search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by poll"

    • 4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.
    • 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.

    6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. பீகாரில் உள்ள கோபால் கஞ்ச், மொகாமா, மராட்டியத்தில் இருக்கும் அந்தேரி கிழக்கு, அரியானாவில் ஆதம்பூர், தெலுங்கானாவில் முனுகோடு, ஒடிசாவில் தாம்நகர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகர்நாத் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியளவில் எண்ணப்பட்டன. 7 தொகுதிகளில் பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரி பஜன் லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்ததால் அங்கு தேர்தல் நடந்தது.

    இங்கு பாஜக சார்பில் பாவ்யா பிஷ்னோய், காங்கிரஸ் சார்பில் ஜெய்பிரகாஷ் போட்டியிட்டனர். இதில் தொடக்கத்தில் இருந்தே பாவ்யா முன்னிலையில் இருந்தார். 13 சுற்றுகள் முடிவில் பாஜக 10,913 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதியை பாஜக கைப்பற்றுகிறது.

    உத்தரபிரதேசம் மாநிலம் கோலா கோகர்நாகத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    18 சுற்றுகள் முடிவில் கிரி 73,371 ஓட்டுகளும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 48,734 ஓட்டுகளும் பெற்று இருந்தார். இதன் மூலம் பாஜக அந்த தொகுதியை தக்க வைத்து கொள்கிறது.

    ஒடிசா மாநிலத்தில் பிஜி ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலையில் இருக்கிறது.

    4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். அவர் 18,181 ஓட்டுகளும், பிஜூ ஜனதா தள வேட்பாளர் அபந்தி தாஸ் 14,920 ஓட்டுகளும் பெற்று இருந்தனர். இந்த தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொள்கிறது.

    பீகார் மாநில மொகாமா தொகுதி ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அனந்த்சிங் ஆயுத தடை சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அந்த தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் ஆனந்த்சிங் மனைவி நீலம் தேவியும், பாஜக சார்பில் சோனா தேவியும் போட்டியிட்டனர்.

    இந்த தொகுதியில் நீலம் தேவி வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்த தொகுதியை ராஷ்டீரிய ஜனதா தளம் தக்க வைத்து கொண்டது. 20 சுற்றுகள் முடிவில் நீலம் தேவி 16 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று இருந்தார். அதன் பிறகு அவர் மேலும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பீகார் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கோபால் கஞ்சில் கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் வேட்பாளர் மோகன் குப்தா முன்னிலையில் இருந்தார்.

    பின்னர் பாஜக வேட்பாளர் சூசும் தேவி முன்னிலை பெற்றார். மாறி மாறி இழுபறி நிலை காணப்பட்டது. 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் மெகா கூட்டணியில் இணைந்த பிறகு சந்தித்த முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.

    மராட்டிய மாநிலம் அந்தோரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜக போட்டியிடவில்லை. சிவசேனா வேட்பாளரும், மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவியுமான ருதுஜா 29 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியை உத்தவ் தாக்கரே தக்க வைத்து கொள்கிறார்.

    தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கு இடையேவும் கடும் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. 5-வது சுற்று முடிவில் டி.ஆர்.எஸ். முன்னிலையில் உள்ளது.

    • ஒடிசா உள்பட 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.

    ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.

    இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. #rangasamy #nrcongress
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளராக வெங்கடேசன் களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. 

    இதுவரை என்.ஆர்.காங்கிரஸ் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. பதவியை இழந்த அசோக்ஆனந்து தனது குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவித்து விட்டார். 

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனா என்ற புவனேஸ்வரன், நந்தா ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் சொந்த அக்காள் மகன் செழியன் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. 

    பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ரங்கசாமி இன்று அறிவித்தார். ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ரங்கசாமி அறிவிக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. #rangasamy #nrcongress
    நாடு முழுதும் கடந்த 28-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் மேகாலயா சட்டமன்ற தொகுதியில் இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் அக்கட்சி உருவெடுத்துள்ளது. #ByPoll
    ஷில்லாங்:

    மேகாலயாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அம்பாதி மற்றும் சாங்சாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றதை அடுத்து அம்பாதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

    இதனால், அம்மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தலா 20 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சமபலத்தில் இருந்தது. 

    இந்நிலையில் உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அம்பாதி தொகுதியும் அடங்கும்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், அம்பாதி சட்டமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மேகலாய முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டசபை எதிர்கட்சி தலைவருமான முகுல் சங்மாவின் மகள் மியானி டி ஷிரா வெற்றி பெற்றா. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான மொமினை விட 3 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியின் மூலம் 21 சட்டசபை உறுப்பினர்களுடன் மேகாலயா மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. 20 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #ByPoll
    ×