என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதை இதுவரை நான் பார்த்ததில்லை: விஜய் மீது கனிமொழி விமர்சனம்
    X

    தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதை இதுவரை நான் பார்த்ததில்லை: விஜய் மீது கனிமொழி விமர்சனம்

    • இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று.
    • அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது திமுக மற்றும் அரசாங்கம். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.

    யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.

    நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறாரக்ள்.

    இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

    Next Story
    ×