என் மலர்
நீங்கள் தேடியது "முதுகலை நீட் தேர்வு"
- இந்த முறை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் கணினி முறையில் தேர்வு எழுதினர்.
- எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் ஆக உள்ளது.
முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுகலை படிப்புகளில் சேர முடியும்.
இந்த முறை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் கணினி முறையில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியம் இன்று இந்த தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, https://natboard.edu.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
800 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுக்கான கட் ஆப் ஆக பொதுப் பிரிவு / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 50 பர்சண்டைல் (276), எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் (235), பொது மாற்றுத் திறனாளிகளுக்கு 45 பர்சண்டைல் (255) ஆக உள்ளது.
- முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.
- கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பிற்கான வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது
- தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுத உள்ளனர்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.






