என் மலர்
நீங்கள் தேடியது "Neet PG Exam"
- இந்த முறை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் கணினி முறையில் தேர்வு எழுதினர்.
- எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் ஆக உள்ளது.
முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுகலை படிப்புகளில் சேர முடியும்.
இந்த முறை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் கணினி முறையில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியம் இன்று இந்த தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, https://natboard.edu.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
800 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுக்கான கட் ஆப் ஆக பொதுப் பிரிவு / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 50 பர்சண்டைல் (276), எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் (235), பொது மாற்றுத் திறனாளிகளுக்கு 45 பர்சண்டைல் (255) ஆக உள்ளது.
- முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.
- கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பிற்கான வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் சலுகை அறிவிப்பு.
- நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
"நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் தங்களின் விருப்பங்களை திருத்த அனுமதி வழங்கப்படும்."
மேலும், "முதுநிலை கலந்தாய்வுக்கான 3-வது சுற்றுக்கான புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வு குழு வலைதளத்தில் வெளியிடப்படும்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
- மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது.
தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்?
தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் நீட் தேர்வு என்று நாங்கள் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது.
மருத்துவராகும் கனவுடன் புறப்படும் ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழுயில் தள்ளும் நீட் அநிநீக்கு, மத்திய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.
இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






