என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: என்.டி.ஏ. தேர்தல் வாக்குறுதி
    X

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: என்.டி.ஏ. தேர்தல் வாக்குறுதி

    • ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
    • பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.

    பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.

    பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

    இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.

    பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.

    பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×