search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wayanad"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
    • விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    கோழிக்கோடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுல் பயணித்த வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது.
    • பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கியதாக ராகுல் குற்றச்சாட்டு

    வயநாடு:

    தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு வந்தார். வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

    ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் கல்பற்றா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கினர். பாராளுமன்றத்தில் என்னை பேச விடாமல் தடுத்தனர். சபாநாயகரிடம் சென்று எனது வாதத்தை விளக்க அனுமதி கேட்டேன். பாஜக என்னிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால், நான் மக்களுக்காக பேசுவதை பாஜகவால் ஒருபோதும் தடுக்க முடியாது. அவர்கள் (பாஜக) என்னை சிறையில்கூட அடைக்கலாம், ஆனால் வயநாட்டு மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்காக நான் பேசுவதை தடுக்க முடியாது.

    எம்.பி.யாக இல்லாததால் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம். அவர்கள் எனது வீட்டை எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு அந்த இல்லத்தில் இருக்க பிடிக்கவில்லை. வயநாட்டில் எத்தனையோ பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்தார்கள். அவர்கள் எப்படி போராடினார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார்.
    • ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    வயநாடு:

    கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்பினர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர். 

    இந்நிலையில், தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு வந்தார். அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

    ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது.
    • ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது. எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் இணைப்பு மற்றும் இன்டெர் நெட் வசதிகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று வயநாடு தொகுதியின் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு வரும் ராகுல் காந்தியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    2019 இந்திய பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் பரவி வருகிறது.



    இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதே தகவலை ஃபேஸ்புக்கில் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ரமேஷ் ஷர்மா சங்கேனர் என்ற பெயர் கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ராகுல் காந்தி இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.



    ஐ.டி. & சோஷியல் மீடியா செல் காங்கிரஸ் எனும் ஃபேஸ்புக் பக்கம் இதே பதிவினை பகிர்ந்து இருக்கிறது. எனினும், இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது.

    உண்மையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் அவர் மொத்தம் 7,06,367 வாக்குகளையே பெற்றார். வயநாட்டில் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளர் மொத்தம் 2,74,597 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,37,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



    இதுதவிர 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராகுல் காந்தி கிடையாது. 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர்களே இருக்கின்றனர். 



    இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தின் படி பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டீல் சுமார் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை தொடர்ந்து ஹரியானாவின் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹரியானாவின் ஃபாரிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன் பால் 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு தொண்டர்கள் பாகிஸ்தான் கொடியசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    சமூக வலைதளமான ட்விட்டரில் விகாஸ் பான்டே என்பவர் பதிவிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர் பகிர்ந்து இருக்கும் வீடியோவில் ஒரு குழுவினர் கைகளில் பச்சை நிற கொடிகளை அசைத்தப்படி ராகுல் காந்தி சிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

    வீடியோவுடன் “இல்லை, இது பாகிஸ்தான் கிடையாது, ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் காங்கிரஸ் சாக வேண்டும்!” என எழுதப்பட்டுள்ளது. இதே வீடியோ ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.



    இதே பதிவு ஃபேஸ்புக்கில் “தேர்தல் முடிவுகளுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றி இடம். ஒவ்வொரு இந்துவும் இதனை பார்க்க வேண்டும்” என்ற தலைப்பில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ சமூக வலைதள வாசிகள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    இது உண்மை தானா?

    வீடியோ தலைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இது போலி தகவல் ஆகும். முதலில் இந்த வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் நாட்டின் கொடி கிடையாது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி ஆகும். இந்த கட்சி கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதுதவிர இந்த வீடியோ வயநாட்டில் எடுக்கப்படவில்லை. இது கேரளாவின் காசர்கோட் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

    புகைப்படம்: இடதுபுறம்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி வலதுபுறம் - பாகிஸ்தான் கொடி


    உண்மையில் போலி தலைப்பில் வேகமாக பரவி வரும் வீடியோவில் ரமேஷ் உன்னித்தனுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது. இவர் காசர்கோட் பகுதியின் வேட்பாளர் ஆவார். இந்த வீடியோ காசர்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சேகரிப்பின் போது படமாக்கப்பட்டது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காசர்கோட் பகுதி பொது செயலாளர் எம்.சி. கமருதீன் தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை போன்று இந்த வீடியோ ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. மேலும் வீடியோவில் இருந்தது பாகிஸ்தான் நாட்டு கொடியும் கிடையாது.

    வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்..,




    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.
    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.



    இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில், “தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற உதவிய கேரள மக்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டு உள்ளார். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் 15 மாநிலங்களில் உள்ள 117 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்



    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்குகிறார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print