என் மலர்
நீங்கள் தேடியது "Neet exam"
- அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
- மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உத்தரபப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது அன் (21) இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நீட் பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன்பு கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், முகமதுவை பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தார். ஆனால் முகமது மறுத்துவிட்டார். இம்தாத் திரும்பி வந்தபோது, அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். முகமதுவை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததால் இம்தாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முகமது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அங்கிருந்து 2 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர். அதில் "அம்மா, அப்பா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது. அதனால்தான் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு நான்தான் பொறுப்பு" என்று முகமது எழுதியுள்ளார்.
அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
- மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.
காந்திநகர்:
குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தராட் போலீஸ் நலையம். இங்கு கடந்த 6-ந்தேதி ஹரேஷ் சவுதாரி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், 'தன்னுடன் பழகி வந்த 18 வயதான பெண், அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேரால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக" புகாரில் கூறி இருந்தார். கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.
இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தச் சென்றபோது, மாணவி கடந்த ஜூன்-24-ந்தேதி இறந்துவிட்ட தகவலும், அதை போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதிச் சடங்கு நடத்திய தகவலும் வெளிவந்தது. மேலும் மாணவியின் தந்தை தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் மாணவியின் மரணம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அந்த மாணவி, கடந்த மே மாதத்தில் தேர்வை எழுதி இருந்தார். நீட் தேர்வு முடிவு வெளியானதில் கொலையான மாணவி நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். மருத்துவ படிப்பில் சேர தயாராகி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே மாணவி, ஹரேசுடன் பழகி, சேர்ந்து வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
மாணவி பழகிய ஆண் நண்பரான ஹரேஷ் சவுதாரி ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி தராட் நகரில் இருந்து பலான்பூருக்கு படிக்க செல்லும்போது, மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி இறக்கிவிடும்போது ஹரேசுடன் பழக்கம் செய்யப்பட்டு உள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியது.
மாணவியிடம் ஹரேஷ் தனக்கு திருமணமான விவரத்தை கூறிவிட்டாரா? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த மே மாதம் ஆமதாபாத் சென்று சேர்ந்து வாழ்வது பற்றி தங்களுக்குள் முடிவு செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அடிக்கடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் அவர்களை ஒரு ஓட்டலில் பார்த்த போலீஸ் குழு, மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்து உள்ளனர். மாணவியின் உறவினர்கள், அதன்பிறகு மாணவியை கண்டித்து உள்ளனர். ஹரேஷ் மற்றொரு வழக்கிற்காக கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஜூன் 21-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த ஹரேஷ், மாணவிக்கு செல்போன் மற்றும் சமூக வலைத்தளத்தில் மெஸேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து மாணவியின் நிலை குறித்து அச்சம் அடைந்த ஹரேஷ், தனது வக்கீல் உதவியுடன் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே மாணவி ஆணவக் கொலை செய்யப்பட்டு, இறுதிச் சடங்கு நடக்கும் செய்தி ஜூன் 25-ந்தேதி அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
கொலை நடப்பதற்கு முன்பு, தாண்டியா கிராமத்தில் சிவராம்பாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவி ஜூன் 24 அன்று பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிவராம்பாய் மற்றும் நரன்படேல் ஆகியோரை கைது செய்து உள்ளனர். நரேன் படேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.
- மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார்.
- கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார்.
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் குமார். இவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார். அக்காவை பார்த்து 2-வது மகள் மதன ஸ்ரீயும் டாக்டருக்கு படிக்க விரும்பினார்.
இதற்காக அவர் நீட் தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானபோது குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 11 .30 மணி அளவில் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மதன ஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீ சார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வால் மாணவிகள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு உள்ள நிலையில் சென்னை கொடுங்கையூரிலும் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
- ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.
- "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
- போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நீட் நுழைவுத் தேர்வுக்காகப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், சில மணி நேர இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (புதன்கிழமை) கவாஹிஷ் தேவ்ராம் நாகரே (16) என்ற மத்தியப் பிரதேச மாணவர், நாக்பூரில் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதேபோல், 17 வயது வைதேகி அனில் உய்கே என்ற மாணவியும் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த தொடர் மரணங்கள், போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
- கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
- நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.
அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், கே.கே நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியைச் சேர்ந்த 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்ததாகவும், இந்த மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து ஜூன் 4-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து 16 பேரும் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்!
- நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தரம், தரம் என்றார்கள்!
நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!
RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
- மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
2025-2026 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியட்டது தேசிய தேர்வு முகமை. தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் "NEET UG 2025 Result" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு வரும் இணைய பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வர்ட் போட்டு சமர்ப்பித்தால், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
- சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை:
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாத்திரி என்ற ஒரு மாணவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வாதிட்டார்.
480 மாணவர்கள் எழுதியதாகவும், 13 மாணவர்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர்.எஸ்.சுந்தரேசன் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுத்து விட்டனர்.
அதே வேளையில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்து உள்ளனர்.
- மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
- 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும்.
சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இன்று வழங்கியது. அதில், நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்தது.
22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
- தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்.!
- விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.!
நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேற்று கூறிய கருத்துக்குப் பிறகு. 'நீட் தேர்வு' மீண்டும் விவாத பொருளாக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் நீட் தேர்வு குறித்து சரியான கருத்தையே கூறி இருக்கிறார். தவறான கருத்தை எதையும் கூறவில்லை. ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அதில் மருத்துவர், பொறியியல், வேளாண்மை, சட்டம் என நான்கு துறைகள் முன்னிலை வகிக்கின்றன.
எனினும், இன்றைய காலகட்டங்களில் விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், வணிகவியல் தொழில் முனைவோர் என உள்நாடு, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அத்துறைகள் மருத்துவம், பொறியியல் துறைகளை விட நிறைவைத் தரக்கூடியதாகவும், அதிகப் பொருளீட்டக் கூடியதாகவும், புகழ் சேர்க்கக்கூடியதாகவும் உள்ளன.
பெரும்பாலான மாணயர்கள் பள்ளிப் பருவத்திலேயே தங்களின் எதிர்காலத்தைச் சரியாகத் திட்டமிட்டு தாங்களே நீர்மானிக்கிறார்கள். பல நேரங்களில் பெற்றோரும். நண்பர்களும், ஆசிரியர்களும் வழிகாட்டிகனாக விளங்குகிறார்கள்.
எந்த மாணவரது வாழ்க்கையிலும் எந்த அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இதுனைரயும் சொல்லும் படியாக இருந்ததில்லை. பள்ளி அல்லது கல்லூரி பாடத் திட்டங்களையும் அந்த துறை நிபுணர்களே தீர்மானிக்கிறார்கள்.
அவ்வப்போது அசரியல் நோக்கங்களோடு அவர்களுக்கு பிடித்தமான தலைவர்களின் வாழ்ககை வாலாறுகளை பள்ளிப் பாடங்களில் திணிப்பதை தவிர அரசியல்வாதிகளுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது!
எனினும் அண்மைக் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு உருவான வாய்ப்புகளின் அடிப்படையில் "மத்திய அரசின் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவளர உருவாக்க வேண்டும்"என்ற உலக அளவிலான இலக்கை அடைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு தாராளம் காட்டியது.
அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் அரசியல், பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் புதிய புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினர். தமிழகத்தில் மிக மிக அதிகம்!!
தமிழகத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட பல மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வசதிகள் இல்லாமலேயே தேசிய மருத்துவ கல்விக் கழகத்தின் நிபந்தனைகளை மீறி மாட்டுக்கொட்டைகளுக்கு குறைவான வசதிகள் கொண்ட கட்டிடங்களில் மருத்துவக் கல்லூரிகள் நடத்த அரசியல் பலத்தோடு அனுமதி பெற்றுக் கொண்டார்கள்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சேர பெரும் தொகை மட்டுமே அடிப்படை அம்சமாக இருந்தது. தமிழக அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் கூக்குரலிடுவதைப் போல கிராமப்புற, நகர்ப்புற, எழை, எளிய மாவாவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியின் வாசல்களை எட்டிப் பார்க்க முடியாத நிலை இருந்தது.
