என் மலர்
நீங்கள் தேடியது "CBSE"
- இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது.
- தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17-ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21-ஆம் தேதி ஆங்கிலம், 23-ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25-ஆம் தேதி அறிவியல், 27-ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2-ஆம் தேதி இந்தி, மார்ச் 7-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 21-ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23-ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத்தேர்வை எழுத வேண்டியிருக்கும்.
இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23-ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.
மாறாக, இந்தி பாடத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதிதான் நடைபெறும் என்பதால், அப்பாடத்தைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுக்கும், அறிவியல் தேர்வுக்கும் இடையில் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் அறிவியல் தேர்வுக்கு நன்றாக படிக்க முடியும்.
அதேபோல், இந்தி பாடத் தேர்வுக்கு முந்தைய கணினி அறிவியல் பாடத் தேர்வுக்கு இரு நாள்களும், பிந்தைய சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 4 நாள்களும் இருப்பதால் அந்தப் பாடங்களை அவர்களால் நன்றாக படிக்க முடியும். இந்தித் தேர்வுக்கு இரு நாள் இடைவெளி இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை இரண்டாம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரானது ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
- தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது உத்தேச அட்டவணை என்றும், பள்ளிகள் மாணவர்களின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
- 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
- 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தென் இந்திய சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளை ஒன்றிணைத்து "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்இ கிளஸ்டரின் 6 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில் இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.
புதுச்சேரி, அந்தமான் மற்றும் தமிழகத்தில் உள்ள சுமார் 500 கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் அடங்கிய 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஆண்கள் அணியில் 14 வயது பிரிவில் சச்சிதாநந்தா ஜோதி பள்ளியும், 17 வயது பிரிவில் ஜெயின் பப்ளிக் பள்ளியும்,19 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றது.
அதே போன்று பெண்கள் அணியில் 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 17 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 19 வயது பிரிவில் ஒஎன்ஜிசி பள்ளியும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் கோப்பையையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இந்திய அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் பங்கு பெறுவார்கள், என சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்தனர்.
- புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
- 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ. ஒப்புதல்.
திருச்சி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார்.
- தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர்.
- இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றுடன் இணைந்து, மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு கவனத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
- வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக்கூடிய சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* சி.பி.எஸ்.இ. தேர்வு துணை சட்ட விதி 13 மற்றும் 14-ன்படி, மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.
* வருகைப் பதிவு 75 சதவீதம் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
* சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
* வருகைப்பதிவு தினமும் புதுப்பிக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கிடைக்க செய்யவேண்டும்.
* மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதையும், வருகைப்பதிவு விவரத்தையும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு பதிவு செய்யப்பட்ட விரைவு தபால், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகள் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி மற்றும் மே மாதம் தேர்வு நடத்தப்படும்.
- முதல் பொதுத்தேர்வை கட்டாயம் மாணவர்கள் எழுத வேண்டும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் பின் வருமாறு:-
* அனைத்து மாணவர்களும் முதல் பொதுதேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
* முதல் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், 2ஆவது பொதுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.
* அவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக மூன்று பாடங்களை எழுதலாம்.
* முதல் பொதுத்தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை புறக்கணிக்கும் மாணவர்கள் அத்தியாவசிய ரிபீட் (Essential Repeat) ஆக கருதப்படுவார்கள். அவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத்தேர்வைதான் எழுத முடியும்.
* 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் கூடுதல் பாடங்கள் கிடையாது. தனிப்பாடம் ஆப்சனும் வழங்கப்படாது.
சிறப்பு சலுகை
* விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, முதல் தேர்வின்போது போட்டிகள் இருந்தால், 2ஆவது தேர்வின்போது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
* குளிர்காலத்தால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள் முதல் அல்லது 2ஆவது பொதுத்தேர்வு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
* சிறப்பு தேவை அவசியம் என்ற மாணவர்களுக்கு அது வழங்கப்படும். 2ஆவது பொதுத்தேர்வுக்கும் அது பொருந்தும்.
பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள் மதிப்பீடு (Internal assessment) தேர்வு நடத்தப்படும்.
முதல் பொதுத்தேர்வு பிப்ரவரி மத்தியில் இருந்து தொடங்கும்.
2ஆவது பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும்.
முதல் பொதுத்தேர்வு
புதிய 10ஆம் வகுப்பு மாணவர்கள்தான் முதல் பொத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய ரிபீட் (Essential Repeat) மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
2ஆவது பொத்தேர்தல்
அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் 3 பாடத்திற்கான திரும்ப எழுதலாம். முதல் மற்றும் 3ஆவது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எழுதலாம்.
பாடத்திட்டம் மற்றும் தேர்வு முடிவுகள்
இரண்டு தேர்வுகளுக்கும் முழு ஆண்டு பாடத்திட்டம் அடங்கும்.
படிப்பு, தேர்வு திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
முதல் தேர்வின் முடிவு ஏப்ரல் மாதம் வெளியாகும். 2ஆவது தேர்வின் முடிவு ஜூன் மாதம் வெளியாகும்.
- மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கல்வித்துறை கூறியது.
- இரவு 7.40 மணிக்கு நடுரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகள் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நேற்று காலை அடுத்தடுத்து பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொண்டனர். அதே வேளையில் மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கல்வித்துறை கூறியது. நீண்ட இழுபறிக்கு பின் இந்திரா நகர் அரசு கல்லூரி ஆண்டு விழா முடித்துவிட்டு வெளியே வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தேர்வு முடிவுகளை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர்.
இதனையடுத்து இரவு 7.40 மணிக்கு நடுரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவை 8 மணி நேரத்துக்கு பிறகு இரவில், அதுவும் நடுரோட்டில் வைத்து வெளியிட்ட சம்பவம் கல்விதுறையின் செயல்பாட்டை கேள்விகுறியாக்கி உள்ளது.
- பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தேசத்தின் வருங்கால வளர்ச்சியில் உங்களது முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த கட்டமாக உங்கள் வாழ்வில் முன்னேற உயர் கல்வியை மிக நேர்த்தியாக தேர்வு செய்து அதிலும் வெற்றி வாகை சூடி, தேசத்தின் வருங்கால வளர்ச்சியில் உங்களது முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம்.
- 95 சதவீத மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. results.cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இத்தேர்வில் 93.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.06 சதவீதம் அதிகரித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 2.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 95 சதவீத மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.






