என் மலர்
நீங்கள் தேடியது "TN Minister"
- தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.
தி.மு.க. முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப் பிய கேள்விகளுக்குத் தேர் தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்க வில்லை.
ஆட்சிகளை மாற்றி அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.
பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.
மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகா ரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பா வையாக மாறின.
இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்தி ருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன் னரே பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி விட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப் பட்டது.
பீகாரில் பல லட்சக்க ணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதி லிருந்து சில லட்சக்க ணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வில்லை.
ஜனநாயகத்தின் ஆணிவே ரான தேர்தலை நேர்மை யோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.
பீகாரில் கடைப்பிடிக் கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படா மலேயே நமது வாக்கா ளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்க வும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கல்லூரிகளில் 2025- 2026 ஆம் கல்வியாண்டின் மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
- தகுதியானவர்களுக்கு 18.08.2025 அன்று முதல் 28.08.2025 வரை அத்தத்த மண்டவங்களில் நேர்காணல் நடைபெற்றது.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025- 2026 ஆம் கல்வியாண்டின் மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும். அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இதில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, 21.07.2025 அன்று கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணியமர்த்துதலுக்கான இணையதா விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு-விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தகுதியானவர்களுக்கு 18.08.2025 அன்று முதல் 28.08.2025 வரை அத்தத்த மண்டவங்களில் நேர்காணல் நடைபெற்றது.
(01.09.2025) நேர்காணல் முடிவில் தற்போது தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் Ingasa.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச்சொல் (Password) வழியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
08.09.2025-க்குள் உரிய கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் இணைய வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
- எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.
திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.
அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இபிஎஸ் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
- அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.
அ.தி.மு.க ஐ.டி.விங் சரியாக செயல்படாததால் அந்த வேலையையும் செய்ய முயற்சிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தவொரு மனிதராக இருந்தாலும், மாநிலத்திற்கு நல்லது நடந்தால் அதைப் பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். தமிழ்நாட்டின் நலன் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள்தான், மாநிலத்தின் சாதனைகளை பாராட்ட மனமின்றியும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கடந்த சில வருடங்களாக அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கிற்காகவும்தான் எடப்பாடி பழனிசாமி கோபமடைய வேண்டும், முருகன் பெயரில் பா.ஜ.க. நடத்திய அரசியல் கூட்டத்தில் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியைப் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த தன் கட்சி நிர்வாகிகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை.
இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா? தமிழ்நாடு பெரியார் மண்-அண்ணா மண் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறாரா அல்லது இங்கேயும் காவிக் கூட்டத்தின் அராஜக செயல் தாண்டவமாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்க்கும் இவர்களை அவர்களின் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்.
சமீபத்தில், தி.மு.க.வின் ஐ.டி.விங், பா.ஜ.க.வின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமைமிக்க பண்பாட்டுக் கருவூலமான கீழடி விவகாரத்திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தமிழ் விரோத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி, தக்க பதிலடி கொடுத்தது.
தி.மு.க. ஐ.டி. விங்கின் பாய்ச்சலையும், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் படுதோல்வியையும் எதிர்க்கட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் அவதூறு பரப்பும் வேலையையும் அவரே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். முதலமைச்சரின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 2024-ல், அவர் அந்நிய நேரடி முதலீடு (FDI) எண்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அப்போதே நானும் அவருக்கும், அவரது கற்பனைத் திறனற்ற அடிமைப் படைக்கும் அந்நிய நேரடி முதலீட்டுத் தரவு தமிழ்நாட்டின் செயல்திறனை அளவிடுவதற்கான சரியான தரவு அல்ல என்று விளக்கமளித்திருந்தேன்.
இப்போதாவது இந்த எளிய உண்மையை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் மீண்டும் கூறுகிறேன். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் பிற மாநிலங்களில் உள்ளன.
மேலும், அந்த நிதி, அவற்றின் தலைமையகங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டை பல நிறுவனங்கள் முதலீடு செய்யவோ அல்லது மறுமுதலீடு செய்யவோ தேர்வு செய்திருந்தாலும், அவற்றின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் வேறு மாநிலங்களில் உள்ளன.
