்தபடாமல் வீணாக உள்ளது.
இதன் சுற்று சுவற்றில் பொதுமக்கள் துணிகளை காயப்போட்டு வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள உபகரணங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடற்பயிற்சி கூடத்தை ஊராட்சி நிர்வாகம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வசதியாக திருப்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.காவலர்கள் பணியில் சிறந்து விளங்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சுறு, சுறுப்பாக இயங்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி கூடம், தீர்த்தமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
- தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர் வசூல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட தீர்த்தமலை ஊராட்சியில் இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள் பொழுதுபோக்குக்காக அம்மா பூங்கா அமைக்கப்ப ட்டுள்ளது.
பூங்காவுடன் இளை ஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அ.தி.மு.க. ஆட்சியில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போது தீர்த்தமலை அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், தீர்த்தமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது.
இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள் விளை யாடவும், உடற்பயிற்சி செய்யவும் அமைக்கப்பட்ட கூடம் தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர் வசூல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற பூங்காவை பயன்படுத்தும் வகையிலும் இளைஞர்களுக்காக உருவா க்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மீண்டும் மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
- உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது.
பெய்ஜிங்:
வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் 160-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 10 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் உயிர் இழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- இளைஞர்கள் எதிர்பார்ப்பு
- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ஒட்டியுள்ள பகுதியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பல மாதங்களுக்கு முன்பு வரை அம்மா பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது.
இதில் மின் கம்பங்கள், சிமெண்டு கான்கிரீட், பேவா் பிளாக், பொதுமக்கள் மக்கள் அமரும் இருக்கை, கூழாங்கல்லால் 8 வடிவிலான நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்ததால் பூங்கா புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதேப்போல் பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
அதில் உள்ள நவீன கருவிகள் எல்லாம் இதுவரை பயன்படுத்தவில்லை. இந்தஉடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞா்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
உடற்பயிற்சி கருவிகள் துருப்பிடித்து நிலையில் உள்ளதாக இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும் இங்கு உடைந்த குப்பைகள் அள்ளுவதற்காக பயன்படுத்தும் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்குயில் அதிகாரிகள் பலமுறை ஆய்வுக்கு வந்தும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்களும், இளைஞர்களும் கூறியதாவது:-
இந்த பூங்கா மிகவும் எங்கள் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
சிறுவர்கள் விளையாடு வதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல், சறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது.
மேலும் பூங்காவுக்கு வருபவர்களின் அவசர தேவைக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால் பூங்காவுக்குள் சென்று வர அணைவரும் அச்சப்படுகின்றனர்.
எனவே பழுதடைந்து கிடக்கும் பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.






