என் மலர்
நீங்கள் தேடியது "EC"
- காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.
- எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது என தெரிவித்தார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல்.
மக்கள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தியவுடன், அதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.
இன்று இந்தியாவில் மோடி அரசு என்றால் அது வாக்குத் திருட்டின் சின்னம். மக்களால் நேசிக்கப்படாததால் தேர்தலில் நேர்மையாக வெல்ல முடியாத அரசுதான் பா.ஜ.க. அரசு. சதி, வஞ்சகம், வாக்குத்திருட்டு என்ற மூன்று தூண்கள்மேல் தான் இந்த அரசு தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் தோல்வியையும் பயத்தையும் மறைக்கவே ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் என்ற சிரிக்கத்தக்க பொய்க்குற்றச்சாட்டு பவன் கெரா மீது சுமத்தப்பட்டுள்ளது.
உண்மையை வெளிப்படையாகச் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை மௌனப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.
ஆனால் இந்த நாட்டின் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள். வாக்குத் திருடனை வாக்குத் திருடன் என்றுதான் அழைப்போம். எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, பவன் கெரா அவர்களுடன் உறுதியுடன் நிற்கிறது. மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காங்கிரசின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது என பதிவிட்டுள்ளார் .
- முதல் மந்திரி பட்னாவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.
- இந்த தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொகுதியில் 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என செய்தி வெளியாகி இருந்தது.
இதுதொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது முதல் மந்திரி பட்னாவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.
ஐந்தே மாதங்களில் பட்னாவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்தது எப்படி? 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்பின் அறிமுகம் இல்லாத பலர் ஓட்டளித்தனர் என வாக்குச்சாவடி முகவர்கள் கூறி இருக்கின்றனர். ஒரு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலே அது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையா? தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?
டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஆலோசனைக்கு ராகுலை அழைத்தோம். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ராகுலைச் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். அவர் குறிப்பிடும் எந்த நாளிலும் சட்டசபை தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்க தயாராக உள்ளோம்.
அனைத்து தேர்தல்களும் சட்டவிதிகளின்படியே நடக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்து வைக்கிறோம்.
தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
- தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என சில கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன. மதிமுக, பாமக கட்சிகள் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளன.
தமிழகம் மட்டுமின்றி பீகார், மேற்கு வங்காளம், அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளை அறிவித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். 234 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச்சின்னம் வழங்கப்படும். இதற்காக தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
- காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
- இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமை யங் இந்தியன்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது. ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் பீதியில் இருப்பதைக் காட்டுகிறது.
தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடத்துதல் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு வழக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பதையும், அவர்கள் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை நிறுவனங்களைத் தாக்கும் வகையில் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.
தேர்தல் ஆணையம் சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் இது ஒரு தீவிரமான விஷயம். தேர்தல்களில் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதுபோன்ற பல தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இப்போது எம்.பி.க்களாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தையை நீங்கள் எவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஒடிசா உள்பட 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும்.
புதுடெல்லி:
ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.
ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் திருவிழா களைகட்டியது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒரு பொது பார்வையாளர், ஒரு காவல் பார்வையாளர் என 2 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
பொது பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வரும் 7-ம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்.
காவல் பார்வையாளராக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ்குமார் சாதிவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 27-ம் தேதி வரை தேர்தல் காவல்பணியில் இருப்பார்.
இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் ஜெயராமன் அருணாசல பிரதேச இடைத்தேர்தலுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி இ.ரவீந்திரன் மேற்குவங்காள இடைத்தேர்தலுக்கும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
- வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
- கிட்டத்தட்ட 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம். அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர்.
இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம். தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.
தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.
- சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டது.
இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள்.
ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் விடவில்லை. தர்மம் வெல்லும் என்று மீண்டும் தர்மயுத்தம் நடத்துவேன் என்று அறிவித்துள்ளார்.
பொதுக்குழு செல்லும் என்று கோர்ட்டு அறிவித்தாலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் கோர்ட்டில் முறையிடலாம். தேர்தல் ஆணையத்தையும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்புகின்றனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இருப்பதாக தெரிவித்து இருந்தது.
இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், "உரிமையியல் கோர்ட்டில் சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. எனது சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று தனது பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு தேர்தல் முடிந்ததும் அவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த சூழலில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.
தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த சிறு நம்பிக்கையும் தகர்ந்து விடும்.
எனவே என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி எல்லா தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
- கர்நாடக காங்கிரஸ் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்டது.
- இதுதொடர்பாக கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி:
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. அரசாங்கத்தை சிக்கல் இயந்திரம் என குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவும். நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை நாளை (மே 7) மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.
- காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
- விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
கோழிக்கோடு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.
- அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
- அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர்.
அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.
இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது
புதுடெல்லி:
கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.






