என் மலர்

    நீங்கள் தேடியது "Public Exam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 மொழி பாடங்களில் ஒரு பாடம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக போதுமான நேரமும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

    இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு கலை மற்றும் அறிவியல், பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை கொண்டதாகவும், தொழிற்கல்வி மற்றும் கல்வித் துறைகளுக்கு இடையே பிரிவினைகள் இருக்கக்கூடாது என்ற வகையிலும், உயர்கல்வியில் சேருவதற்கான ஒரு வழிமுறையாக பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை பார்க்கும் நடைமுறையை தகர்த்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதன்படி, புதிய பாடத்திட்டம் தற்போது தயாராக இருப்பதாகவும், இதன் அடிப்படையில் 2024-ம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுமட்டுமல்லாமல், மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து இருக்கும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    இந்த 2 மொழி பாடங்களில் ஒரு பாடம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் இந்த பொதுத் தேர்வை (வாரியத் தேர்வு) சந்தித்து வந்த நிலையில், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் மூலம் இனி ஒவ்வொரு கல்வியாண்டிலும் 2 முறை பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பொதுத்தேர்வுக்காக பல மாதங்கள் பயிற்சி, மனப்பாடம் ஆகியவற்றை செய்வதை தவிர்த்து, மாணவர்களின் புரிதல் மற்றும் திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு என எளிதாக மாற்றப்பட்டு உள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.

    2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார்களோ, அதனை அவர்கள் வைத்துக்கொள்ளலாம் என்றும், தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக போதுமான நேரமும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்து முடித்த பாடங்களில் இருந்து தேர்வுக்கு தயாராக வரலாம். மேலும் சிறந்த மதிப்பெண்களை தக்க வைக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதால், தற்போதுள்ள இடைவெளியில் பள்ளிக்கூட வாரியங்கள் தேவைப்படும் தேர்வுகளை நடத்துவதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், வாரியத் தேர்வுகளை மேம்படுத்துவோர், மதிப்பீடு செய்வோர் அது சார்ந்து பல்கலைக்கழகம் நடத்தும் சான்றிதழ் படிப்பை இந்த பணிகளுக்கு முன்பாக முடித்திருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சகம் கூறி இருக்கிறது.

    பொதுத்தேர்வு நடைமுறைகள் மாற்றப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு (சி.சி.இ.) தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. அது 2017-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழைய முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    அதேபோல் கொரோனா தொற்று காலத்தில் கூட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 2 காலங்களாக பிரிக்கப்பட்டு ஒருமுறை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, மீண்டும் பழைய முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வி அடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர்.
    • தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் உடனயாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலே உயர்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு பள்ளிகளில் நேரடியாக படித்தவர்களும், தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி 56 ஆயிரம் பேர் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வி அடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது.

    தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மழையிலும் இத்தேர்வினை மாணவ-மாணவிகள் எழுதினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 830 மாணவ-மாணவிகள் விடைத்தாள்கள் திருத்தியதில் மொத்த மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது.
    • வினாத்தாளை திருத்திய 100 ஆசிரியர்கள் இந்த தவறினை செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த முடிவில் திருப்தி இல்லாத 1,300 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கும், 2,300 மாணவர்கள் மறு கூட்டலுக்கும் விண்ணப்பித்தனர். இதற்கான முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

    இதில் 830 மாணவ-மாணவிகள் விடைத்தாள்கள் திருத்தியதில் மொத்த மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. பெரும்பாலும் 10 மதிப்பெண்கள் கொண்ட வினாக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணில் குளறுபடி நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வினாத்தாளை திருத்திய 100 ஆசிரியர்கள் இந்த தவறினை செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தபட்ட ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. விசாரணையில் தவறுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 15-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உடற்கல்வி துறைக்கு பாடம் வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
    • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை.

