என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanimozhi MP"

    • இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று.
    • அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது திமுக மற்றும் அரசாங்கம். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.

    யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.

    நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறாரக்ள்.

    இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

    • தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
    • திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.

    தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

    விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    இவ்விழாவில், கனிமொழி எம்பிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருது வழங்கி கவுரவித்தார்.

    இதேபோல், பாளையங்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சீத்தாராமனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் விருது- சோ. மா. ராமச்சந்திரன், முரசொலி அறக்கட்டளை சார்பில் 'முரசொலி செல்வம்' விருது- மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

    பாவேந்தர் விருது- அமரர் குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது- மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது- பொங்கலூர் நா. பழனிச்சாமி.

    • திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.
    • தவெகவின் முதல் தேர்தல் பிரசாரம் இது என்பதால், தொண்டர்கள் குவிந்தனர்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.

    தவெகவின் முதல் தேர்தல் பிரசாரம் இது என்பதால், தொண்டர்கள் குவிந்தனர். இதனால், காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பிரசாரம் மாலை 3 மணிக்கு மேல் தான் தொடங்கியது.

    இந்நிலையில், விஜயின் அரசியல் வருகையையொட்டி திமுக எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது பேசிய அவர்," விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

    தமிழகத்தில் அண்ணா, பெரியார் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது" என்றார்.

    • சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதி.
    • சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது, சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேற் சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும், சசிகாந்த் தொடர்ந்து உண்ணவிரதத்தை கடைப்பிடித்த வருகிறார். இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் சசிகாந்தை, திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    சசிகாந்தை சந்தித்த பின் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளரகளுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அவரை சந்தித்து இதனை தெரியப்படுத்தினேன். நமது உரிமைகளை பெறுவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன.

    உடல் நலனை வருத்திக் கொள்ள வேண்டாம். திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து போராடி கல்வி நிதியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
    • சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவில், "தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!

    எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!

    சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சக்திவேல் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அதன் உறுதிமிக்க தொண்டர்களால் உருவானது. அவர்களே கழகத்தின் முகவரி. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் பல ஆண்டுகளாக மக்கள் சேவை புரிந்து, கழகத்தின் அடையாளமாய் திகழும் திரு. சக்திவேல் அவர்களின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தேன்.

    கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களும் தொலைபேசி வழியாக அவரிடம் பேசி ஊக்கமளித்ததோடு, கழகம் என்றும் துணைநிற்கும் என உறுதியளித்தார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • கட்-ஆப் மதிப்பெண்களுக்குமேல் மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
    • பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டு ஜூன் மாத சுழற்சிக்கான தேசிய பட்டியல் சாதியினர் பெல்லோஷிப் (உயர்கல்வியை தொடர நிதி உதவி) முடிவுகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பட்டியல் சாதி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் கவனத்தை கொண்டு வர இக்கடிதத்தை எழுதுகிறேன்.

    கடந்த மார்ச் மாதம் யு.ஜி.சி-நெட் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 865 மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்களுக்குமேல் மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பலர் திருத்தம்கோரி அணுகினர்.

    கடந்த ஆண்டும், ஜூன் 2023 சுழற்சிக்கான பட்டியலில் தகுதியான சிலர் விடுபட்டபோது, 44 மாணவர்களுடன் கூடுதல் பட்டியல் வெளியிட்டது. ஆனால் இந்த ஆண்டு தகுதி வாய்ந்த மாணவர்களின் கூடுதல் பட்டியலை வெளியிடுவதற்கு பதிலாக கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

    இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த பேரின் எண்ணிக்கை 865 இருந்து 805-ஆக குறைக்கப்பட்டது. மார்ச் மாதம் தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் வழங்கப்பட்ட பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 487 பேர் திடீரென்று விளக்கம் இல்லாமல் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர். இது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மார்ச் மாத முடிவுகளின் அடிப்படையில் பலர் ஏற்கனவே பி.எச்.டி படிப்புகளில் சேர்ந்தனர். தற்போது இந்த தன்னிச்சையான மாற்றத்தால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

    எனவே காலியிடங்களின் அசல் எண்ணிக்கையை 865 ஆக மீண்டும் உயர்த்த நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டை போலவே 60 மாணவர்களை கொண்ட கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அக்கடித்தில் கனிமொழி எம்.பி கூறி உள்ளார்.

    • அதிமுக, தொடர்ந்து பாஜக உடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
    • திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை...

    மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்தபோதே, பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

    அதிமுக, தொடர்ந்து பாஜக உடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று. இன்னும் ஒருபடி மேலே சென்று பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக் கூடிய இடத்திலேயே அவர்களும் இருந்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்கள் யார் என்பதையும், திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.

    • வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?
    • நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர்," 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது என்பது திமுக குடும்பத்தின் DNA-வில் கலந்தது. அதற்கு ஸ்டாலினின் தங்கையான கனிமொழி எப்படி விதிவிலக்காவார்?

    தன் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞர்கள் குறித்தோ, திமுக அனுதாபி ஞானசேகரனின் தொடர்புகள் குறித்தோ, SIR குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மிதவாதியாக இருந்த கனிமொழி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை, தங்களுக்கு கிடைத்த வெற்றி போல சித்தரித்து அறிக்கை உருட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்த வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?

    நீங்கள் இந்த வழக்கில் தலையிடவே கூடாது எனத் தானே நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது?

    அதனை நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

    நீங்கள் தலையிடவே கூடாது என்று அமைக்கப்பட்ட இந்த SIT விசாரணையில் நீங்கள் தலையிட்டு, நீர்த்துப் போகச் செய்து, வழக்கை அவசரப்படுத்தி முடித்துவிட்டு, அந்த "SIR"-ஐ காப்பற்றிவிட்டோம் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?

    பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வர 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என Timeline போடும் கனிமொழி, அதில் 4 1/2 ஆண்டுகள் அவர் அண்ணன் ஆட்சி என்று மறந்துவிட்டாரா? அல்லது, தெரிந்தே, உட்கட்சி பூசலில் Same Side Goal அடித்துவிட்டாரா?

    பொள்ளாச்சி வழக்கை முறையாக CBI விசாரித்து, சரியான தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதிலும் சம்மந்தம் இல்லாத நீங்கள் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றதால் தான், இந்த கேள்வியைக் கேட்கிறோம்.

    "அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை"- அப்படியா? நாங்கள் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட SIT என்று தானே நினைத்தோம்? அப்படியென்றால், நீதிமன்ற உத்தரவை மீறி நீங்கள் விசாரித்தீர்களா? நீதிமன்ற தீர்ப்பை மீறி விசாரித்து, யாரைக் காப்பாற்றினீர்கள்?

    அண்ணா பல்கலை வழக்கு மட்டுமல்ல- ஒவ்வொரு வழக்கிலும் உங்கள் அண்ணன் அரசு எந்த லட்சணத்தில் விசாரிக்கிறது என்பதற்கு நீதிமன்றங்கள் கொடுக்கும் தொடர் சம்மட்டி அடிகளே சாட்சி!

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பான பேரிடியாக தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கும் தமிழக மக்கள், ஜனநாயகப் பூர்வமாக 2026-ல் கொடுக்கப் போகும் தர்ம அடி காத்திருக்கிறது!

    #யார்_அந்த_SIR

    #SIRஐ_காப்பாற்றியது_யார்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கனிமொழி தலைமையிலான குழு நேற்று ரஷியா சென்றடைந்தது.
    • மாஸ்கோவை விமானம் அடைந்தபோது, டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்தது. இதில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறது.

    நேற்று கனிமொழி தலைமையிலான குழு ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ சென்றபோது, டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் விமானம் சுமார் 45 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்துள்ளார். பின்னர் டிரோன் அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

    கனிமொழி மற்றும் குழுவில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பாக மாஸ்கோவில் தரையிறங்கினர் என்று கனிமொழிக்கு நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ரஷியாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி கொண்டாட்ட தின விழா நடைபெற்றது.

    இதில் பெரும்பாலான வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தாக்குதல் நடத்தப்பட்டு அசம்பாவிதம் நடைபெற்றால் நாங்கள் பொறுப்பல்ல என உக்ரைன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்தித்தார்.
    • அப்போது செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்தித்தார்.

    இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அப்போது செங்கல் மீதான ஜி.எஸ்.டி.யை அவசரமாகக் குறைக்கவும், ஐடிசி இல்லாமல் 3 சதவீதம் மற்றும் ஐடிசியுடன் 5 சதவீதம் ஆகியவற்றை முன்மொழியவும், பர்னர் பயன்பாட்டின் அடிப்படையில் கூட்டு வரியை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுத்தேன்.

    இதனால் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் அலகுகள் மற்றும் மில்லியன் கணக்கான கிராமப்புற வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    • குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
    • அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்நிலையில், நெல்லையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு திமுக எம்.பி.கனிமொழி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த வழக்கில் அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.

    வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை செய்து இருந்தால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.. சிபிஐக்கு மாற்றியதை இபிஎஸ் பெருமையாக நினைக்காமல் வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
    • மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.

    வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.

    இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.

    மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×