என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு தற்கொலை"

    • ​​அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
    • மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    உத்தரபப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது அன் (21) இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    நீட் பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன்பு கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், முகமதுவை பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தார். ஆனால் முகமது மறுத்துவிட்டார். இம்தாத் திரும்பி வந்தபோது, அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். முகமதுவை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததால் இம்தாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முகமது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    அங்கிருந்து 2 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர். அதில் "அம்மா, அப்பா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது. அதனால்தான் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு நான்தான் பொறுப்பு" என்று முகமது எழுதியுள்ளார்.

    அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    தேசிய தேர்வு முகாம் மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது.

    தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுவையில் காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி, வில்லியனூர் ஆச்சார்யா, தேங்காய்திட்டு ஆச்சார்யா. முத்தியால்பேட் வாசவி, ஊசுடு பாரத் வித்யாஷ்ரம், குளூனி சி.பி.எஸ்.இ. விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் ஆகிய 8 மையங்களில் நீட் தேர்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

    புதுவையில் 5,758 மாணவ-மாணவிகள் எழுத தயாராகி கொண்டிருந்தனர். தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத மாணவர்கள் தயராகினர்.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயந்து புதுவையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    புதுவை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோ தெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    துரைராஜ் தற்போது பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார். பரிமளம் மகன் ஹேமச்சந்திரன் (வயது18) மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். ஹேமசந்திரன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    இன்று மதியம் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் ஹேமசந்திரன் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பரிமளம் கதறி அழுதார். அவரது கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஹேமச்சந்திரன் கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். இதில் குறைந்த அளவிலான மதிப்பெண் பெற்றார். இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று இன்று நீட் தேர்வுக்கு ஆர்வமாக படித்து வந்தார்.இன்று தேர்வு எழுதவும் தயாராகி வந்தார்.

    இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×