என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் அறிக்கை"
- தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
- பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தற்போது த.வெ.க. ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநில நிர்வாகிகளை கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டது. பொது மக்கள் கருத்து தெரிவிக்க புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.
தேர்தல் அறிக்கை குழுவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையதளத்திலும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துகளை தேர்தல் அறிக்கையில் இணைக்கும் பணியை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் செய்து வருகின்றனர்.
கடந்த கால தேர்தல்களிலும், தற்போதும், தி.மு.க., அ.தி.மு.க.. தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், த.வெ.க தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுமா? அல்லது இலவசங்கள் இல்லாத மாற்று திட்டங்கள் இடம் பெறுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்புமிக்கதாக மாறியுள்ளது.
இந்தநிலையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை பொதுமக்கள் விரும்பும் வகையில் பல முக்கிய அம்சங்களுடன் வருகிற 27-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.
- தேசிய செயற்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் குழு அமைப்பு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தோழர்கள் டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொது மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு "பாலன் இல்லம்" எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தியாகராயா நகர், சென்னை - 600 017, அலைபேசி எண்: 98408 54707, மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmail..com. " எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
- அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.
கோவை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதில் இடம் பெற்று இருந்தன.
இதற்கிடையே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக அந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று கோவை வந்தனர். கோவை காளப்பட்டி ரோடு சுகுணா கலையரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தாமோதரன், செ.ம.வேலுசாமி, வைகைசெல்வன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர்.
பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
- பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் கூட்டணியான மஹாயுதி, இன்று தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் அதாவலே, வினோத் தவ்டே, அமீத் சதம், ஆஷிஷ் ஷெலர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
- பிஎம்சி மூலம் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடன்கள் வழங்கப்படும்.
- பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- முதியோருக்கான மாத ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
- மும்பையின் 'பெஸ்ட்' (BEST) பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
- மும்பையில் உள்ள அனைத்து சாலைகளையும் கான்கிரீட் மயமாக்குவதன் மூலம் பள்ளங்கள் இல்லாத சாலைகள் உறுதி செய்யப்படும்.
- ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குள் மும்பையை வெள்ள அபாயம் இல்லாத நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
- மும்பையில் உள்ள வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோகிங்கியாக்களை அடையாளம் கண்டு வெளியேற்ற AI கருவி பயன்படுத்தப்படும் மற்றும் அவர்களுக்காகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.
- குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 30-35 லட்சம் வீடுகள் கட்டப்படும் மற்றும் 20,000 முடக்கப்பட்ட கட்டிடங்களுக்கு ஆக்கிரமிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- பிஎம்சி தூய்மைப் பணியாளர்களுக்குச் சொந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
- பள்ளிக் பாடத்திட்டத்தில் மும்பையின் வரலாறு சேர்க்கப்படும் மற்றும் மராத்தி இளைஞர்களுக்காக 'மும்பை பெலோஷிப்' திட்டம் தொடங்கப்படும்
- திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஈடுபடும் 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.