அந்நிய நேரடி முதலீடுகளைக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. எனவேதான் பொருளாதார நிபுணர்கள் அதை மாநிலத்தின் வளர்ச்சிக்கான சரியான குறியீடாக ஏற்றுக்கொள்வதில்லை.
இத்தகைய நிலையிலும், தமிழ்நாடு இந்தியாவின் முதலீட்டில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளதுடன், தொடர்ச்சியான வளர்ச்சியையும் கண்டு வருகிறது.
முதலமைச்சர் கூறியது போல, நமது நியாயமான முதலீடுகளைப் பிற மாநிலங்களுக்குத் திசை திருப்புவதில், குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் ஒன்றிய அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. அதற்காக தன் அதிகார பலத்தைப் பயன்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன் கண்டன அறிக்கையை ஒன்றிய அரசை நோக்கி வெளியிடுவதே சரியானதாக இருக்கும். அ.தி.மு..கவின் 2016-2021 காலகட்டத்தில் 32 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றதாக அவர் கூறுகிறார்.
திராவிட மாடல் அரசு தனது ஆட்சிக்காலமான இந்த 4 ஆண்டுகளில், 310 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளையும், 31 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. அவரது கூற்றுப்படியே 2 இலட்சம் கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதை ஒப்புக்கொண்டாலும், எத்தனை
சதவீதம் முதலீடாக மாறியது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அவர் முதலீடாக மாற்றாமல் விட்டுச் சென்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், காழ்ப்புணர்வு காட்டாமல், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கான முதலீடுகளாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து செயல்படுத்தி வருகிறது மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் தலைமையிலான அரசு.
கடந்த நிதியாண்டில் 9.69% GSDP வளர்ச்சியுடன் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 6%க்கும் குறைவாக இருந்தும், இந்தியாவின் உற்பத்தி GDP-யில் 11.9% பங்களிக்கிறோம். இந்த மக்கள்தொகையைத்தான் பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் நியாயமற்ற மறுவரையறை மூலம் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறது.
ஆனாலும், தனது அரசியல் எஜமானர்கள் தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து எதுவும் பேசாமல் எதிர்க்கட்சித் தலைவர் அமைதியாக இருக்கிறார்.
முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், EV, ஜவுளி, தோல் மற்றும் காலணி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 2021-22-ல், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நாம் வெறும் 1.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தோம். ஆனால், கடந்த ஆண்டு 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டினோம் - வெறும் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி!
இந்திய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 21.8 விழுக்காடுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 38 விழுக்காடு ஆகும். இந்தப் பொருட்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை.
மேலும், தென் தமிழ்நாடு ஒரு முக்கிய பசுமை ஆற்றல் மற்றும் ஆட்டோ மையமாக உருவெடுத்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஜாம்பவான்களான, விரைவில் திறக்கப்படவிருக்கும் Vinfast உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பெரும் முதலீடுகள் குவிந்து, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை நாம் அடைந்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் TIDEL Neo பூங்காக்களைக் கட்டி வருகிறோம். இதில் பல ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகாலத்தில் அவர்கள் வெறும் 6-7 SIPCOT பூங்காக்களை மட்டுமே நிறுவினர். இந்த அரசாங்கத்தின் கீழ், நாம் 30- க்கும் மேற்பட்ட பூங்காக்களை நிறுவியுள்ளோம், மேலும் பலவற்றை நிறுவும் பணியில் இருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே.. கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்க நீங்கள் 10 ஆண்டுகளாகத் தூங்கினீர்கள் கோயம்புத்தூருக்குத் தகுதியான விமான நிலையத்தை அளிக்க நமது முதலமைச்சர்தான் 2000 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கினார். உங்கள் எஜமானரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் கூட நமது முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்குப் பெருந்தன்மை காட்டினார்.
ஆனால், மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் நன்றியுணர்வுடன் அதைப் பாராட்டக்கூட வேண்டாம். காழ்ப்புணர்ச்சியால் அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துங்கள்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு அக்டோபர் 2024-ல் மட்டுமே அமைச்சரவையால் இறுதி ஒப்புதல் கிடைத்தது, மேலும் அதன் நிறைவுக்கான இலக்கு 2028 ஆகும். ஒன்றிய அரசு இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து நீங்கள் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறீர்களா?
