என் மலர்
நீங்கள் தேடியது "EC"
- வாக்குப் பெட்டிகள் மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்படும்.
- தேர்தல் நிறைவு பெறும் வரை, நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டசபை செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.
வாக்குப் பெட்டிகள் அனைத்து மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு உரிய வாக்குப் பெட்டியை சென்னை விமான நிலையத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாந்தி ஆகியோரிடம், மாநில துணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்படைத்தனர்.
- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது.
பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பதில் மனுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
- பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.
ஜம்மு:
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கிறது என ஆதாரங்கள் இருந்தபோதும் தேர்தல் ஆணையம் அமைதி காப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து கூறுகையில், ‘பாஜக வெற்றி பெற்றால் அது மக்களின் முடிவு. இதனை யாரும் தடுக்க முடியாது’ என கூறினார்.
பாஜக வெற்றி பெறுவதோ, தோல்வி அடைவதோ உலகின் இறுதி நாள் இல்லை எனவும் மெகபூபா குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
