search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist Party of India"

    • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
    • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

    சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

    அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

    ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை டி.ராஜா இன்று வெளியிட்டார்.
    • 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    பாராளுமன்ற தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * புதுச்சேரி, டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

    * புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    * 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

    * கவர்னர் பதவி நீக்கப்படும்

    * சிஏஏ சட்டம் ரத்து

    * மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்

    * பிஎம் கேர்ஸ் நிதி விவரங்கள் வெளியிடப்படும்.

    * சமூக நல மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்

    * நிதி ஆயோக் குழு கலைத்துவிட்டு திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

    *நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

    * சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை

    * நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.

    * பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்

    • காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்.
    • காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்.

    ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை (PAN Number) பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிபப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இன்று 2-வது நாளாக நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர்.
    • நாகப்பட்டினம் தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடந்த பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நாகப்பட்டினம், திருப்பூரில் போட்டியிடுகிறது. இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    இன்று 2-வது நாளாக நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து விவாதித்தனர்.

    திருப்பூர் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சுப்பராயனை மீண்டும் நிறுத்துவது எனவும் நாகப்பட்டினம் தொகுதியில் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் என்பவரை நிறுத்தவும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

    நாகப்பட்டினம் தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டது. மாநில நிர்வாகிகள் கருத்துக்களை ஏற்று இறுதியில் சுப்பராயன் மற்றும் வை.செல்வராஜ் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரையும் இன்று மாலை 4 மணியளவில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    அதன்படி, திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் போட்டியிடுவதாகவும், நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராஜ் போட்டியிடுவதாகவும அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்.
    • 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது.

    சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

    இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த கூட்டத்தில், 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது. இதில், இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டியளித்தது.

    • ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் முருகன், நெல்லை மண்டல செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    வள்ளியூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வள்ளியூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் முருகன், நெல்லை மண்டல செயலாளர் கிருஷ்ணன், வங்கி ஊழியர் சங்க தலைவர் ரெங்கன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் உடையப்பன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏஸ்.ஏ.பி.பாலன், ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் கலைமுருகன், வேம்பு சுப்பையா, சந்தானமுத்து, சாந்தி உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷ மிட்டனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் அறிவிப்பால் பரபரப்பு
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் இனம்காரியந்தல் பகுதியில் சுங்கச்சாவடி கட்டப்பட்டு வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

    இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை மீறி சுங்கச்சாவடியில் தற்போது வசூல் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதி ஒட்டியும் மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனம்காரியந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பள்ளி செல்லும் நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர குழு உறுப்பினர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிவகிரி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டார் சுற்றளவு பகுதி வரை செங்கல் சூளைகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அவ்வாறு இருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் உடனே அமல்படுத்த வேண்டும், பள்ளி செல்லும் நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும், சிவகிரி பேரூராட்சி வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதில் நகர துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், குருவு, மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.

    • 3 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
    • தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான மூ. வீரபாண்டியன் மீது 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 4ந்தேதி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் , கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாநகர மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

    • பாஜக. அரசை கண்டித்து போராட்டம்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    உடுமலை :

    பாஜக. அரசை கண்டித்து உடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் சௌந்தரராஜன், ரணதேவ், நந்தகோபால் , ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    • இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
    • பாஜக. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 -வது மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் 24 -வது தேசிய மாநாடு வரும் அக்டோபர் 14 முதல் 18 -ந்தேதி வரையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதன்படி திருப்பூரில் தற்போது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர் பல மாநிலங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளது.

    கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடுகள் எல்லாம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் என்ன என்பதை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரையில் மத்திய பாஜக. அரசு மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை பொருளாதாரம், அரசியல் சமூக தளத்தில் பின்பற்றி வருகிறது. பாஜக. அரசு அப்பட்டமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்வது இந்தியாவில் வறுமை வளர்ந்து கொண்டிருப்பதுடன், பசி வளர்ந்து மக்கள் உணவற்ற நிலையில் தவிக்கின்றனர். மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்து வருகின்றனர். ஊடகங்கள் உள்பட மக்களின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள பொதுத்துறை தனியார் மயமாக்குகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிக்களுக்கு ஆதரவான அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியார் துறையில் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று நாம் குற்றம் சொல்லுகிறோம். பொருளாதாரம் என்று வரும்போது விவசாயத்துறையைப் பார்க்க வேண்டும். இந்த விவசாயிகள் ஒரு ஆண்டு போராடி 700 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளது.

    இந்த சட்டங்களை திரும்பப்பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விலை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்குவோம் என்று எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் வங்கித்துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் மயமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவருகிறது. கல்வி மாநில பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலையில் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் புதிய கல்விக் கொள்கை எல்லோராலும் எதிர்க்கப்படக்கூடிய ஒன்றாக வந்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையானது கல்வியை தனியார்மயமாகவும், வாணிபமயமாகவும் மாற்றுகிறது.

    இந்தியாவை ஒற்றைப்பரிமாண நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருகிறது. பல மொழிகளையும், பல பரிமாணங்களையும் கொண்ட நாடாகும். இந்தியாவில் சமூக, மத நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் எல்லாம் தகர்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அகில இந்திய அளவில் பாஜக.முறியடிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம், இந்திய ஜனநாயகம், நாட்டின் பன்முகத் தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வரும் 2024 -ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. முறியடிக்கப்பட வேண்டும் என்றார். இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உடனிருந்தார்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25-வது மாநாடு நாளை நடக்கிறது.
    • ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டப வளாகத்தில் நாளை நடக்கிறது.இதையொட்டி நாளை மாலை 4மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நாளை மாலை 4மணிக்கு திருப்பூர் வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    ×