என் மலர்
நீங்கள் தேடியது "CBSE"
- வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்
- பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.
பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி இன்று தொடங்கிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என்று அவரின் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், "கிரிக்கெட் பயிற்சி காரணமாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வை எழுதாமல் இருக்கலாம். அடுத்த பாடத்தேர்வை அவர் எழுதுவார் என நம்புவதாக தெரிவித்தார்.
ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதால் வைபவ் சூர்யவன்ஷி அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமாட்டார் என்று கூறப்படுகிறது.
- 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
- முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம்.
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதில் முதலாவது பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும், 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். இதில் வெற்றி பெறும், தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பா டம் என ஏதாவது 3 பாடங்களில் 2-வது தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
முதலாவது பொதுத்தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாத மாணவர்கள், 2-வது பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அவர்கள் 'மீண்டும் கட்டாயம்' என்ற பிரிவுக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரதான (முதலாவது பொதுத்தேர்வு) தேர்வில்தான் பங்கேற்க முடியும்.
இவ்வாறு சன்யம் பரத்வாஜ் கூறினார்.
- முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது.
- தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
மத்திய கல்வி பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக் கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும் 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது.
சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
- கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
- எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
இதுவரை ஆசிரியர்கள் மாணவர்கள் பேப்பரில் எழுதிய விடைத்தாள்களைப் பேனா கொண்டு திருத்தி வந்தனர். ஆனால் இனி அப்படி கிடையாது. மாணவர்கள் வழக்கம் போல விடைத்தாள்களில் தேர்வு தேர்வை எழுதினாலும், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள், அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த நடைமுறை, தற்போது நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.
ஆனால் எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
இந்த புதிய முறையில் விடை திருத் தும் பணிக்காக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் நாளைக்குள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு 14 முதல் 16-ந் தேதி வரை ஆசிரியர்களுக்கு இதற்கான ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
- இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது.
- தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17-ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21-ஆம் தேதி ஆங்கிலம், 23-ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25-ஆம் தேதி அறிவியல், 27-ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2-ஆம் தேதி இந்தி, மார்ச் 7-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 21-ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23-ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத்தேர்வை எழுத வேண்டியிருக்கும்.
இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23-ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.
மாறாக, இந்தி பாடத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதிதான் நடைபெறும் என்பதால், அப்பாடத்தைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுக்கும், அறிவியல் தேர்வுக்கும் இடையில் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் அறிவியல் தேர்வுக்கு நன்றாக படிக்க முடியும்.
அதேபோல், இந்தி பாடத் தேர்வுக்கு முந்தைய கணினி அறிவியல் பாடத் தேர்வுக்கு இரு நாள்களும், பிந்தைய சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 4 நாள்களும் இருப்பதால் அந்தப் பாடங்களை அவர்களால் நன்றாக படிக்க முடியும். இந்தித் தேர்வுக்கு இரு நாள் இடைவெளி இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை இரண்டாம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரானது ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
- தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது உத்தேச அட்டவணை என்றும், பள்ளிகள் மாணவர்களின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
- 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
- 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தென் இந்திய சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளை ஒன்றிணைத்து "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்இ கிளஸ்டரின் 6 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில் இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.
புதுச்சேரி, அந்தமான் மற்றும் தமிழகத்தில் உள்ள சுமார் 500 கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் அடங்கிய 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஆண்கள் அணியில் 14 வயது பிரிவில் சச்சிதாநந்தா ஜோதி பள்ளியும், 17 வயது பிரிவில் ஜெயின் பப்ளிக் பள்ளியும்,19 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றது.
அதே போன்று பெண்கள் அணியில் 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 17 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 19 வயது பிரிவில் ஒஎன்ஜிசி பள்ளியும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் கோப்பையையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இந்திய அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் பங்கு பெறுவார்கள், என சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்தனர்.
- புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
- 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ. ஒப்புதல்.
திருச்சி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார்.
- தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர்.
- இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றுடன் இணைந்து, மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு கவனத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
- வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக்கூடிய சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* சி.பி.எஸ்.இ. தேர்வு துணை சட்ட விதி 13 மற்றும் 14-ன்படி, மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.
* வருகைப் பதிவு 75 சதவீதம் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
* சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
* வருகைப்பதிவு தினமும் புதுப்பிக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கிடைக்க செய்யவேண்டும்.
* மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதையும், வருகைப்பதிவு விவரத்தையும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு பதிவு செய்யப்பட்ட விரைவு தபால், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகள் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






