என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தது திமுக!
    X

    கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தது திமுக!

    • அரசியல் கட்சிகள் விருப்பமனு தாக்கலை தொடங்கி உள்ளன
    • இந்தக்குழுவில் பி.டி.ஆர். தியாகராஜன் இடம்பெற்றுள்ளார்.

    திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது திமுக. இதுதொடர்பான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் விருப்பமனு தாக்கலை தொடங்கி உள்ளன. கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.

    கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர். தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், சுரேஷ் சம்மந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் எனவும் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×