முதலமைச்சர் அவர்கள் ஓசூர் மற்றும் ராமேஸ்வரத்தில் பெரிய விமான நிலையங்களை அறிவித்துள்ளார். இது அந்த பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை மிகப்பெரிய முதலீட்டு மையங்களாக மாற்றும். தஞ்சாவூரில் முதல் SIPCOT, தென்காசியில் முதல் SIPCOT, கன்னியாகுமரியில் முதல் TIDEL Neo ஆகியவை நமது முதலமைச்சர் உறுதி செய்த சில முதல் முயற்சிகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொடர்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு அரசியலில் கவனம் பெற நினைக்கலாம். ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்று, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும். மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் அளித்த நேர்காணலின் தரவுகளைக் கூட சரியாகப் புரிந்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.
பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகள் உள்ளிட்ட உள்ளிட்ட கோமாளிக் கூத்துகளால், உலகத்தில் எந்த நாடும் தமிழ்நாட்டுக்கு வரத் தயங்கியதையும், கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மேற்கொண்ட தொழில் வளர்ச்சியாலும், அதற்காக உருவாக்கிய கட்டமைப்புகளாலும் உலகின் பல நாடுகளும் தமிழ்நாட்டில் நாங்கள் முதலீடு செய்கிறோம் என ஆர்வம் காட்டி வருவதையும் அறியாததுபோல அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். அமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாகவே அது பற்றி செய்தியாளரின் கேள்விக்கு விளக்கமளித்து பதிலடி கொடுத்திருப்பதால், தங்களின் அடுத்த அறிக்கையை தயாரிக்கும் நேரத்தில் அதனைக் காண வேண்டுகிறேன்.
விமர்சனங்களை வரவேற்று எதிர்கொள்கின்ற ஆற்றல் மிக்க முதலமைச்சராக நம் திராவிட நாயகன் அவர்கள் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சரியான தரவுகளுடன் முன்வைக்கட்டும். மண்டபத்தில் யாரோ சொல்வதை நம்பி, அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார்.
- என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?
தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்?
கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?
பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் 'உறங்குவது ஏன்' என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய திமுக பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து நமது எதிர்கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்?
நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன?
தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும்?
இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்?
ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா?
எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தனர்.
ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த அண்ணன் அவர்கள்கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே? எது தடுக்கிறது?
என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?
இன்றுகூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் "கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன் !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
- சசிகுமார், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் உடன் என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.
சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.
அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.
படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.
படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
- மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
- முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்திலும் ஈடுபடப் போகிறோம்.
சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்க நிலுவையில் உள்ளது.
முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் எனு்னை ரிமாண்ட் செய்யட்டும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
இவ்வாறு கூறினார்.
- வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- வேலை தேடி சென்று இன்னல்களுக்கு ஆளானவர்களை அரசு மீட்டு வருகிறது.
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;-
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான பணிகளை செய்ய வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அந்த அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான அவர்களுக்காக விமான கட்டணம் தொடங்கி அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, ராமச்சந்திரன் சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அங்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
- இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.
விழுப்புரம்:
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற பொழுது கல்லூரி முதல்வரும் நிருபர்களும் என்னிடம் கூறினார்கள். ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார்.
தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்று அதை மூடுவது முக்கியமல்ல. தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப் பிரிவுகள் கொண்டு வரவும் சட்டம் இயற்றப்பட்டது.
நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.
ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது. அவர் நான் மழுப்பலாக பதில் அறிவித்திருந்தேன் என்று கூறிவருகிறார். நான் என்ன மழுப்பலாக அறிவித்து விட்டேன். அவர்கள் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா. அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார்.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கலைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது போன்ற பிரச்சனைகள் களையப்படும்
மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
- வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
- குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
சென்னை:
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை.
* சோதனைகளை எதிர்கொள்வது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல.
* எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
* எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும்"
* வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
* குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
* இருக்கின்ற சொத்துக்களே போதுமானது, புதிய சொத்துக்கள் தேவையில்லை.
* சோதனைக்கு பிறகு தவறை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்து கொள்ளவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.






