search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் அறிக்கைக்காக நாளை முதல் மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்: ஜெயக்குமார்
    X

    தேர்தல் அறிக்கைக்காக நாளை முதல் மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்: ஜெயக்குமார்

    • 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
    • மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாளை முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

    * மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்கிறோம்.

    * 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.

    * மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    * 10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம்.

    * நாளை சென்னை, வேலூர் மண்டலங்களில் கருத்து கேட்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×