என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBSE Public Exams"

    • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
    • 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த வாரம் ெதாடங்கியது.
    • மார்ச் 21-ந் தேதி, கணக்குத் தேர்வுடன், அனைத்து பாடத்தேர்வுகளும் முடிவடைகின்றன.

    கோவை,

    சி.பி.எஸ்.இ., மாண வர்களுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முக்கிய பாடங்களுக்கான தேர்வு, நாளை தொடங்குகிறது.

    மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த வாரம் ெதாடங்கியது.ஆனால், முக்கியப் பாடங்களுக்கான தேர்வு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடக்கிறது.

    கோவை மாவட்டத் தில், இந்த தேர்வுகளை 110 பள்ளிகளை சேர்ந்த, 9 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கு, 35 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    10-ம் வகுப்புக்கு, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட8 மொழி பாடத்தேர்வு நடக்கிறது.

    தொடர்ந்து 27-ந் தேதி ஆங்கில பாடத்தேர்வு நடக்கிறது. மார்ச் 21-ந் தேதி, கணக்குத் தேர்வுடன், அனைத்து பாடத்தேர்வுகளும் முடிவடைகின்றன.பிளஸ்-2 மாணவர்களுக்கு, நாளை (வெள்ளிக்கிழமை) ஆங்கில தேர்வுடன் முக்கிய பாடத் தேர்வுகள் தொடங்குகின்றன. வருகிற 28-ந் தேதி இயற்பியல் பாடத்தேர்வு நடக்கிறது.

    ஏப்ரல் 5-ந் தேதி, சைக்காலஜி பாடத்துடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன. தேர்வு முடிந்ததும், மாணவர்களின் விடைத்தாள்கள், சென்னை, மண்டல அலு வலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    தேர்வு மையங்களில், அனைத்து பாதுகாப்பு ஏற் பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தேர்வு விதிமுறைகள், பள்ளிகளில் விளக்க உத்தர விடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    ×