ஆனால் 50 சதவிகிதம் பெற்றிருந்தாலும் பணப்பெட்டியுடன் சென்றவர்களும், வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியின் பிள்ளைகளும் மருத்துவர்கள் ஆக முடிந்தது.
இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் எண்ணிக்கை அடிப்படையில் நிறைவேறியது; ஆனால் தரமான கல்வியைக் கொடுக்க முடியாத நிலை குறித்து அனைத்து தளங்களிலும் பேசுபொருளாகியது எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அனைத்திற்கும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தரம் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதற்கு ஏற்ப உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 'தேசிய அளவில்' மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தி அதன் பிறகு அகில இந்திய அளவில் தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. பல மாநிலங்கள் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிகமாக கொண்ட தமிழ்நாடு அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டு.2017க்கு பிறகு தமிழகம் 'நீட் தேர்வை' அமலாக்கியது.
இந்த 7 வருடங்களில் ஆயிரக்கணக்கான கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றுத் தரத்தின் அடிப்படையில் எவ்வித நன்கொடையும் இன்றி மருத்துவராக முடிகிறது. ஆட்டோ டிரைவர், வேன் டிரைவர், கூலித் தொழிலாளி பிள்ளைகளும் மருத்துவராக சாதனை படைக்கிறார்கள் என்ற நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய அரசியல் சாசனம் வகுத்துத் தந்துள்ள உண்மையான 'சமத்துவம் சம உரிமை அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் சம வாய்ப்பு உரிமை நீட் தேர்வுக்கு பின்னர்தான் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் "நீட் தேர்வு' இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு திறமையின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குகிறது. அதன் அடிப்படையில் நாவரிசைப்படுத்துவது முழுக்க முழுக்க வெளிப்படையானதாகவே இருக்கிறது.
கடந்த காலங்களில் தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் முறையை கடைப்பிடிக்கக்கூடிய மாணவர்கள் தமிழகத்தைத் தாண்டி பிற மாநில மருத்துவக கல்லூரிகளிலும் இடம் பிடித்து விடுகிறார்கள்.
அதுவும் குறிப்பாக முதுநிலை வகுப்புகளில் தமிழக மாணவர்கள் பலரும் பிற மாநிலங்களில் பெரும் பங்கு வகித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு விளைந்துள்ள இந்த மாற்றங்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாத பிற்போக்கு அரசியல்வாதிகள் மிக மிகக் குறுகிய கண்ளேமாட்டத்துடன் திட் தேர்வு குறித்து தவறான எதிர் பிரச்சாரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீட்டை ஒழிக்க வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்கள் ஆனால் அந்த நீட் ஒழிப்பு ரகசியத்தை வெளியே சொல்லாமலேயே தமிழக மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் சவாரி செய்து வருகிறார்கள்.
நீட் தேர்வு ஒழிப்பு குறித்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் தவறான வாக்குறுநியாலேயே மாணவச் செல்வங்கள் நங்களின் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் நீட் தேர்வு குறித்து உண்மையைப் பேசி இருந்தால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்து இருக்காது.
எவர் விட்டு பிள்ளையோ அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை அன்றைய தினம் அனுதாப செய்திகளையும் பத்து லட்சம் 'பணமுடிப்புகளையும் கொடுக்கிறார்கள். ஓட்டுக்களை அள்ளி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்கிறார்கள். இந்த அநியாயம் நீண்டகாலம் நீடிக்காது, நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
இன்றைய நவீன உலகில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு +2 தேர்வில் வெற்றி பெறும் 10 லட்சம் மாணவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உன்ன 10,000 மருத்துவ இடங்களில் அனைவரும் வாய்ப்பை பெற இயலாது என்பது எதார்த்தம்.
எனவே மாணவச் செல்வங்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் முன்னேறிச் செல்ல வழி காட்ட வேண்டியது ஒவ்வொரு சமூக பற்றாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். அதை விட்டு நீட்டை ஒழிப்பது என மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் எனக் கருத வேண்டும் அந்த வகையில் நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள்!
தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்.! விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
- அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை விஜய் அவர்களே.
நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.
கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை.
உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்…
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






