search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election manifesto"

    • தென்சென்னை தொகுதியில் ஒரு வேட்பாளராக இல்லாமல், ஒரு வாக்காளராக களம் காண இருக்கிறேன்.
    • தென்சென்னையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து நான் அறிவேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், தென்சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளராக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்கிறார்.

    இந்த நிலையில், அவர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில், அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.

    பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்சென்னை தொகுதியில் ஒரு வேட்பாளராக இல்லாமல், ஒரு வாக்காளராக களம் காண இருக்கிறேன். இதனால், தென்சென்னையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து நான் அறிவேன். இதற்காக, தென்சென்னைக்கு என தனி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதை, விரைவில் வெளியிடுவேன்.

    என்னுடைய வயதிற்கு நான் இன்னும் 3 முறை கூட கவர்னராக பதவி வகிக்க முடியும். ஆனால், மக்கள் பணியாற்றவே விரும்புகிறேன். அப்படி என்றால், கவர்னராக இருக்கும்போது மக்கள் பணியாற்றவில்லை என்று கேட்கலாம். கவர்னராக இருந்தால் நேரடியாக மக்கள் பணியாற்ற முடியாது.

    த.மா.கா. அலுவலகத்திற்கு வரும்போது என்னுடைய வீட்டிற்கு வருவதுபோல் உணர்கிறேன். சிறுவயதில் மூப்பனார் உள்பட மூத்த தலைவர்களை சந்தித்துள்ளேன். தேர்தலில் கடுமையான உழைப்பால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * கவர்னர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்.

    * உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    * சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.

    * மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.

    * பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்துவோம்.

    * குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.

    * வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.

    * நீட் தேர்வுக்கு மாற்றாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை.

    * தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.

    * தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

    * சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    * 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

    * தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படும்.

    * வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்.

    * நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    * இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை.

    * புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
    • திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    மதுரை:

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்களை பொறுத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள்.

    * மதவாத இயக்கத்தைவிட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கண்டிக்கிறேன்.

    * பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    * தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள்... மக்களை தான் தேடி செல்ல வேண்டும்.

    * திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    * திமுக தேர்தல் அறிக்கை... இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவார்களோ.

    * பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என்றார் செய்தாரா?

    * சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி திமுகவின் மற்றொரு முகம் என்று கூறினார்.

    • தோல்வி பயம் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.
    • திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்வதால் தி.மு.க.வுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ளாரே?

    யாருக்கு காய்ச்சல் வந்துள்ளது என்று எங்கள் பொருளாளர் டி.ஆர்.பாலு தெளிவாக பதில் கூறி இருக்கிறார். அவருக்கு தோல்வி பயம் வருகிற காரணத்தலே அடிக்கடி வருகிறார். பிரதமர் வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வரும் பாரத பிரதமர், மழை வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறதே? விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொது தொகுதி ஏன் வழங்கப்படவில்லை?

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரைக்கும், அவர்கள் கேட்க உரிமை உண்டு. அதற்காக தான் குழு அமைத்திருந்தோம். அந்த குழுவில் பேசி விவாதித்து பின்னர் திருப்தி அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய அளவில் உள்ள கட்சி. மற்ற மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து விட்டு தமிழ்நாட்டில் இங்கு பேசுவதற்கு கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதையும் உட்கார்ந்து சுமூகமாக பேசி தீர்த்துள்ளோம். அதுவும் பொறுமையாக முடித்துள்ளோம். அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு முடிக்கவில்லை.

    பாஜக வளர்ந்து வருவது உண்மையா?

    நீங்களே உண்மையா என்று கூறுகிறீர்கள். நான் என்ன சொல்ல...

    திமுகவை கார்னர் செய்வதை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

    எங்கள் பிரசாரத்தின் மூலம் எதிர்கொள்வோம். ஏற்கனவே இருக்கும் கவர்னரே போதும் எங்களுக்கு பிரசாரம் செய்வதற்கு. இப்போது பிரதமரும் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியை தேடி தருவார்கள் என்பது உண்மை.

    வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாக பாஜக கூறுவது?

    இது குடும்ப கட்சி. திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப பாச உணர்வோடு அண்ணா, தலைவர் கருணாநிதி ஆரம்பித்து வைத்தது.

    திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.

    பாஜக 2 இடத்தை பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது பற்றி?

    பாஜக வளர்ந்து வருவதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்பு தெரியும். யார் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரியும்.

    தேர்தல் அறிக்கை மத்திய அரசு திட்டங்கள் போல் உள்ளதே?

    எங்கள் கூட்டணி தான் மேல வரப்போகிறது. அந்த தைரியத்தில்தான் கொடுத்திருக்கிறேன்.

    பிரதமர் வேட்பாளராக உங்கள் மனசாட்சிபடி யாரை முன்நிறுத்துவீர்கள்?

    இந்தியா கூட்டணி வேட்பாளரை முன் நிறுத்துவேன் என்று கூறினார்.

    • ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
    • உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-

    * தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    * மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.

    * மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    * ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    * ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

    * வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    * தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

    * பாராளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

    * உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

    * புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.

    * ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

    * ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

    * அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

    * மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
    • சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளததை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.
    • பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, சென்னை மேயர் பிரியா உள்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துக்களை பெற மாவட்டம் வாரியாக பிப்ரவரி 5-ந்தேதி முதல் இக்குழுவினர் சென்று பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அந்தந்த மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தது. இ-மெயில் மூலமும் ஏராளமான கருத்துக்கள் பெறப்பட்டிருந்தது.

    கடந்த மாதத்துடன் கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேர்தல் அறிக்கையில் பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சரியாக உள்ளதா? என்பதை குழுவினர் தற்போது பார்வையிட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கும் ஓரிரு நாளில் இதை அனுப்ப உள்ளதாகவும் குழுவில் இடம் பெற்றவர்கள் தெரிவித்தனர்.

    இதில் திருத்தங்கள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
    • ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ்தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

    பாரதிய ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் இந்த தடவை தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிட மும் கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது.

    ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று டெல்லியில் இறுதி கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி யது. இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், சாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும்.

    இவை தவிர அரசு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

    எனவே இதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.

    • மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம்.
    • தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், பா.வளர்மதி, செம்மலை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.
    • அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனி மொழி எம்.பி. தலைமையிலான11 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்று வருகின்றனர்.

    இந்த குழுவில் கனிமொழியுடன் தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தி.மு.க. மாணவரணிச் செய லாளர் சி.வி.எம்.பி.எழிலர சன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.

    நேரயடியாக மனுக்களை பெற்றதுடன் தொலைபேசி வாயிலாக 18,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000-க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மக்களை சந்தித்தனர்.

    அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை அளித்தனர்.

    வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வி யாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை வழங்கினார்கள். இவைகளை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. உங்களது கோரிக்கைகளை தீர்த்து வைக்க தேர்தல் அறிக்கையில் இவற்றை தொகுத்து இடம் பெற செய்வோம் என்று கூறினார்.

    • பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
    • 27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை அறிய பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டசபை நடைபெற்ற காரணத்தாலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருவதாலும் இக்குழுவினர் சுற்றுப்பயணம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    23-ந்தேதி வேலூரில் சந்திப்பு காலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆரணி மாலை 3 மணி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு 26-ந்தேதி தஞ்சாவூரில் சந்திப்பு காலையில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாலை 3 மணிக்கு விழுப்புரத்தில் சந்திப்பு. கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.

    27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    28-ந்தேதி சென்னை (காலை 10 மணி) சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு.

    • அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
    • தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×