என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ayodhya"
- அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
- அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள்.
சென்னை:
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.
நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கும்பாபிஷேக நிகழ்ச்சி விபரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பள்ளியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கிறார்கள்.
அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள். ஏற்கனவே 85 லட்சம் குடும்பத்தினர் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர்.
- 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன
- வறுமை எண்ணெயை எடுக்க தள்ளி விட்டதாக அகிலேஷ் தெரிவித்தார்
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீஇராமருக்கான கோயில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் தீபாவளியை குறிக்கும் வகையிலும், ஸ்ரீஇராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டியும், சரயு நதிக்கரையில், 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
கின்னஸ் உலக சாதனை பதிவு நிறுவனம், டிரோன் மூலம் இதனை பதிவு செய்து எண்ணிக்கையை உறுதி செய்து, இதை ஒரு உலக சாதனை என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோவில் நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து சில குழந்தைகள் எண்ணெயை எடுத்து பாத்திரங்களில் ஊற்றி கொள்கின்றனர்.
இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் கருத்தை பதிவிட்ட யாதவ் தெரிவித்திருப்பதாவது:
பக்தி ஒரு புறம், வறுமை ஒரு புறம். எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை அவர்களை தள்ளி விட்டது. ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளி பெற செய்யும் ஒரு பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
दिव्यता के बीच दरिद्रता… जहाँ ग़रीबी दीयों से तेल ले जाने के लिए मजबूर करे, वहाँ उत्सव का प्रकाश धुंधला हो जाता है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) November 11, 2023
हमारी तो यही कामना है कि एक ऐसा पर्व भी आये, जिसमें सिर्फ़ घाट नहीं, हर ग़रीब का घर भी जगमगाए। pic.twitter.com/hNS8w9z96B
- அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
- தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ல் பதவியேற்றதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் 'தீபோத்சவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் முதல் மந்திரி யோகி ஆதித்ய்நாத்திடம் வழங்கப்பட்டது.
- வேங்கை வயல் விகாரமானது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
- அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது.
திருச்சி:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்னும் தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலைக்கு சாலையோரம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரண்டு நின்று மலர் மாலைகள், சால்வை அணிவித்தும் முளைப்பாரியுடன் வரவேற்றனர்.
கந்தர்வகோடடை பஸ் நிலையத்தில் வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
வேங்கை வயல் விகாரமானது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் தி.மு.க. போலியாக சமூக நீதி பேசிக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான பிரச்சனைகள் உள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இப்பகுதியில் இருந்து பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என 6 மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். பரிசீலிப்பதாக பதில் வந்துள்ளது.
காவிரி-குண்டாறு திட்டம், முந்திரி தொழிற்சாலை, மருத்துவமனைகள் மேம்பாடு உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு ரெயில் 60 நாட்கள் அயோதிக்கு இயக்கப்படும். அதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்து ராமரை தரிச்சலாம்.
இதற்கான முழு செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும். சனாதனத்தை இந்து தர்மத்தை, கோவிலை அழிக்கிறவர்கள் மத்தியில் இருந்து தர்மத்தை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2020, ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- இது ஒன்றும் ஒரு தனி நபர் நிகழ்ச்சி அல்ல என்றார் குர்ஷித்
உலகெங்கும் உள்ள இந்துக்களின் தெய்வமான ஸ்ரீஇராமபிரான் அவதரித்த தலமான அயோத்தியில் அவருக்கு ஒரு மிக பிரமாண்ட ஆலயத்தை கட்ட முடிவு செய்து 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா" (Shri Ramjanmabhoomi Teerth Kshetra) எனும் ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அவை முடியும் தறுவாயில் உள்ளன.
2020, ஆகஸ்ட் 5 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டி, கட்டிட திருப்பணிகளை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"பகவான் ஸ்ரீஇராமரின் விக்கிரகம் அடுத்த வருடம் ஜனவரி 22 அன்று இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு டிரஸ்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்", என கடந்த அக்டோபர் 22 அன்று இந்த டிரஸ்டின் பொது செயலாளர் சம்பத் ராய் (Champat Rai) தெரிவித்தார்.
"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என இந்த அழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அழைப்பு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
ஒரு கட்சிக்கு (பா.ஜ.க.) மட்டும் தான் அழைப்பிதழா? யார் வருவார்கள், வர மாட்டார்கள் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால், 'கடவுள்' ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் உரியவராகி விட்டாரா என்ன? அனைத்து கட்சியினரையும் பாகுபாடு இன்றி அழைக்க வேண்டாமா?. இந்த முக்கிய விழா ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான நிகழ்வாக மாறி விட்டது. இது ஒரு கட்சி நிகழ்வோ, தனி நபர் நிகழ்ச்சியோ அல்ல. அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு குர்ஷித் கூறினார்.
குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத உறவினர்கள் "எனக்கு ஏன் அழைப்பு வைக்கவில்லை?" என குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பயனர்கள் குர்ஷித்தின் கருத்து குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- டெல்லி ராம் லீலா மைதானத்தில் தசரா விழா கொண்டாடப்படும்
- பல தசாப்தங்கள் நாம் பொறுமையுடன் காத்திருந்தோம் என மோடி கூறினார்
நாடு முழுவதும் தசரா பண்டிகையின் கடைசி நாள் பண்டிகையான விஜயதசமி இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்திய தலைநகர் புது டெல்லியில் "ஸ்ரீ ராம்லீலா சொசைட்டி" எனும் பெயரில், இந்துக்களின் கடவுளான ஸ்ரீராமபக்தர்களின் சங்கம் உள்ளது. இவர்கள் வருடாவருடம் துவாரகா செக்டார் 10 பகுதியில் "தசரா" எனப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான விஜயதசமியன்று, ராம் லீலா மைதானத்தில், ராம்லீலா உற்சவத்தை நடத்தி வருகின்றனர். இதில் "ராவண தகனம்" எனும் நிகழ்வில் ராவணணின் மிக பெரிய உருவ பொம்மை எரிக்கப்படும்.
இந்த நிகழ்வை காண ஏராளமான இந்துக்கள் பல மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருகை தருவார்கள்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விஜயதசமி வாழ்த்துக்கள். இந்த திருவிழா நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போரையும், இறுதியில் தீமையை நன்மை வெல்வதையும் குறிக்கும் விழாவாகும். ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு மிக பெரிய அளவில் சிறப்பான கோவில் கட்டப்படுவதை காண நாம் பல தசாப்தங்கள் காத்திருந்தோம். தற்போது அங்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; நாம் பாக்கியசாலிகள். நமது பொறுமைக்கும் அதனால் கிடைத்த வெற்றிக்கும் இது ஒரு சான்று. அங்கு பகவான் ஸ்ரீராமரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட இன்னும் சில மாதங்களே உள்ளன. இன்றைய "ராவண தகனம்" நம் நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகளை எரிப்பதையும் குறிப்பதாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
#WATCH | Delhi: 'Ravan Dahan' being performed at Dwarka Sector 10 Ram Leela, in the presence of Prime Minister Narendra Modi, on the occasion of #Dussehra pic.twitter.com/IYFt5Yjqhk
— ANI (@ANI) October 24, 2023
- அயோத்தி கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர்.
- ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பலன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமக்கு கிடைக்கும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இதற்கு கோவில் ஊழியர்கள் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பது பா.ஜ.க.வின் எண்ணமாக உள்ளது.
இச்சூழலில் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க, அக்கோவிலை கட்டிவரும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை, உத்தர பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கோவில் தலைமை அர்ச்சகரின் மாத சம்பளம் ரூ.25,000 ஆக உள்ளது. இது ரூ.32,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்குமுன் ரூ.15,520 என்றிருந்த அவர்களது மாத சம்பளம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களில் அவர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்கிறது.
இதுபோல் உதவி அர்ச்சகர்களுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.20,000 என்றிருந்த சம்பளம் ரூ.31,960 ஆகவும், இதர உதவியாளர்களுக்கு ரூ.8,940 என்றிருந்த ஊதியம் இனி ரூ.24,440 ஆகவும் உயர்த்தி தரப்படும். ராமர் கோவிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதேபோல் ஊதிய உயர்வு கிடைக்கும். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இதுபோல் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக 16 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில் அனைவரது சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகளை உயர்த்தலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இதன்படி சம்பள உயர்வு அளிக்கலாம் என உத்தரபிரதேச அரசுக்கு காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
வாரணாசி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையும் சம்பளம் கிடைக்கிறது. ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது. இக்கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர். இக்கோவிலில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் அளிக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது.
- அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார்.
- ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார்.
இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதாவும் தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், 'இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்' என்று கூறி சென்றார்.
பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.
- ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
- ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார்.
- மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன.
- கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், 3 தளங்களாக கோவில் அமைகிறது. கோவில் கட்டுமானத்தில் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. தூண்களை செதுக்கும் பணியில் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் 24 விக்ரகங்கள் செதுக்கப்படுகின்றன. 5 வயதான குழந்தை வடிவ ராமர் சிலை, முதல் தளத்தில் நிறுவப்படும்.
கர்ப்பகிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கருவறையில் 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில் வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் ராமர் சிலை அமைய உள்ளது.
கருவறையில் வைக்கப்படும் சிலை என்பதால் எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களை பயன்படுத்த சிற்பிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே ராமர் சிலை வடிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் தேர்வு செய்யப்பட்டன.
நேபாளத்தின் காளி கண்டகி ஆற்றில் இருந்து சுமார் 7 அடி நீளமும், 350 டன் எடையும் கொண்ட 2 சாளக்கிராம கற்கள் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் ராமர் சிலை வடிக்க முதலில் திட்டமிடப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது. சாளக்கிராம கல்லை முதலில் தேர்வு செய்த சிற்பிகள் தற்போது அதை தவிர்த்து கிருஷ்ணசிலா கருங்கல்லில் சிலை வடிக்க உள்ளனர்.
ராமர் சிலைக்கான கருங்கல் கர்நாடகாவின் நெல்லிகரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் அயோத்திக்கு எடுத்து செல்லப்பட்டது. நெல்லிக்கருங்கல் என்று அழைக்கப்படும் இந்த பாறை , தனித்துவமான பண்புகளைக் கொண்டது. பல பிரபலமான சிற்பங்கள் இதில் வடிக்கப்பட்டு உள்ளன. அவை துங்கபத்ரா ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிறிய மலையில் இருந்து நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ராமர் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண்யோகிராஜ் வடிக்கிறார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். சிற்பி அருண் யோகிராஜ் ஏற்கனவே உத்தரகாண்ட