என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வு அட்டவணை"
- இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
- எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.
திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.
அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
- முழு ஆண்டு தேர்வுக்குப் பிறகு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில், 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி வேலை நாட்கள் 2026 ஏப்ரல் 24ம் தேதியுடன் நிறைவுபெறும் என்றும் ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1ம்- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக தேர்வு.
- 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
1ம்- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக நடத்தப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் தேர்வை தொடர்ந்து கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் ஏப்ரல் 22-ம் தேதி முதல் தொடங்கும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி முதல் தொடங்கும். விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரை நடைபெறும்.
சென்னை:
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதற்கான உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரையும், அரையாண்டுத் தேர்வுகள் டிச.11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.
இது தவிர 12, 11 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுக்கான, 6 முதல் 9-ம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
- 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.
10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;
டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்
டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல்







