என் மலர்

    நீங்கள் தேடியது "kanimozhi mp"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க.சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை தொடங்குகிறது.
    • கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை யொட்டி டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., டி.என்.பாளையம் ஒன்றிய தொண்டரனி சார்பில் மாபெரும் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கலைஞர் சிலை அருகே தொடங்குகிறது.

    விழாவுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய அவைத்தலைவர் கருப்புச்சாமி வரவேற்கிறார்.

    ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் துரைசாமி, மரகதம் பால கிருஷ்ணன் ஆசிர்வாதம் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் மணி வர்மன், கே.எஸ்.திருமுருகன், கதிர் என்கிற கருப்புச்சாமி, பேரூர் செயலாளர்கள் வாணிப்புத்தூர் சேகர் என்கிற பழனிச்சாமி, பெரிய கொடிவேரி ஆறுமுகம், காசிபாளையம் எம்.எம்.பழனிச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வாணிப்புத்தூர் சிவராஜ், பெரிய கொடிவேரி தமிழ்மகன் சிவா, காசிபாளையம் தமிழ்செல்வி வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    போட்டியை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்து ெகாள்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
    • தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி மற்றும் மாமன்ற பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவு அடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்த மான தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்த உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள், 100-க்கணக்கான மாணவ-மாணவிகள், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் அனை வரும் மரக்கன்றுகளை நட்டனர். இன்று ஒரே நாளில் 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடப்படுகிறது.

    மீதமுள்ள மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பகுதியில் அமைய பெற்றுள்ள பொது இடங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் நடப்பட உள்ளது. இதில் மா பலா கொய்யா புளி,நவா, வேம்பு,புங்கன்,பூவரசு, கொடுக்கம்புளி, வாகை, இடும்பை, நீர்மருது, மகாகனி, தூங்குவாகை,நெல்லி, வாடாச்சி, சரக்கொன்றை, தான்றிக்காய் உள்ளிட்ட 18 வகையான மரக்கன்றுகள் இடம் பெற உள்ளன,

    இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது உரக்கிடங்கிற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட உள்ளது.

    நிகழ்ச்சியில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் தூத்துக்குடி மாநக ராட்சி மண்டல தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் குறுக்குசாலையில் நடந்தது.
    • அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை என்று -கனிமொழி எம்.பி. கூறினார்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பதவி ஏற்ற பிறகு இப்பகுதியில் ஆசியாவில் மிகப்பெரிய பர்னிச்சர் பூங்காவும், டைட்டல் பார்க்கும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முந்தைய அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவநீதகண்ணன், அன்புராஜன், அவைத் தலைவர் இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு அரசின் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியாதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376 சதுர அடி பரப்பில் முழு உருவச்சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என்றார்.

    இதில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல் ராஜ், சுரேஷ் குமார், மாநகர தொண்டர் அமைப்பாளர் முருக இசக்கி, வட்ட செயலாளர்கள் ரவிந்திரன், கீதா மாரியப்பன், கந்தன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்ஹில்ட், பரதர் நலசங்க தலைவர் ரொனால்ட் வில்லவராயர், சமூக ஆர்வலர் பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6-வது வட்ட தி.மு.க. சார்பில் பாக்கியநாதன் விளையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.
    • இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இவ்வாறு கனிமொழி எம்.பி,பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6-வது வட்ட தி.மு.க. சார்பில் பாக்கியநாதன் விளையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

    விழாவில் 15 பொங்க பாணை வைக்கப்பட்டு அதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செய லாளர் கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொங்கலிட்டனர்.

    பின்னர் ஆயிரம் பெண்களுக்கு சேலை வழங்கி கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பொங்கல் என்பது ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடும் திருநாளாகும். இந்த திருவிழா என்பது ஒவ்வொரு தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கவர்னர் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சர்ச்சை கருத்து மூலம் நம்முடைய அடையாளம் கலாச்சாரம் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது தேவையற்றது. ஒற்றுமையாக தமிழர்கள் இருந்து வருகிறோம். இதுபோன்ற கலாச்சாரங் களை பேணி பாதுகாக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு சூழுரை யேற்போம்.

    தமிழன் அடையாளம், பெருமை, திறமை, வரலாறு இவற்றை பின்பற்றுவோம். இங்கு பொங்கலிடும் போது பெண்கள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவர்கள் இமையை கசக்கி கொண்டு நின்றனர். இது போன்ற விறகு அடுப்பில் பெண்கள் சிரமப்படக்கூடாது என்று கியாஸ் அடுப்பு உங்களுக்கு எல்லாம் கலைஞர் கொடுத்தார். இன்றைய தலைமுறையை பற்றி கலைஞர் சிந்தித்து செயல்பட்டார். தற்போது இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    கீதாஜீவன் பேசுகையில் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதுபோல் உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களும், கிடைக்க பெற்று நலமுடன் அனைவரும் வாழ வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமா தேவி,பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவிதாதேவி, சேர்மபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசிரி யர்கள் கவுரவிக்கப் பட்ட னர். திரேஸ்புரம் பகுதி துணைச்செயலாளர் சோலை யப்பன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
    • தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     பல்லடம் :

    பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், சசிகுமார் இளைஞர் அணி ராஜேஸ்வரன், பாலகுமார், குப்புசாமி, பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனிமொழி எம்.பி. தனதுபாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
    • அடிக்கல் நாட்டு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே பெரியதாழை ஆர்.சி தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ஊர் மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர். அதன்படி அவரது பாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

    அதன்படி கட்டிடம் கட்டுப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    தமிழக மீன்வளம், மீன்வர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    அப்போது சாத்தான்குளம் வட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், தங்களை தரக்குறைவாக பேசுவதுடன், பணி நிமித்தம் தொடர்பாக டார்சர் செய்வதாகவும் அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு சரியான அதிகாரி நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தனர்.

