search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Class 12"

    நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #CBSEClass12Exam #CBSE
    சென்னை:

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற்ற 21 ஆயிரத்து 400 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 4 ஆயிரத்து 974 மையங்களிலும், அங்கீகாரம் பெற்று வெளிநாடுகளில் இயங்கும் 225 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 78 மையங்களிலும் தேர்வு எழுதுகிறார்கள். இந்தியாவில் 4,974 தேர்வு மையங்களில் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு கேள்வித்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கட்டாயம் தேர்வு அறைக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இந்த அடையாள அட்டைகள் இன்றி வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பேனாக்கள் மற்றும் அடிப்படை உபகரணங்களை மட்டுமே தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பென்சில் பாக்ஸ் கொண்டு செல்லலாம் ஆனால் அதில் எதுவும் எழுதியிருக்கக்கூடாது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மட்டும், நொறுக்குத்தீனி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அனைவரும் தண்ணீர் பாட்டில்களை வெளிப்படையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    செல்போன், புளூடூத் ஸ்பீக்கர், ஹெட்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ஹெல்த் பேண்டு உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பிரிண்டிங் செய்யப்பட்ட மற்றும் கைப்பட எழுதப்பட்ட எந்த பொருளுக்கும் அனுமதி இல்லை. சிப்ஸ், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் தவறான மற்றும் பொய் செய்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திருப்பதி தெரிவித்துள்ளார்.

    அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்வினை 4,974 மையங்களில் 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள் எழுதுகின்றனர்.

    தேர்வு பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டை விட ஒருவாரம் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளது. #CBSEClass12Exam #CBSE
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னா, தனது வெற்றியில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் கடினமாக உழைத்ததாகவும் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்று அசத்தியுள்ளார். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் தனது சாதனை குறித்து மேக்னா கூறியதாவது:-

    நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் முதலிடத்தைப் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த அளவிற்கு மதிப்பெண் பெற்றதில் எந்த ரகசியமும் இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும். நான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிப்பேன் என எண்ணிப் பார்த்தது கிடையாது.

    எனது ஆசிரியர்களும் பெற்றோரும் உண்மையில் எனக்கு உதவியாக இருந்தனர். படிக்கும் விஷயத்தில் ஒருபோதும் அவர்கள் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper

    ×