search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EC"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.

    திருச்சி:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
    • ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.

    ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏணி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஐ.யூ.எம்.எல். கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி களம் காண்கிறார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

    இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார். ஆனாலும் இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக அரசிடம் இருந்து கடிதம் வந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

    எனவே பொன்முடி விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு மறுபடியும் கடிதம் எழுதலாமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

    இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார். ஆனாலும் இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக அரசிடம் இருந்து கடிதம் வந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

    எனவே பொன்முடி விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு மறுபடியும் கடிதம் எழுதலாமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    • செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
    • தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

    பாராளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

    அந்த வகையில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேஷ், விருகம்பாக்கம் தினேஷ்குமார், வேலூர் பன்னீர்செல்வம், நசீர், சங்கரன்கோவில் பாலமுருகேசன், முதுகுளத்தூர் சதீஷ் தேவசித்தம், ராமச்சந்திரன், அழகுமலைகுமரன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் இந்தப் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    • அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவுசெய்தது.

    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்துள்ளார். இதனால் அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் நேற்று முடிவு செய்தது. இதனால் மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு அணியின் பெயரை தேர்வு செய்யும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டார். 7-ம் தேதி பிற்பகலுக்குள் அவர்களுடைய அணியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், சரத் பவார் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்சந்திர பவார் என பெயர் சூட்டினார். இவரது கட்சி பெயருக்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    • தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது

    புதுடெல்லி:

    கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

    இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

    • அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
    • அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர்.

    அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.

    இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம்  மனு அளித்தனர்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
    • விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    கோழிக்கோடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    • கர்நாடக காங்கிரஸ் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்டது.
    • இதுதொடர்பாக கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. அரசாங்கத்தை சிக்கல் இயந்திரம் என குறிப்பிட்டது.

    இந்நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவும். நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை நாளை (மே 7) மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டது.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள்.

    ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் விடவில்லை. தர்மம் வெல்லும் என்று மீண்டும் தர்மயுத்தம் நடத்துவேன் என்று அறிவித்துள்ளார்.

    பொதுக்குழு செல்லும் என்று கோர்ட்டு அறிவித்தாலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் கோர்ட்டில் முறையிடலாம். தேர்தல் ஆணையத்தையும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்புகின்றனர்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், "உரிமையியல் கோர்ட்டில் சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. எனது சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று தனது பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு தேர்தல் முடிந்ததும் அவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

    அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த சிறு நம்பிக்கையும் தகர்ந்து விடும்.

    எனவே என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி எல்லா தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
    • கிட்டத்தட்ட 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம். அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர்.

    இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம். தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

    தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.

    காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பஞ்சாப், உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ×