என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "babri masjid demolition"

    • இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை என புரியவில்லை.
    • மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    1992 இல் இந்து அமைப்பு கும்பல்களால் உத்தரப் பிரதேச அயோத்தியில் அமைந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் அதற்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக அயோத்தி மாவட்டத்தின் சோஹாவல் தாலுகாவில் உள்ள தன்நிபூர் கிராமத்தில், மாநில சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 3 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அந்த நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தார்.

    மசூதி அறக்கட்டளை, மசூதி மற்றும் பிற வசதிகள் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு 2021 ஜூன் 23 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தது. அனால் அதன் பின் எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.

    இதுதொடர்பாக மத்திய பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், வருவாய், நகராட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத் துறை போன்றவற்றிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படாததைக் காரணம் காட்டி இந்த நிராகரிப்பு நடந்துள்ளது.

    மேலும், இந்த விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணமாக மசூதி அறக்கட்டளை ரூ. 4,02,628 செலுத்தியுள்ளதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூ

    இந்த நிராகரிப்பு குறித்து மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.

    உத்தரபிரதேச அரசு நிலத்தை ஒதுக்கியது. இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை, மேம்பாட்டு ஆணையம் ஏன் மசூதியின் திட்டத்தை நிராகரித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.

    அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கு உ.பி. பாஜக அரசு சார்பில் மெத்தனம் காட்டப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.  

    • ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
    • ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.

    ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

    • ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி, பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது
    • இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன்.

    அயோத்தியில் பாபர் மசூதி  சிதைந்ததை போல காங்கிரசின் கட்டமைப்பு இன்று சிதைந்விட்டது என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், இன்று காங்கிரசின் கட்டமைப்பு பாப்ரியை [பாபர் மசூதி] போல சிதைந்துவிட்டது. ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி , பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது. அடிமைத்தனத்தின் கட்டுமானம் உடைந்தது. அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதற்கான பாதை வகுக்கப்பட்டது. இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன். அவர்கள்[காங்கிரஸ்] சாதி அரசியல் மூலம் உங்களை பிரிக்கின்றனர்.

    நான் சொல்வதெல்லாம் இதுதான், பிரிந்து கிடந்தால் தனித்தனியாக இருப்பீர்கள், ஒற்றுமையாக இருந்தால் எந்த தாய்க்கு பிறந்தவனாலும் உங்களின் தலை முடியைக் கூட அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்து விஷ்வ பரிஷத் உள்ளிட்ட தீவிர வலதுசாரி இந்துத்துவ இயக்கத்தினரால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் ரூ.1800 கோடி செலவில் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த மெட்டல் டிடெக்டர் வழியாக தான் செல்ல வேண்டும்.

    மேலும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வந்தால் அவர்களில் உடமைகளை சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதோடு மட்டும் அல்லாது கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்கு படகில் சென்று கண்காணித்து வருகிறார்கள். சர்வேதச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.
    ×