search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBSE"

    • தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
    • புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவை விரைவில் வெளிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்டி) தெரிவித்து உள்ளது. இந்தத் தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ.இயக்குனர் ஜோசப் இமானுவேல் தெரிவித்ததாவது:-

    கடந்த ஆண்டு வரை என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட உள்ள புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

    • அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்பதை சோதனை முயற்சி தீர்மானிக்கும்.
    • 9 முதல் 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பரிசோதனை முறையில் அனுமதி.

    9 முதல் 12-ம் வகுப்பு தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கும் வகையில் ஓபிசி (Open Book Examinations) திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த செய்தியை ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் ராம சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

    "இந்த தகவல் சரியானதுதான். இந்த முடிவு 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. சோதனை பயிற்சி விரைவில் தொடங்கப்படும். முழு விவரம் சிபிஎஸ்இ இணைய தளத்தின் curriculum committee minutes என்பதில் தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

    வருகிற நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், 11 முதல் 12-ம் வகுப்புகளுகளுக்கு உயிரியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் பரிசோதனை முயற்சி அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்துமா? என்பதை சோதனை முயற்சி தீர்மானிக்கும்.

    பாடப்புத்தகம், படிப்பு தொடர்பான பொருட்கள் அல்லது குறிப்புகள் அடங்கியவை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். புத்தகம் இல்லாமல் தேர்வு எழுதுவதை விட, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவது எளிதாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

    இது மாணவர்களின் நினைவாற்றலை பகுப்பாய்வு செய்யாது. அதேவேளையில் ஒரு விஷயத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் மற்றும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.
    • சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தேர்வின்போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது.
    • 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதி நடைபெறுகிறது.

    சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.

    காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதியும் நிறைவடைய உள்ளது.

    பொதுத்தேர்வு சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெற வாரியம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
    • இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.

    மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
    • 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது..

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது.

    அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஏப்ரல் 2-ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது.

    10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 13-ம் தேதி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • நாடு முழுக்க ஒரே கல்விமுறைக்கு சாத்தியமில்லை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்து உள்ளது.
    • குழந்தைகள் பள்ளிக்கு வெளியில் உள்ள சமூக வாழ்க்கையை நெருக்கமாக புரிந்து கொள்ளலாம்.

    நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரக் கோரும் மனுவிற்கு சி.பி.எஸ்.இ. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவருவதற்கு ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவிற்கு பதில் அளித்த சி.பி.எஸ்.இ. நாடு முழுக்க ஒரே கல்விமுறைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்து உள்ளது. இதோடு, "நாடு முழுக்க ஒரே கல்விமுறையை கொண்டுவரும் போது, அதில் உள்ளூர் மொழி, கலாசாரம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. தற்போதைய கல்விமுறையில் உள்ளூர் நெறிமுறைகள், கலாசாரம் மற்றும் உள்ளூர் வளங்கள் பற்றிய நெகிழ்வுத்தன்மை கொண்ட தேசிய கட்டமைப்பு பயன்பாட்டில் உள்ளது."

    "இதுபோன்ற பாடத்திட்டத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வெளியில் உள்ள சமூக வாழ்க்கையை நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும். இதனால் பொதுப்படையான ஒன்றைவிட வேறுப்பட்ட பின்னணி கொண்ட பாடத்திட்டம் சரியான ஒன்றாக இருக்காது," என்று தெரிவித்து உள்ளது.

    • தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
    • தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.

    தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.

    தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.

    22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.

    ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.

    அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

    மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.

    • பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
    • பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.

    சென்னை:

    புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் நாட்டில் பன்மொழி கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக் கையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி. எஸ்.இ.) தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை இந்திய மொழிகளில் கல்வியை வழங்க முடிவு செய்துள்ளது.

    தற்போது பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கிலமும் ஒரு சில பள்ளிகளில் இந்தியிலும் கற்பித்தல் பணி நடக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020-யானது பள்ளிகளில் தொடங்கி உயர்கல்வி வரை முழுவதும் வீட்டு மொழி, தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்றுவிக்கும் முறையை கொண்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட் டத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு திட்டமி டப்பட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க மத்திய கல்வி மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.

    பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டு இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும் இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் புதிய பள்ளி பாடத்திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மொழியியல் பன்முகத்தன்மை, கலாச்சார புரிதல் மற்றும் மாணவர்கள் இடையே கல்வியை வளர்ப்பதற்கான மதிப்புமிக்க அணுகுமுறையாக பன்மொழி கல்வி பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது.

    சி.பி.எஸ்.இ.யுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளை பயன்படுத்த பரிசீலிக்கலாம். இது மாணவர்களுக்கு பன்மொழியில் அறிவாற்றலை வளர்க்கும் நன்மைகளை வலியுறுத்துகிறது. குறிப்பாக அவர்கள் பல மொழிகளில் வெளியாகும்போது அடிப்படை நிலையில் இருந்து அவர்களின் தாய் மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த முடிகிறது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    22 அட்டவணைப் படுத்தப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.

    இது குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்கு விப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது நாட்டில் 28,886 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
    • 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 17-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடக்க உள்ளது.

    சென்னை:

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு எப்போது தொடங்கும்? என்ற தகவலை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுவிடும்.

    அந்தவகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 18-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ந்தேதியும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 17-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரையும் நடக்க உள்ளது.

    சேலம், நாமக்கல்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு பொது தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு  மாணவ- மாணவிகளுக்கு  பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, இன்று   (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான  தேர்வு நடைபெற்றது. 

    இந்த தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு  நாளை (24-ந்தேதி) தகவல்  தொழில்நுட்பம் பாடத் தேர்வுடன் முடிவடைகிறது.

    இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி  11.30 மணி அளவில் நிறைவடைகிறது.
    ×