    இதில் பெரியதாழை பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் தாசில்தார் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார்.
    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும்'

    தென்திருப்பேரை:

    உடன்குடி மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்ரீவைகுண்டம் சுற்றி செல்லாமல் ஆழ்வார்திருநகரி, காடுவெட்டி, குலசேகரநத்தம், ஆயத்துறை வழியாக தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க கனிமொழி எம்.பி. யிடம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார். இந்த புதிய வழித்தடம் நடைமுறைக்கு வந்தால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் பயண நேரம் கணிசமாக குறைவது மட்டும் இன்றி இந்த சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்ததாக கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
    • ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    நெல்லை:

    தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா பாளையில் நேற்று தொடங்கியது.

    கனிமொழி எம்.பி.

    பாளை நேருஜி கலைய ரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவர் மாணவ, மாணவிகள் எழுதிய தபால் கவிதை தொகுப்பினை கலெக்டர் விஷ்ணு, பொது நூலக இயக்ககத்தின் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் கலாப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இலக்கிய திருவிழாக்கள்

    தமிழகத்தில் இலக்கிய செழுமைமிக்க தமிழ்மொழி யின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவாணி மற்றும் பொருநை என 5 மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்களை சிறப்பாக நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புத்தகம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

    புத்தகம் வாசிப்பு

    குறிப்பாக பள்ளி, மாணவ-மாணவிகள் புத்தகம் வாசிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும். புத்தகம் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களை எளிதாக அறிய முடியும்.

    இந்த பொருநை இலக்கிய திருவிழா மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. படிப்பை நேசித்தவர் பேரறிஞர் அண்ணா, புத்தகம் வாசிப்பதை மிகவும் ஆர்வம் கொண்டு இறுதி மூச்சு வரை புத்தகத்தை நேசித்தவர் கலைஞர்.

    எனவே புத்தகம் வாசிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள். திராவிட இயக்கம் தான் தமிழர்களை தலை நிமிர செய்தது.

    பள்ளியில் எது சரி, எது தவறு என்று சொல்லி தரக்கூடிய பல நேரங்களில் புத்தங்கள் நமக்கு கைக்கொடுக்கிறது. புத்தகங்கள் படிக்க, படிக்க உங்கள் சிந்தனைகள் விரிவாகும்.

    புத்தகங்கள் தரும் உலகம் என்பது நம்முள் பல கேள்விகளை பல கருத்துக்களை முன் வைக்கும். புத்தகத்தை படித்து படித்து சிந்திக்கும் தலைவன் தான் நம்மை அழைத்துச் செல்லும் தலைவனாக இருக்க முடியும். அத்தகைய தலைவர்கள் தான் திராவிட இயக்க தலைவர்கள்.

    இன்று தமிழகத்தில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் காரணம். எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் அனைவரும் பொருநை இலக்கிய திருவிழாவிற்கு வந்து ஓலைச் சுவடி வடிவிலான இலக்கியங்கள், மூல புத்தக மற்றும் நாட்டு புறக் கலைகள் தொடர்புடைய பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
    • 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் பிரம்ம சக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா, மாவட்ட பொரு ளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்கு மார், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத் தலைவரும், நகர செயலாளருமான சந்தையடி யூர்மால் ராஜேஷ், யூனியன் சேர்மன்கள் ரமேஷ், வசுமதி அம்பாசங்கர், கோமதி ராஜேந்திரன், ஜெயபதி, திருச்செந்தூர் நகராட்சி சேர்மன் சிவ ஆனந்தி, காயல்பட்டணம் முத்து முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச் செல்வன், இந்திரகாசி, சாகுல் ஹமீது, கணேசன், ஆறுமுக பாண்டியன், ராஜலெட்சுமி, ரவி செல்வகுமார், முகம்மது அலி ஜின்னா, மாவட்ட அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு, சந்தடி ரவி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் நவின் குமார், ரமேஷ், சதீஷ், முத்து முகமது, சுடலை, ரவி, பார்த்திபன், ஜோசப், கொம்பையா, கோட்டாளம், இசக்கி பாண்டியன், பாலமுருகன், பொன் முருகேசன், ஜெயக்கொடி, சுப்பிபிரமணியன், சரவண குமார், இளையராஜா, ராமசாமி, சுரேஷ் காந்தி, சிவக்குமார், ஆஸ்கர், உடன்குடி தொடக்க வே ளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், உடன்குடி பேரூராட்சி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ் அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    இக்கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது, வரும் 27-ந் தேதி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி பணிகள் உடனடியாக தொடங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல்ஆட்சியை இந்திய நாடேதிரும்பி பார்க்கிறது. இந்தியாவிற்கு எடுத்துக் காட்டாக நடந்து வருகிறது.வரும் பாராளுமன்றதேர்தலை சந்திக்க பணிகளை இப்போழுதேதொடங்க வேண்டும் அனைவரும் ஒற்றுமையுடன் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பா. ஜனதா அரசு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வெற்றி காண துடிக்கிறது. அதற்கு தமிழக மக்களாகிய நாம் இடம் கொடுக்கக் கூடாது, அனைத்து ஜாதியினரையும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

    ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் நன்றி கூறினார்.