என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exams"

    • இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும்.
    • இந்த தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் ஆவார்

    இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு எண்ணற்றோர் விண்ணப்பிப்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது.

    அவ்வகையில் ஒடிசாவில் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகப் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இதனை பேர்களுக்கு தேர்வு அரை ஒதுக்க முடியாமல் விமான ஓடுதளத்தில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    விமான ஓடுதளத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட 8,000 பேர் தேர்வெழுதினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஊர்க்காவல் படை பணிக்குத் தினசரி ரூ.612 ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது மாதத்திற்கு சுமார் ரூ.18,360 ஆக வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும். ஆனால் தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இம்மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

    புதுடெல்லி:

    அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். மதிய உணவு இடைவேளையில் நண்பர்களுடன் உட்கார்ந்து விஷ்ணுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    விஷ்ணுவும் அவனது நண்பர்களும் சாப்பிடும் போதுதான் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசித் தெரிந்து கொள்வார்கள்.

    விஷ்ணுவின் நெருங்கிய நண்பனான பத்ரி ஓரளவு நாட்டு நடப்புகளைத் தெரிந்து வைத்திருந்தான். எனவே எந்த சந்தேகம் என்றாலும் விஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் பத்ரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். பத்ரியும், தனக்கு தெரியவில்லை என்றாலும் அது பற்றி விசாரித்து சொல்லி விடுவான்.

    அன்றும் அப்படிதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு, என்னடா பத்ரி புதிய தேசிய கல்விக் கொள்கைனு ஒண்ணு கொண்டு வராங்களாமே, என்னடா அது? என கேட்டான்.

    அதுவா, ஏற்கனவே உள்ளதுதாண்டா, அத இன்னும் கொஞ்சம் விளக்கமா இருக்கும். அதாவது, நாம் படிக்கிற படிப்பு வெரும் தியரியா இல்லாம, பிராக்டிக்கலாவும் நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும். நம்ம படிப்பு சார்ந்த வேலையும் உடனே கிடைக்கும் அல்லது நாமே பிசினசும் தொடங்க முடியும். இதுக்குதான் மத்திய அரசு தற்போதைய பாடத்திட்டங்கள்ல மாற்றம் கொண்டு வந்துருக்கு என்றான் பத்ரி.

    ஆமா, நான் கூட கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் எல்லாம் மாற்றம் செய்யப் போறாங்களாமே அப்படியா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டான் விஷ்ணு.

    அது கரெக்ட் தான். சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை இரு முறை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றான் பத்ரி.

    அப்படியா, அதுபத்தி சொல்லு கேட்போம் என்றான் விஷ்ணு.

    பொதுத் தேர்வை இரு முறை எழுதுவது தொடர்பாக பத்ரி கூறியதன் சாராம்சம் இதுதான்:


    மத்திய கல்வி மந்திரி தலைமையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.

    உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.

    இந்நிலையில், பொதுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது.

    அனைத்து மாணவர்களும் எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவார்கள். ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால் மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும் எழுதிக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

    இதன்படி, பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்கட்டமாக பிப்ரவரியிலும், இரண்டாம் கட்டமாக மே மாதத்திலும் பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.


    பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு வரவிருக்கும் 10-ம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்த மாணவர்கள், தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கு 9,10-ம் வகுப்புகளின் அனைத்துப் பாடங்களையும் இரு ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். வழக்கமான பள்ளியில் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவை அவர்கள் பராமரித்திருக்க வேண்டும் எனவும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது என்றான் பத்ரி.

    பரவாயில்லையே, இப்படி இரு தடவை வாய்ப்பு கிடைச்சா நாம் முதல் கட்ட தேர்வில் மார்க் குறைஞ்சாலும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதிக்கலாம் இல்லையா என்ற விஷ்ணு, ஆனா மறுபடியும் முதல்ல இருந்தே படிக்கணும் இல்ல, அதான் யோசனையா இருக்கு என்றான் விஷணு.

    யாருக்கு தேவையோ அவர்கள் 2வது முறை பொதுத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது நல்ல ஐடியாதான் எனக்கூறிய படியே மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.

    • முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவ மேற்படிப்பிற்கான வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

    கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • வயல்வெளிக்கு சிறுமியை கொண்டு சென்று அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கும், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 9 பேர் அடங்கிய கும்பல் கடத்தியது. அருகிலிருந்த வயல்வெளிக்கு சிறுமியை கொண்டு சென்று அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    அடுத்த நாள் பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. இருப்பினும் மாணவிக்கு வியாழக்கிழமை தேர்வு நடைபெறவிருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவரை தேர்வெழுத வைத்துள்ளனர்.

    தொடர்ந்து வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குற்றவாளிகள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கும், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.  

    • பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    • பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இதற்கு பள்ளி நிர்வாகம், எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.

    பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குநர் வடிவேல் விசாரணை நடத்தினார்.

    மாணவியிடமும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.
    • தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்களின் வாகனத்தின் மீது மாணவர்கள் சிலர் பட்டாசு வீசியிருக்கின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் சேந்தப்புராயா பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடந்திருக்கிறது. தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.

    அதனை அந்த அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீபுகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தடுத்துள்ளனர். ஆனால் எதிர்காலம் கருதி காப்பியடிக்க முயன்ற மாணவர்களை பற்றி அந்த ஆசிரியர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

    தேர்வு எழுதி விட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்த அவர்கள், தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசினர். ஆசிரியர்களின் வாகனங்களின் மீது விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் தங்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசப்பட்டிருப்பதாக அந்த ஆசிரியர்கள் பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்தனர். அவர் அதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியர்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசியது யார்? என்பதை கண்டு பிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    • எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.

     

    • எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.
    • மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

    மும்பை:

    மராட்டியத்தில் என்ஜினீயரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம், பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது. அந்த கும்பல் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதாகவும், பிரபல கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாகவும் கூறி மாணவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கேட்டனர்.

    இதுகுறித்து மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அமைக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த கும்பல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவுகளை திருடி பிரபல கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக டெல்லியை சேர்ந்த அபிஷேக் ஸ்ரீவட்சாவ், சேத்தன் குமார், அம்பிரிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது.
    • குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓராண்டு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்து, இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் பாடம் நடத்த நடத்த படித்து புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில், பாடங்களை இறுதியில் படித்து கொள்ளலாம் என நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர், தாங்கள் நினைத்தபடியே இறுதியில் ஒட்டுமொத்தமாக படித்து 'பாஸ்' மார்க் வாங்குவதுடன், ஒருசிலர் கணிசமான மதிப்பெண்களை பெறுகிறார்கள். அத்தகைய மனபக்குவம் கொண்ட மாணவர்களாக நீங்கள் இருந்தால், இந்த செய்தி தொகுப்பு உதவியாக இருக்கும். தேர்வு நெருங்கிய இறுதி நேரத்தில், எப்படி பாடங்களை படிப்பது, எப்படி தேர்வுக்கு தயாராகுவது என்பதை அறிந்து கொள்வோம்.

    1. கால அட்டவணை

    பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. என்ன தேர்வு முதலில் வர இருக்கிறது, அந்த தேர்வுக்கான பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை படித்து, தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    2. வினா வகை

    குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிப்பட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.

    3. துறை ரீதியாக தயாராகுதல்

    நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.

    4. அதிக முக்கியத்துவத்தை உணருதல்

    பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    5. உணவும், உறக்கமும்...

    உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்சினை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லெட்டுக்கள் போன்றவற்றை அவ்வப்போது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.

    • 1ம்- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக தேர்வு.
    • 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு.

    1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    1ம்- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக நடத்தப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.

    6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் தேர்வை தொடர்ந்து கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் ஏப்ரல் 22-ம் தேதி முதல் தொடங்கும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி முதல் தொடங்கும். விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணா, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    • குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.
    • அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    பொதுவாகவே குழந்தைகளுக்கு முதலாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அதை முடிப்பதற்கும், அவர்கள் தங்களுடைய பாடங்களை புரிந்து படிப்பதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சில குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு சிரமப்படுவார்கள். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் தான் பொறுப்பு. நாம் எப்போதும் குழந்தைகளை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். உன்னால் முடியும். இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும், இதை செய்தால் நான் உனக்கு பரிசு தருவேன் என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதுமே குழந்தைகளை பாசிட்டிவ் முறைகளை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க கூடாது. அது அவர்கள் மனநிலையை மாற்றி படிப்பின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே முதலில் ஏன் உன்னால் படிக்க முடியவில்லை. ஏன் படிப்பில் உனக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டாம்.

    நாம் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால் அந்த பாடங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் புரிந்து பாடங்களை படிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் வழக்கமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான சில வழிகள்:

    தினசரி அட்டவணையை உருவாக்குவது மற்றும் அதை ஒட்டிக்கொள்வது. அது குழந்தைகளை மிகவும் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் நேரத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    மற்றொரு வழி, படிக்கும் இடத்தை உருவாக்குவது. குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    ஓய்வு எடுப்பதும் முக்கியம்- குழந்தைகள் பல மணிநேரம் படிப்பதை விட, மூளைக்கு ஓய்வு அளிக்க இடையிடையே சிறிய இடைவெளிகளை எடுக்க வேண்டும். அவர்களின் தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்த பிறகு அல்லது அவர்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றிய பிறகு, குழந்தைகளுக்கு பரிசு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊக்கத்துடன் இருக்க உதவும்.

    குழந்தைகள் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும் - அது பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆசிரியரியர்களிடம் இருந்து தயங்காமல் உதவியை கேட்டு பெறுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இறுதியாக, குழந்தைகள் பாடங்களையோ அல்லது வீட்டுபாடங்களையோ ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும்- ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், குழந்தைகள் அதை கடைசி நிமிடம் வரை ஒத்திவைப்பதற்கு பதிலாக உடனடியாக அதை செய்ய அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    இந்த படிகள் பிள்ளைகளின் படிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவும், அது அவர்களின் கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

    பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு நேர்மறையான படிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுவதில் நீங்கள் முக்கிய பங்குவகிக்கிறீர்கள்.

    முதலில், உங்கள் படிப்பில் (நீங்கள் இன்னும் பள்ளியில் இருந்தால்) அல்லது வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியம். குழந்தைகள் உதாரணம் மூலம் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள், எனவே கற்றல் என்பது அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்குக் உணர்த்துவது முக்கியம்.

    இரண்டாவதாக, உங்கள் வீட்டில் கற்க ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை அறையின் அமைதியான மூலையாகவோ அல்லது ஒரு தனி அறையாகவோ இருக்கலாம். கவனச்சிதறல்கள் இல்லாத மற்றும் உங்கள் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய பகுதியாக இது இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக, உங்கள் பிள்ளைக்கு ஒரு வழக்கமான படிப்பு அட்டவணையை உருவாக்க உதவுங்கள். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும்.

    அடுத்து, உங்கள் பிள்ளையின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருங்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் சிரமப்பட்டால் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உதவுங்கள். குழந்தைகள் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக உணரும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள், எனவே அவர்களின் படிப்பு முழுவதும் உங்கள் ஊக்கத்தை அவர்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இறுதியாக, ஏராளமான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளியில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறனை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

    ×