search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanimozhi mp"

    • புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.
    • மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.

    மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    • நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கருணாநிதி முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.

    இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.

    நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை என கடுமையாக சாடினார்.

    • பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.

    இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

    • திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
    • வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

    திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

    வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. 

    ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.

    இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.

    விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

    தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
    • சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.

    தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார். 

    • காடல்குடி, சின்னூர் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை கனிமொழி எம்.பி. வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட காடல்குடி, சின்னூர், என்.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலாபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கி னார். அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்க ளை பெற்றார்.

    மேலும், 13 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் திட்டம் மூலம் 50 பயனாளி களுக்கு ரூ.9.30 லட்சம் குழு கடன், 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் பேசுகை யில், விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை களை விரைவில் சரி செய்து தரப்படும். சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களது மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராம கிருஷ்ணன், புதூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னகண்ணு, புதூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், மத்திய ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்தி குளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், புதூர் தி.மு.க. நகர செயலாளர் மருதுபாண்டி, முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், பொதுக்குழு உறுப்பி னர் ராஜாகண்ணு, வெற்றி வேலன், கந்தசாமி உரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி விஜய், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைத்தள அணி ஒருங்கி ணைப்பாளர் கரண் குமார், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பயனடைய முடியும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி யினை கனிமொழி எம்.பி, திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தர வின்படி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ப்படும். இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நோக்க மாகும். மீனவர்களின் கோரி க்கைகளை மீன வர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார்.

    ெதாடாந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பய னடைய முடியும் என்றார்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மாலத்தீவு அரசினால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை த்தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வள நலவாரிய மாநில உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜய ராகவன், மீன்பிடித்து றைமுக மேம்பாட்டு செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி பொறியாளர் தயாநிதி, ஆய்வாளர்கள் ஜெகன், சுப்பிரமணியன், ஷிபாணி, கவுன்சிலர்கள் எடின்டா, மரியகீதா, சரவணக்குமார், நாகேஸ்வரி, பவாணி மார்ஷல், வைதேகி, சுப்புலட்சுமி, சுதா, ரெக்ஸின், ஜெயசீலி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராம கிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சண்முகவடிவு, வட்டசெயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி துணை தலைவர் நலம் ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மற்றும் கருணா, மணி, மகேஷ்வரசிங், டோலி, கன்னிமரியாள், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய்துறை மூலம் 23 பேருக்கு ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 20 மதிப்பிலான பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
    • மகளிர் உரிமைத்தொகை தகுதியான மகளிருக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் புத்தன்தருவை, அரசூர், தாமரைமொழி, நடுவக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மக்களிடம் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் கனிமொழி எம்.பி. மனுக்கள் வாங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    புத்தன்தருவை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன் வரவேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய்துறை மூலம் 23 ேபருக்கு ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 20 மதிப்பிலான பட்டா, ஆதரவற்ற விதவைகள், ஒய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒய்வூதியம். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இறப்பு நிவாரண தொகை, வேளாண்மை துறை மூலம் 2 பேருக்கு விவசாய இடுபொருள்கள், மகளிர் திட்டம் மூலம் 2 பேருக்கு குழுகடன், தோட்டக்கலை மூலம் 2 பேருக்கு விதைகள் மற்றும் இடுபொருள்கள் என மொத்தம் 118 பேருக்கு ரூ. 10 லட்சத்து 97 ஆயிரத்து 303 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் மக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

    விரைவில் நடவடிக்கை

    மக்கள் களம் மூலம் மக்களிடம் பெறப்படும் மனுகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏராளமான பெண்கள் மனு அளித்துள்ளனர். அது மகளிர் உரிமைத்தொகைக்கான மனுவாக இருக்கும் என நினைக்கிறேன். மகளிர் உரிமைத்தொகை தகுதியான மகளிருக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இது 73 ஊராட்சியில் நடக்கும் மக்கள் களம் நிகழ்ச்சி. முதல்-அமைச்சர், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து தர உறுதியாக உள்ளார். இந்த பகுதியில் உள்ள மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பல திட்டப்பணிகள் செய்து முடிவடைந்துள்ளன. பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து வழங்கி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள் வாழ்வு உயர பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தந்துள்ளார். கனிமொழி எம்.பி., சாதி, மதங்களை கடந்து அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவர். எந்த இடத்துக்கு எது தேவையோ? அதனை அறிந்து நிதிகளை வழங்கி வருகிறார். மக்களுக்காகவே பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், மக்கள் களம் என்பது அருமையான நிகழ்ச்சி. எந்த எம்.பி.யும் இதைபோல் செய்து விட முடியாது. இப்பகுதி விவசாயிகளோடு இணைந்து பல முயற்சிகள் எடுத்து இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுககப்பட்டது. அதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது. அரசு, விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்து வருகிறது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பார்த்திபன், மாவட்ட ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், மாநில வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஊராட்சித் தலைவர்கள் சுலைகாபீவி, தினேஷ்ராஜாசிங், சாந்தா, சபிதா, திருக்கல்யாணி, யூனியன் சேர்மன் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், கருப்பசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லதா, பிச்சிவிளை சுதாகர், ஒன்றிய பொருளாளர் ஆனந்த், நடுவக்குறிச்சி துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ரதிகலா நன்றி கூறினார்.

    • 20 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • 100 நாள் ஊதியம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம், சக்கமாள் புரம், அருங்குளம், வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இலவச வீட்டுமனை பட்டா

    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ., கலெக்டர் லட்சுமி பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு 58 பயனாளி களுக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித் தொகை, இறப்பு நிவாரணம், உழவர் பாது காப்பு திட்ட உறுப்பினர் பதிவு, விவசாய இடு பொருட்கள் உள்ளிட்ட வைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை கடந்த சில வாரங்களாக ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

    100 நாள் வேலை திட்டம்

    100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே 100 நாள் ஊதியம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பதிவேற்றத்தின் போது சிறு சிறு பிழைகள் ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் விண்ணப் பங்கள் கள ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன. விரை வில் தகுதி உள்ளவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவரது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விளாத்தி குளம் தாசில்தார் ராம கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், வேளாண்மை துணை இயக்குனர் கீதா, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜ், கிழக்கு ஒன்றிய செய லாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, கோவில் பட்டி கிழக்கு ஒன்றிய செய லாளர் நவநீத கண்ணன், மாவட்ட கவுன்சிலர் நட ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப் பாளர் பாண்டியராஜன், மார்த்தாண்டம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்துக் கரும்புலி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கரண்குமார் மற்றும் கிளை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகி கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சிறப்பு விருதினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.
    • திறப்பு விழாவினை தொடர்ந்து அங்கு உடனடியாக இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநக ராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இறகுப்பந்து உள்விளை யாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு விழா பழைய மாநகராட்சி அலுவலகம் பின்புறம் ஜி.எல்.ஆர். டேங்க் வளாகத்தில் உள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது,

    நிகழ்ச்சிக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி,கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    விழாவில் சிறப்பு விருதினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா மாநகராட்சி 4 மண்டல தலைவர்கள், மாநகர கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவினை தொடர்ந்து அங்கு உடனடியாக இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    • தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் இன்று மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் விழா நடைபெற்றது.
    • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகப்படியான புரதச்சத்தும், குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ.எப்.எஸ். 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் விழா நடைபெற்றது.

    தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மரக்கன்று நட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி நகரின் தூய்மை சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றின் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்து பராமரித்தல், மாநக ராட்சிக்கு சொந்தமான இடங்களை சுத்தம் செய்து வேலி அமைத்து அடர் காடுகள் முறையில் அதிகப்படியான மரங்களை நடுதல், நகரின் பிரதான சாலை சந்திப்புகளில் நீரூற்றுகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நகரின் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் கழிவு நீர் தருவைகுளம் கலவை உரக்கிடங்கில் அமையப்பெற்ற சுமார் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நீரினை திறம்பட பயன்படுத்தும் விதமாகவும், இயற்கைச் சூழலை மேம்படுத்தும் விதமாகவும் அதிகப்படியான மரங்களை நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டதன் அடிப் படையில் இதுவரையிலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளது.

    தற்போது, கூடுதலாக 60 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய ஆணையரகம் இணைந்து விமான நிலைய ஆணையரகத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை மியாவாக்கி என்ற அடர் காடுகள் முறையில் நடும் நிகழ்ச்சி, மேலும் மாநகராட்சி சார்பாக பலன் தரும் மரங்களை நடுவதற்கு உத்தேசித்து ஒரு ஏக்கர் பரப்பளவில் இனிப்பு புளி, நாட்டுப்புளி, சிவப்பு புளி, குடம்புளி, கொடுக்காப்புளி போன்ற பல்வேறு வகையான புளிய மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது.

    மேலும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் பறவைகளுக்கு பயன்படும் வகையில் ஆல மரங்களும், கால்நடைகளுக்கு ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்கி தரமான தீவனங்கள் கிடைக்க வழிவகை செய்யும் விதத்திலும், பொதுமக்களுக்கு நல்ல சத்தான பால் கிடைக்கும் வகையிலும் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்து நியாயமான விலையில் விற்பனை செய்யவும் சோதனை முயற்சியாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகப்படியான புரதச்சத்தும், குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ.எப்.எஸ். 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்,மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், காமராஜர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், 1996-ம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.

    சிதிலமடைந்திருந்த இந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.

    இதில் 9 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி

    எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப் பாண்டியன், சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப் பாளர் ராஜதுரை, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக் குமார், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் செல்லையா, கோவில்பட்டி ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர, கிளை நிர்வாகிகள், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியராஜன், சுப்பு லட்சுமி, பொறியா ளர்கள் சித்ரா, செல்வாக்கை யும், செந்தில், பீர் முஹம்மது, மற்றும் பிற துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    ×