search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exams"

    • குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.
    • அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    பொதுவாகவே குழந்தைகளுக்கு முதலாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அதை முடிப்பதற்கும், அவர்கள் தங்களுடைய பாடங்களை புரிந்து படிப்பதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சில குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு சிரமப்படுவார்கள். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் தான் பொறுப்பு. நாம் எப்போதும் குழந்தைகளை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். உன்னால் முடியும். இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும், இதை செய்தால் நான் உனக்கு பரிசு தருவேன் என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதுமே குழந்தைகளை பாசிட்டிவ் முறைகளை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க கூடாது. அது அவர்கள் மனநிலையை மாற்றி படிப்பின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே முதலில் ஏன் உன்னால் படிக்க முடியவில்லை. ஏன் படிப்பில் உனக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டாம்.

    நாம் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால் அந்த பாடங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் புரிந்து பாடங்களை படிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் வழக்கமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான சில வழிகள்:

    தினசரி அட்டவணையை உருவாக்குவது மற்றும் அதை ஒட்டிக்கொள்வது. அது குழந்தைகளை மிகவும் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் நேரத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    மற்றொரு வழி, படிக்கும் இடத்தை உருவாக்குவது. குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    ஓய்வு எடுப்பதும் முக்கியம்- குழந்தைகள் பல மணிநேரம் படிப்பதை விட, மூளைக்கு ஓய்வு அளிக்க இடையிடையே சிறிய இடைவெளிகளை எடுக்க வேண்டும். அவர்களின் தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்த பிறகு அல்லது அவர்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றிய பிறகு, குழந்தைகளுக்கு பரிசு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊக்கத்துடன் இருக்க உதவும்.

    குழந்தைகள் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும் - அது பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆசிரியரியர்களிடம் இருந்து தயங்காமல் உதவியை கேட்டு பெறுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இறுதியாக, குழந்தைகள் பாடங்களையோ அல்லது வீட்டுபாடங்களையோ ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும்- ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், குழந்தைகள் அதை கடைசி நிமிடம் வரை ஒத்திவைப்பதற்கு பதிலாக உடனடியாக அதை செய்ய அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    இந்த படிகள் பிள்ளைகளின் படிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவும், அது அவர்களின் கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

    பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு நேர்மறையான படிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுவதில் நீங்கள் முக்கிய பங்குவகிக்கிறீர்கள்.

    முதலில், உங்கள் படிப்பில் (நீங்கள் இன்னும் பள்ளியில் இருந்தால்) அல்லது வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியம். குழந்தைகள் உதாரணம் மூலம் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள், எனவே கற்றல் என்பது அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்குக் உணர்த்துவது முக்கியம்.

    இரண்டாவதாக, உங்கள் வீட்டில் கற்க ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை அறையின் அமைதியான மூலையாகவோ அல்லது ஒரு தனி அறையாகவோ இருக்கலாம். கவனச்சிதறல்கள் இல்லாத மற்றும் உங்கள் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய பகுதியாக இது இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக, உங்கள் பிள்ளைக்கு ஒரு வழக்கமான படிப்பு அட்டவணையை உருவாக்க உதவுங்கள். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும்.

    அடுத்து, உங்கள் பிள்ளையின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருங்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் சிரமப்பட்டால் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உதவுங்கள். குழந்தைகள் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக உணரும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள், எனவே அவர்களின் படிப்பு முழுவதும் உங்கள் ஊக்கத்தை அவர்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இறுதியாக, ஏராளமான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளியில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறனை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணா, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    • மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள்கள் இடம் பெற வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
    • மக்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது. இதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் எம்.பி.க்கள் கூறியதாவது:-

    மதுரை, விருதுநகர் எம்.பி.க்கள் மத்திய அரசை குறை சொல்வதில் அக்கறை காட்டுகிறார்கள். மக்களுக்காக எந்த திட்ட ங்களையும் செய்யவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

    அவர் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் வந்து பார்த்துவிட்டு சொல்லட்டும். நாங்கள் என்ன செய்கிறோம்? என்று பார்த்துவிட்டு பேச சொல்லுங்கள். எய்ம்ஸ் விஷயத்தில் மத்திய அரசு பொய் சொன்னால் அதை நாங்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

    மத்திய அரசு மதுரை விமான நிலையத்திற்கு ரூ.540 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார்கள். அதற்கான அறிக்கையை தருமாறு கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. மத்திய அரசு கூறும் பொய்யை நாங்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீருவோம். மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருக்கிறது. இது அப்பட்டமான அநியாயம். நாடு முழுவதும் இந்தி பேசுபவர்கள் 35 சதவீதம் தான் உள்ளனர்.

    ஆனால் இந்தி தெரியாதவர்கள் உள்ள இடங்களையும் இந்த 35 சதவீதம் பேர் நிரப்புகின்றனர். அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள் இல்லாத தால் 1 கோடிக்கும் அதிகமான இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகிறது. எனவே அனைத்து மொழி களிலும் கேள்வித்தாள்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டி, ஜெயராமன், காமாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர்பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    தலைமை யாசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கி பேசுகையில், சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர் பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்" என்றார்.

    இதில் சீர்காழி நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரமன்ற துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி நகரமன்ற உறுப்பினர்கள் நித்யாதேவிபாலமுருகன், ரமாமணி, வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், தி.மு.க நிர்வாகி செந்தில், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் உதவித்தமையாசிரியரும் உடற்கல்வி இயக்குநருமான முரளிதரன் நன்றி கூறினார்.

    • 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
    • 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

    12ம் வகுப்பு தேர்வெழுதிய 210 மாணவர்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 64 மாணவ மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 113 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவன் கதிரவன் 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி கோபிகா 586 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவி சுவாதி மற்றும் சௌமியா ஆகிய இருவரும் 3 ம் இடமும் பிடித்துள்ளனர்.

    இயற்பியலில் 4 பேர், வேதியியலில் ஒருவர், கணிதத்தில் 3 பேர், கணினி அறிவியலில் 3பேர், உயிரியலில் 5பேர், கணக்குப்பதிவியலில் 8 பேர், கணினி பயன்பாட்டியலில் ஒருவர், வணிகக்கணிதத்தில் 4பேர் மற்றும் வணிகவியலில் 7 பேர்ஆகிய 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10ம் வகுப்பு தேர்வெழுதிய 135 மாணவ மாணவிகளில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 37மாணவ மாணவிகளும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பள்ளி அளவில் மாணவி யஷீதா தஷ்னீம் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி வைஷ்ணவி 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி மதுமிதா 485 மதிப்பெண்கள்பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    கணிதத்தில் 6 பேர், அறிவியலில் 7 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

    10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி மற்றும் பொருளாளர்ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர்சிவப்பிரியா மாதேஸ்வரன்மற்றும் முதல்வர்அனிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். #SchoolEducationDepartment #ExamsChanged #ParliamentaryElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.



    பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும்  தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  #SchoolEducationDepartment #ExamsChanged

    கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19, 20ஆம் தேதிகளில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்பால் அந்த மாவட்டங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டன.

    இந்நிலையில், புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 18, 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    சிதம்பரம்:

    கஜா புயல் கடந்த 16-ம் தேதி வேதாரண்யம், நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அன்று நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் இன்று அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    சென்னை தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege
    சென்னை:

    கஜா புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயல் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



    ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege

    ×