    சென்னை:

    சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கிய பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. 16,108 அரசு பள்ளிகளில் 40 லட்சத்து 22 ஆயிரத்து 324 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 26 லட்சம் மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

    மாநில கொள்கை குழுவில் புதிதாக 2 நபர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அறிக்கை சமர்பித்த பின்னர் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

    15-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உடற்கல்வி துறைக்கு பாடம் வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர்களுக்கு போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியிலேயே தெரிவித்து உள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுப்போம்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்குவதா? இல்லையா என்பது குறித்து புதிய கல்வி கொள்கை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் கல்வித்துறை யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

    2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணப்பித்து, விடைத்தாள் நகலை பெற்றுள்ளனர்.
    • பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்து இருக்கிறது.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு, மாணவர்கள் அந்த மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வியில் சேருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வராதவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதனை சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணப்பித்து, விடைத்தாள் நகலை பெற்றுள்ளனர். அவ்வாறு விடைத்தாள் நகலை பெற்ற மாணவரில் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விடைத்தாள் நகலில் 66 மதிப்பெண் மட்டுமே போடப்பட்டு இருந்த நிலையில், தேர்வு முடிவில் 69 மதிப்பெண் இடம்பெற்று இருந்தது. இந்த நகல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    விடைத்தாளில் ஒரு மதிப்பெண், தேர்வு முடிவில் ஒரு மதிப்பெண் இது எதற்காக போடப்பட்டது? மதிப்பெண்ணை பதிவு செய்யும்போது ஏற்பட்ட குளறுபடியா? அல்லது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக அதிக மதிப்பெண் போடப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்த தகவல் உண்மையா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வந்து இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்சென்று தங்களது விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
    • மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

    சென்னை:

    அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்-2) பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 30-ந்தேதி (இன்று) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்சென்று தங்களது விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் - அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

    தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 31-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் முதல் ஜூன் 3-ந்தேதி மாலை 5 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் - அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்தொகையை பணமாக செலுத்தவேண்டும்.

    மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.505-ம், மறுகூட்டல்- உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305-ம் ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.205-ம் செலுத்தவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டோ டிரைவர் கணேசனின் மகள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
    • கண்ணம்மாள் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை யூனியன், கீழநத்தம் கீழூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மகள் கண்ணம்மாள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது வெளி யான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கண்ணம்மாள் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    குடும்ப த்தின் ஏழ்மை நிலையிலும் அவர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை பாராட்டி தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார தலைவர் கனகராஜ் உடன் இருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
    • பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்களில் முதன்முறையாக ராஜேஸ்வரி மட்டும்தான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி சாதித்தவர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குகைகளில் பளியர் இன மலைவாழ் மக்கள் அதிகளவு வசித்து வந்தனர். இவர்களை வனத்துறையினர் பழனி அருகே உள்ள குட்டிக்கரடு, மண்திட்டு, பொந்துபுளி, குதிரையாறு மற்றும் சண்முகம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர்.

    இவர்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் பெற்று தந்தனர். இருந்தபோதும் இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து பின்னர் இடையில் நின்றுவிட்டனர். பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்கள் சண்முகம் பாறையில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் குடிசை வீட்டில் மின்விளக்கு வசதி இல்லாத மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தனர். இதுவும் இவர்களது குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலைக்கு காரணமாக அமைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் கல்வித்துறை அதிகாரிகள் முயன்றனர். அப்போது தன்னாசி மகள் ராஜேஸ்வரி(16) என்பவர் 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.

    அவருக்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பிறகு பள்ளியில் சேர்ந்த ராஜேஸ்வரி அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்த தகவல் அறிந்ததும் மாணவியை உதவி கலெக்டர் பிரியங்கா நேரில் சந்தித்து தோல்வியை பற்றி கவலைப்படாமல் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகுமாறு கூறினார். அதன்பின் மீண்டும் பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். தேர்வு முடிவு வெளியான நிலையில் அவர் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சிவக்குமார் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினார். மேலும் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான கல்வி உபகரணங்களை வழங்கி படிப்பை தொடருமாறு கூறினார்.

    மேலும் தனது காரில் முன்புற சீட்டில் மாணவியை அமர வைத்து ஊரை வலம் வந்தார். நீயும் நல்ல முறையில் கல்வி கற்றால் அரசுப்பணியில் சேர்ந்து இதுபோல சைரன் வைத்த காரில் வலம் வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்தி பேசினார். இது மாணவியின் குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பளியர் இனத்தை சேர்ந்த 17 குடும்பங்களில் முதன்முறையாக ராஜேஸ்வரி மட்டும்தான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்வுத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
    • திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது.

    சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத் துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    எனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக 11-ம் வகுப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்புகள் வரும் 27-ந் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram