search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி"

    • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
    • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

    பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
    • கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

    டெல்லி, ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டிற்கு வாழ்த்து கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது ஓபிசிஎஸ், எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கபட்டுள்ளது.

    மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்"

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

     

    • மெகபூபா முப்தி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுகிறது.
    • பா.ஜ.க.வின் 'சி' டீமாக மெகபூபா கட்சி இணைந்துள்ளது என்றார் உமர் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலில் மேலும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் அங்கு இணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரத்தில் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க வேட்பாளரை விடுத்து அவர் வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதப் பொருளானது.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கே பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும். நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.

    மற்ற கட்சிகள் எல்லாம் 'ஏ' டீம், 'பி' டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வில் 'சி' டீமாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.

    • கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகள் தெரிவித்தார்.
    • இது அவர் பக்குவமற்ற அரசியல்வாதி என காட்டுகிறது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

    இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

    ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
    • ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்.

    நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    "ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது டெல்லியில் இருந்து புறப்படும் நிலையில் இல்லை. சாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்," என்று ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • வரலாற்றில் முதல் முறையாக இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.
    • 2024-ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., தலைவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலுப்பெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.

    மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர, இந்த முறை அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    இம்முறை கூட்டணியில் சேர மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் பின்னர் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

    பாஜக-என்.டி.ஏ-வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட இந்த வகையான உறுதியான உறுதிப்பாடு இருந்தால், 2024-ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

    இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. சிலர் இதை குறைத்து மதிப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாகும். எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்தது இல்லை. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.

    14 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. அது தேர்தல் அறிக்கை என்று பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள்.

    பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு நரேந்திர மோடியை வணங்குகிறது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும்.

    மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பேசாமல் இருக்கிறது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாராளுமன்ற முதல் அமர்விலேயே குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    • மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் ‘அப்கி பார், 400 பார்’ முழக்கம் தவறானது.
    • முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டதற்கு கடுமையான வெப்பம் காரணம்.

    48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், எதிர்க்கட்சிகளுக்கு இடையே உள்ள பரந்த புரிதல், நிலையான ஆட்சியை வழங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் 'அப்கி பார், 400 பார்' முழக்கம் தவறானது. சில இடங்கள் தொடர்பாக இந்திய கூட்டணியினுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதில் கவனம் செலுத்தக்கூடாது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டதற்கு கடுமையான வெப்பம் காரணம் என்றும் வாக்காளர்கள் காட்டாத உற்சாகம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

    மேலும் கடந்த காலங்களில் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியதில்லை எனக்கூறிய சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைதுகளை மேற்கோள் காட்டி பா.ஜ.க.வை சாடினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல்.
    • எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களித்த பிறகு நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:-

    இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற அந்த தெளிவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த உணர்வோடு இந்த புரிதலோடு நாம் வாக்களிக்க வேண்டும்.

    கேள்வி:- முதலமைச்சர் சொன்னது போல் 40-க்கு 40 வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது? பிரகாசமாக இருக்கிறதா?

    பதில்:- நிச்சயமாக தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், புதுவையிலும் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

    கேள்வி:- மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எப்படி உள்ளது?

    பதில்:- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நான் தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள நிலவரத்தை பிறகு சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி.

    காரைக்குடி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். நட்டாவும், அமித்ஷாவும் காரைக்குடிக்கு வரவில்லை, அவர்கள் வராமல் வருகை ரத்தானதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத் தன்மை காப்பாற்றப்படும். பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
    • இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாட்டில் இதுவரை நடை பெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும்.

    இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

    அதனை சீர்குலைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாட்டை மீட்க ஜனநாயக அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன.

    இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த வேண்டிய பலகீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் தென்மாநிலங்கள் புறக்கணிப்பு அரசியலில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது தலைவர் ராகுல்காந்தி அளவற்ற அன்பையும், பாசத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரம் என்ற தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, பெண்களுக்கான சமஉரிமை, சமவாய்ப்பு, விவசாயிகள் நலன், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநில உரிமைகள், கருத்து சுதந்திரம், மீனவர் நலன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு ஆண்டு ரூபாய் 1 லட்சம் வழங்குகிற மகாலட்சுமி திட்டம், மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம், 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு, மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் மீண்டும் கட்டண சலுகை, நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவுப்படி சட்டப் பாதுகாப்பு என மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    எனவே, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, இந்திய அரச மைப்புச் சட்டத்தை பாதுகாக்க, மோடியின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திட, இந்தியா கூட்டணி தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்திட, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கி ரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    ×